Wednesday, December 28, 2011

என் உயிர் காதலிக்கு

மான் போல் விழிகள் ரெண்டு
தகதகக்கும் உடலும் கொண்டு
மேவி வரும் காற்றினிலே
தாவி வரும் வெள்ளி நிலவே
நழுவிய உன் பார்வையிலே
என் மனம் இங்கு துடிக்குது
பூவும் உன் முகம் கண்டு
தலைத் துவண்டோடுது
தித்திக்கும் தேன் துளி தான் - உன்
அகரங்கள் சுரந்திடுமோ
பூ மொய்க்கும் கருவண்டு - உன்
கரு விழிகள் ஆகிடுமோ
மோன நிலையில் என்னுள்ளே
மோகித்திருகின்றேன்
யாசகம் கேட்க்கும் எனை
யாபித்துக் கொள்வாயடி.
சட்டென பார்க்கும் பார்வை - எனை
சக்கையாய் பிழியுதடி
மெத்தென உன் கால்கள் தொட்டு
மொத்த உயிரும் லயிக்குதடி
காட்டருவி போல் தவழும் - உன்
கட்டுக்குள் அடங்கிய கூந்தல்
வீணை போல் அதை மீட்ட
தேடி வரும் என் விரல் நுனிகள்
உன் பாதையில் நான் வரவே
விலகிச் செல்லும் உன் பாதங்கள்
வேண்டுமடி அது எனக்கு
ஏங்கித் தவிக்கும் என் மனக் கண்கள்.

Saturday, December 17, 2011

அன்பே

சிக்கலாகி விடுகிறது
சில நேரங்களில்
நீ
ஒற்றை வார்த்தையில்
பதில் அளிக்கும் பொழுது

குட்டையில் தேங்கிய
தண்ணிரில்
பாசியாய் படிந்த
உன் நினைவுகள்
இப்போது
தண்ணீரும் பாசியும்
வேறுபாடில்லாமல்

நாம் பேசிய
வார்த்தைகள்
அனைத்தையும்
தூசுத் தட்டி
பார்க்கிறேன்

நாசிக்குள் காற்றாய்
புகுந்து
என் உயிருக்குள்
கலந்தவளே ..
காட்சிப் பிழையாய்
இருந்திடாமல்
என் காதலை
ஏற்கத் துணிவாயடி

மனதினுள் புள்ளியிட்டாய்
அதை
கோலமாய் மாற்றிட
இயலாதோ

வண்ணத்துப் பூச்சியாய்
வடிவெடுத்து
என் நெஞ்சுக் கூட்டுக்குள்
புகுந்தவளே
என் மனமும்
காய்ந்திடா மலர்தானடி
அதில் காலம்
முழுதும் இருப்பாயடி

உயிரே நீ என்னுள்ளே

எனக்குள்ளே ஒளிந்திருக்கும்
உறைந்த ரத்தமாய் நீ....
என் உடம்பில் ஊறும்
உஷ்ணத்தீயால்
உன்னை ஆர்பரிக்கிறேன்
உன் மூச்சுக் காற்றை
நான் வாங்கிக் கொண்டேன்
கண்மணியே...
ஒவ்வொரு செல்லிலும் புகுந்து
உன் உயிரை நான் காத்திடுவேன்
எண்ணங்களை மட்டுமா
பரிமாறிக்கொண்டோம்
உயிரையும் தானே
அதனால்
கலங்காதிரு ஆருயிரே
நீ என்றென்றும்
என்னுள்ளே .............

Thursday, December 15, 2011

சிங்காரச் சென்னை

ஊரு நல்ல ஊரு
அதுக்கு சென்னைநு பேரு
நூறு ரூபா நோட்ட சுருட்டி
காது குடையும் ஊரு

வீட்டுக்கொரு காரிருக்கு - இங்க
காருக்குக் காரு துணையிருக்கு
வீடே இல்லாம ஆளிருக்கு - அதை
ஏன் கேட்கவும் ஆள் இருக்கு .

சாதி இருக்கு சங்கம் இருக்கு
ஊர சுத்தி சாக்கட இருக்கு - அதுல
ஊறி போன மனுஷனுக்கு
உறவுக்காரன் மறந்திருக்கு

நீளமான கடல் இருக்கு
கடலோரம் பல சிலை இருக்கு
பல தலைவர்களின் சமாதிகள்
பார்க்கும் சுற்றுலா தளமாயிருக்கு

கோயிலிருக்கு குளமிருக்கு - சில
குளத்துல தண்ணி வத்திருக்கு
ஆடி மாசம் வந்து போனால்
கூழ் ஊத்த ஆள் இருக்கு

பள பளக்கும் ரோடிருக்கு - அதுல
பயணம் செய்ய சிலருக்குத் தான்
கொடுப்பினை இருக்கு

ரோடா? கல் மேடா?
அழும் வாகனத்தை கேட்டா
கொடுக்கும் கணக்கு

தெருவுக்கு தெரு விளக்கிருக்கு
அதுல ஒன்னு ரெண்டு கண் சிமிட்டும்
சூரியனும் போயே போச்சுன்னு
சில விளக்குகள் தூங்க செய்யும்

மந்திரி வீடா, மந்திரி மகன் வீடா
அங்க மட்டும் விளக்கெரியும் - ஆனா
மாசமாசம் வரியா கட்டும்
மனுஷன் வயித்துல தான் விளக்கெரியும்

ஊருக்குள்ளே மலைகள் போலே
குப்பைகளும் குவிந்திருக்கும்
குப்பைத் தொட்டினு பேரிருக்கும் - அதுவும்
குப்பையோடு குப்பையா கிடக்கும்

நாற்றத்தோடு காற்று வரும் - அது
கொசுக்களையும் அழைத்துவரும்
கொசுக்களும் பறந்து வந்து
இலவசமா நோய்கள் தரும்

வீதிக்கொரு கோயில் கட்டு
அது அந்த காலம்
வீதிக்கொரு சாராயக் கடை
இது இந்த காலம்

வீதியோரம் மரம் நடுங்கள்
அது அந்தக் காலம்
மரமில்லாமல் தண்ணீர் பாய்ச்சுவோம்
இது இந்த காலம்

சுவரெல்லாம் சுவரொட்டிகள் - அதை
ரசிப்பவங்க நாங்க ..
மறைமுகமா கால்நடைக்கு
உணவு அளிப்பவங்க..

ஆயிரம் குறைகள் இருந்திடினும்
இது எங்க ஊரு தான்
எல்லாம் ஒன்றாய் கூடி
வாழும் சிங்கார சென்னை தான்..

Tuesday, December 13, 2011

ஒரு கைம்பெண்ணின் சலனம்

சலனமற்று கிடந்த மனதில்
சல்லடையாய் உன் நினைவுகள்

பாரத்தை இறக்கி வைக்க
பார்கின்ற என் மனது

ஒப்பனையற்ற வார்த்தைகளால்
ஓர் வரியில் சொல்லிவிட்டாய்

கட்டுக் கடங்காமல் வருகிறது
கண்ணீர் மழை துளியாய்

மறுப்பு சொல்ல வழியில்லை
வெறுப்புக் காட்ட முடியவில்லை

கருத்தைச் சொல்லி விலகி இருந்தும்
எதிர்த்து நிற்கும் ஆசைகள்

மனத்தால் எண்ணம் ஒன்றினும்
மனிதனுக்கென்று ஒரு ஞாயம் உண்டு

தீயும் சுடும் என் தெரிந்தப் பின்னும்
தீயில் குளிப்பது நல்லதன்று

மனமெனும் குரங்கு வந்து போகும் -அதை
அடக்கி வைத்தல் நல்லதின்று

பேச வேண்டாம், பழக வேண்டாம்
ரசிக்க வேண்டாம் - ஆனாலும்
மறக்கவும் வேண்டாம்

உன் நினைவலைகள்
உரசிக் கொண்டு போகட்டும்

சலமற்று இருப்பது போல்
என் மனமே நடிக்கட்டும்

உன் மேனி தனை தொடும் காற்றில்
என் வாசனை தான் வந்திடுமே-அதில்
என் ஸ்பரிசத்தை உணர்ந்துவிடு
கனவினிலே என்னை தோடு .........


Thursday, December 1, 2011

மங்காத்தா - எனது பார்வையில்

மங்காத்தா - எனது பார்வையில்..

500 கோடி அம்மோ! நமக்கே கேட்க்கும் போதோ படிக்கும் போதோ உடல் சிலிர்கிறது அல்லவா ? அவளவும் யு எஸ் டாலர்ஸ்....சர்வசாதரணமாக மெட்ரோ நகரங்கரங்களில் சூதாட்டம் என்ற பெயரில் உலா வருகிறது. அதை குறுக்கு வழியில் அபேஸ் செய்ய ஒரு கூட்டம், அதை கண்டிபிடிக்க போலீஸ் கூட்டம் ....இது தான் கதை.....ஆங் ....கடைசியில் வரும் ட்விஸ்ட் ம்ம். அதுவும் பரவாஇல்லை....எதிர்பார்க்காதது தான். சரி யார் நடிச்சிருக்காங்கநு பார்ப்போமா ?

அஜித் குமார் (தலை என்று செல்லமாக அழைக்கபடுபவர் , இதிலும் அப்படியே..)

அர்ஜுன் (ஆக்ஷன் கிங் ...இந்த படத்திலும் அங்ஙனமே அழைக்கபடுகிறார்)

வைபவ், ஜெயப்ரகாஷ், மஹத், பிரேம்ஜி அமரன் , லக்ஷ்மி ராய் த்ரிஷா, அண்ட்ரியா, அஞ்சலி அரவிந்த் ஆகாஷ் ....மற்றும் பலர்.

இயக்கம் : வெங்கட் பிரபு

தயாரிப்பு: தயாநிதி அழகிரி

இசை : யுவன் ஷங்கர் ராஜா

கதை நு ஒன்னும் இல்லங்க ...கிரிக்கெட் சூதாட்டம் மையமா எடுத்திருக்க படம்..... ஐ பி எல் மேட்ச் இன் நடக்கும் போது நடக்கும் சூதாட்டமே கதை.. அஜித் ஆறு மாதங்கள் சஸ்பெண்டான போலீஸ் ஆபீசர். அந்த காலகட்டத்தில் த்ரிஷாவை சந்திக்கிறார் ...காதல் வருகிறது...தண்ணி ..தம்மு, குட்டி ...என்று அனைத்து லூட்டிகளும் செய்துக் கொண்டுத் திரிகிறார். அதன் நடுவே சூதாட்டம் மூலமாக 500 கோடி பணம் புழங்கபோவதாகவும், அது ஆறுமுகசெட்டியார் (ஜெயப்ரகாஷ்) பொறுப்பில் விடபோவதாக ஒரு தகவல் வர , ஒரு கூட்டணி அதை கொள்ளை அடிக்க உருவாகிறது. ஆறுமுகசெட்டியார் மும்பையில் ஒரு முக்கிய சூதாட்டப் புள்ளி. அவருக்கு கீழே சுமந்த்(வைபவ்), பைசல் (அரவிந்த் ஆகாஷ்) இன்னும் சிலர் வேலை செய்கிறார்கள். மாத மாதம் மாமூல் வாங்கி கொண்டு அவர்கள் தொழிலை ஆதரிக்கும் எஸ் ஐ கணேஷ் (அஷ்வின்) . பிரேம்ஜி யும் அவன் நண்பனும் அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஷ்வின் கூட்டணியில் அந்தப் பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் இடுகிறார்கள். அதற்கு முன்னரே இருவர் அந்த பணத்தை அபேஸ் செய்ய முயற்சியும் நடக்கிறது. அதில் ஒருவர் அஜித், அந்த மற்றொருவர் யார் என்பது சஸ்பென்ஸ்.

வைபவ் கும்பல் திட்டமிடுவது தெரியவர அஜித் அவர்களுடன் கூட்டு சேர்கிறார். கொள்ளை அடித்து அவர்களை போட்டு தள்ள யோசிக்கிறார். கொள்ளை அடிக்கும் விதம் புதுசு என்றாலும் , லாஜிக்கும் க்ராபிக்ஸும் பயங்கரமாக விளையாடுகிறது

கடைசியில் வைபவ் கூட்டணி முழுதும் சாகிறது...தலை உள் பட.....பின்பு தலை உயிரோடு வருகிறார்...அதனுடன் அவர் கூட்டணி யார் என்பதும் தான் ட்விஸ்ட்.

ஒன்றரை மணி நேரத்த்தில் முடிக்க வேண்டிய படம் . அனால் முடிக்கமுடியாமல் திணறுகிறது... கதை லிக்ன்க் வேண்டும் என்பதற்காகவே கதாநாயகிகளை போட்டிருகிறார்கள் . லக்ஷ்மி ராய் கொஞ்சம் ஓவர் எக்ஸ்போஷுர். அவரை தவிர மற்ற கதாநாயகிகள் சும்மா பாட்டுக்காகவும் , பணயக் கைதியாகவும் இருக்க வே இதில் இருகின்றனர் ...

படம் முழுக்க அஜித் அஜித் அஜித் ... நிறைய ஹாலி வுட் நடிகர்களின் பாடி லாங்குவேஜ் ஜை காப்பி அடித்திருக்கிறார் அஜித் .தலை ரசிகர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் " ஆஹா " என ரசிக்கும் அளவுக்கு இருக்கிறார்.

நிறைய ஹாலி வுட் படங்களை தழுவி இருக்கிறது .

பணம் வந்தால் பற்றும் (பத்தும்) பறந்து (மறந்து ) போகும் என்பது பழமொழி . அந்த பத்தில் ஒன்று மனசாட்சியும் என்பது இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

சரி... பொழுதுப் போக்கிற்காக ஒரு முறை தான் மங்காத்தா விளையாடி பாருங்களேன் ... சும்மா ஒரு ஜாலி க்கு ....


மயக்கம் என்ன - எனது பார்வையில்.

செல்வராகவன் படைப்பில் வெளி வந்திருக்கும் படம்... தனுஷ், ரிச்சா கங்கோபத்யை மற்றும் தனுஷ் நண்பர்களாக சிலர்... இசை -ஜி வி பிரகாஷ், ஒளிபதிவு - ராம்ஜி, தயாரிப்பு - ஜெமினி க்ரூப்ஸ்.

கதை என்னவென்றால் கார்த்திக் சுவாமிநாதன் (தனுஷ்) ஒரு ப்ரீ லான்ஸ் போட்டோகிராபர். நல்ல சான்ஸ் தேடி அலையும் பிள்ளை. அம்மா அப்பா கிடையாது.... தங்கை ஒருத்தி இவர்களுடன் நண்பர்கள் ...நம் செல்வராகவன் படத்தில் நண்பர்கள் இன்றி எது ? சரி கதைக்கு வருகிறேன் . கார்த்திக்கோட(தனுஷ்) நண்பன் தன் பெண் தோழியை அறிமுகம் படுத்தி வைக்கிறார். எடுத்தவுடன் மோதல் ஆகிறது இருவருக்கும்...அது காதலின் அறிகுறி என்று தெரியாமல்... பின்பு தெரியவருகிறது. அதற்கு நடுவில் கார்த்திக் ஒரு பெரிய போடோக்ராபரிடம் சான்ஸ் கேட்டு செல்கிறார்.. நிராகரிக்க படுகிறார். " 'அட்லீஸ்ட்' உங்க அச்சிடன்ட் ஆகா சான்ஸ் கிடைக்குமா" என்றும் கெஞ்சி பார்கிறார். "அட்லீஸ்ட்" என்று அந்த பெரிய போடோக்ராபர் நக்கலாக சிரித்து ஏளனம் போது நமக்கும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. பாவமான தனுஷ் முகத்தை பல படத்தில் பார்த்து விட்டோம். இதிலும் இதிலும் நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது. தான் எடுக்கும் போடோஸ் லாயக்கில்லை என்று பல இடங்களில் நிராகரிக்கு பட்டு ஒரு சான்ஸ் கிடைத்து போடோஸ் எடுத்து தருகிறார். அனைத்தும் புகைப்படமும் சரி இல்லை என்று நிராகரிக்கப் பட்டு மனம் நொந்து குடிக்கிறார்.

ஹீரோயின் யாமினி (ரிச்சா) வேண்டுமென்றே கார்த்திக்கிடம் நெருங்கி பழகுகிறாள். கார்த்திக்கும் அவளை பிடிக்கிறது. ஆனால் நண்பனுக்கு துரோகம் செய்ய மனம் மறுக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த எல்லையை மீறும் சூழ்நிலை. நண்பர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர். அதற்கு நடுவே கார்த்திக் எடுத்த புகைப் படம் நேஷனல் காக்ராபிக் புக் கில் வேறொரு நபரின் பெயரில் வெளியாகி இருப்பதாய் கண்டு கோபப் படுகிறார். சென்று வாதிடுகிறார். முடியவில்லை. திருமணம் முடிந்து வாழ்கையை ஓட்ட... செய்தி தாளில் அந்த நபருக்கு விருது வழங்கப்பட்டதை கண்டு மாடியிலிருந்து விழுகிறார். கொஞ்சம் மூளை பாதிப்படைகிறது. தோற்று விட்டோம், ஒதுக்க படுகிறோம் போன்ற மன ஆழுத்தம் அவனை வாட்டுகிறது. எல்லாவற்றையும் தாங்கி கார்த்திக் ஒரு வழிக்கு கொண்டு வருகிறாள் நம் ஹீரோயின். கடைசியில் இன்டர்நேஷனல் வைல்ட் போடோக்ராபிக் அவார்ட் வாங்குகிறார்.

" I am thankful to all those who said 'no' because of them, I did it myself "

ஐன்ஸ்டீன் வாக்கு படி தன் மனைவியால் முன்னுக்கு வந்தாலும் 'வேண்டாம்', 'நன்றாக இல்லை ' என்று நிராகரிக்க பட்டாலும் அவன் திறமையை வெளி கொண்டு வந்து சாதிக்கிறான்.இது தான் கதை.

கதையின் பின் பாதி ஒரு ஆங்கிலபடத்தின் சாயல்லில் இருக்கிறது.

கார்த்திக், ஒரு மத்தியதர நபர். அவருக்கெப்படி அவ்வளவு விலை உயர்ந்த

டெலிபோட்டோ லென்ஸ் எப்படி வாங்கினார் ?..... நண்பர்கள் அவ்வளவு க்லோசாக இருக்கும் பட்சத்தில் எப்படி துரோகம் செய்ய மனம் வருகிறது.?...ஜீனியஸ் என்று தனுஷ் எதற்கு அழைக்கப் படுகிறார்?...... பெங்குயன் போட்டோ எடுக்க அண்டார்டிக்கா சென்றாரா என்ன... ? இப்படி பல கேள்விகள் மனதில் உதிக்கிறது...

அங்கே அங்கே பிச்சி பிச்சி எடுத்து ஓட்ட வைத்து நேஷனல் ஆவார்ட் வாங்கிய தனுஷ் தன்னை நிக்கவைப்பார் என்ற தைரியத்தில் படம் எடுத்திருக்கிறார் அவர் அண்ணன்.

"மயக்கம் என்ன" ..... தயக்கமாய் தான் இருக்கிறது பாருங்கள் என்று சொல்வதற்கு.... ஒரு வேண்டுகோள் ஆண் நண்பர்கள் தன் பெண் தோழியை சக நண்பனுக்கு அறிமுகப் படுத்தவேண்டாம்


Saturday, September 17, 2011

மகளே மகிழ்ச்சி

மகளே
மகிழ்ச்சி

தொலைவிலிருந்து
தொலைபேசியில்
விவரம் அறிந்தேன்

காலத்தின் கோலம்
உன்னையும் என்னையும்
பிரித்து வைத்திருகிறது
உச்சி முகர்ந்து
தனியே அமர்த்தி
உற்றார் உறவினருக்கு
அழைப்பு விடுத்து
ஆசீர்வதிக்க
நான் பக்கத்தில் இல்லை

இப்போது நானும்
உறவினரை வந்து
எட்டிப் பார்த்து
ஓடிவிடும்
சூழ்நிலையில் ..

வரும் காலம்
ஒளிமயமாய் இருக்க
நிகழ் கால
சந்தோஷங்களை
தொலைத்துக் கொண்டிருக்கிறோம்

கண்மணியே
உனக்கொரு அறிவுரை

நீ உடலளவில் மட்டுமே
பக்குவமடைந்திருகிறாய்
மனதளவில் இல்லை
மெய் சிலிர்க்கும் பேச்சுகளும்
புண் முறுவல் வார்த்தைகளும்
அறுவருக்கும் தீண்டல்களும்
அன்பான கெஞ்சல்களும்
அம்புப் போல் தாக்கும்
அது அனைத்தும்
முகச் சாயங்களே
அன்றி உண்மை இல்லை

உன்னை முதலில் நேசி
நீயே உனக்குத் தோழி

புத்தகம் வாசிக்க
கற்றுக் கொள்

நெஞ்சில் உரமும்
கண்களில் கனலும்
இருக்கட்டும்

வாழ்வில் நெறியும்
வார்த்தையில் கடுமை
இருக்கட்டும்

மஞ்சள் நீராட்ட
ஆசை தான்
வேறு வழி இல்லை
என் கண்ணீரால்
உன் மனதை
நீராட்டுகிறேன் .

மங்காத்தா - எனது பார்வையில்

500 கோடி அம்மோ! நமக்கே கேட்க்கும் போதோ படிக்கும் போதோ உடல் சிலிர்கிறது அல்லவா ? அவளவும் யு எஸ் டாலர்ஸ்....சர்வசாதரணமாக மெட்ரோ நகரங்கரங்களில் சூதாட்டம் என்ற பெயரில் உலா வருகிறது. அதை குறுக்கு வழியில் அபேஸ் செய்ய ஒரு கூட்டம், அதை கண்டிபிடிக்க போலீஸ் கூட்டம் ....இது தான் கதை.....ஆங் ....கடைசியில் வரும் ட்விஸ்ட் ம்ம். அதுவும் பரவாஇல்லை....எதிர்பார்க்காதது தான். சரி யார் நடிச்சிருக்காங்கநு பார்ப்போமா ?

அஜித் குமார் (தலை என்று செல்லமாக அழைக்கபடுபவர் , இதிலும் அப்படியே..)

அர்ஜுன் (ஆக்ஷன் கிங் ...இந்த படத்திலும் அங்ஙனமே அழைக்கபடுகிறார்)

வைபவ், ஜெயப்ரகாஷ், மஹத், பிரேம்ஜி அமரன் , லக்ஷ்மி ராய் த்ரிஷா, அண்ட்ரியா, அஞ்சலி அரவிந்த் ஆகாஷ் ....மற்றும் பலர்.

இயக்கம் : வெங்கட் பிரபு

தயாரிப்பு: தயாநிதி அழகிரி

இசை : யுவன் ஷங்கர் ராஜா

கதை நு ஒன்னும் இல்லங்க ...கிரிக்கெட் சூதாட்டம் மையமா எடுத்திருக்க படம்..... ஐ பி எல் மேட்ச் இன் நடக்கும் போது நடக்கும் சூதாட்டமே கதை.. அஜித் ஆறு மாதங்கள் சஸ்பெண்டான போலீஸ் ஆபீசர். அந்த காலகட்டத்தில் த்ரிஷாவை சந்திக்கிறார் ...காதல் வருகிறது...தண்ணி ..தம்மு, குட்டி ...என்று அனைத்து லூட்டிகளும் செய்துக் கொண்டுத் திரிகிறார். அதன் நடுவே சூதாட்டம் மூலமாக 500 கோடி பணம் புழங்கபோவதாகவும், அது ஆறுமுகசெட்டியார் (ஜெயப்ரகாஷ்) பொறுப்பில் விடபோவதாக ஒரு தகவல் வர , ஒரு கூட்டணி அதை கொள்ளை அடிக்க உருவாகிறது. ஆறுமுகசெட்டியார் மும்பையில் ஒரு முக்கிய சூதாட்டப் புள்ளி. அவருக்கு கீழே சுமந்த்(வைபவ்), பைசல் (அரவிந்த் ஆகாஷ்) இன்னும் சிலர் வேலை செய்கிறார்கள். மாத மாதம் மாமூல் வாங்கி கொண்டு அவர்கள் தொழிலை ஆதரிக்கும் எஸ் ஐ கணேஷ் (அஷ்வின்) . பிரேம்ஜி யும் அவன் நண்பனும் அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஷ்வின் கூட்டணியில் அந்தப் பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் இடுகிறார்கள். அதற்கு முன்னரே இருவர் அந்த பணத்தை அபேஸ் செய்ய முயற்சியும் நடக்கிறது. அதில் ஒருவர் அஜித், அந்த மற்றொருவர் யார் என்பது சஸ்பென்ஸ்.

வைபவ் கும்பல் திட்டமிடுவது தெரியவர அஜித் அவர்களுடன் கூட்டு சேர்கிறார். கொள்ளை அடித்து அவர்களை போட்டு தள்ள யோசிக்கிறார். கொள்ளை அடிக்கும் விதம் புதுசு என்றாலும் , லாஜிக்கும் க்ராபிக்ஸும் பயங்கரமாக விளையாடுகிறது

கடைசியில் வைபவ் கூட்டணி முழுதும் சாகிறது...தலை உள் பட.....பின்பு தலை உயிரோடு வருகிறார்...அதனுடன் அவர் கூட்டணி யார் என்பதும் தான் ட்விஸ்ட்.

ஒன்றரை மணி நேரத்த்தில் முடிக்க வேண்டிய படம் . அனால் முடிக்கமுடியாமல் திணறுகிறது... கதை லிக்ன்க் வேண்டும் என்பதற்காகவே கதாநாயகிகளை போட்டிருகிறார்கள் . லக்ஷ்மி ராய் கொஞ்சம் ஓவர் எக்ஸ்போஷுர். அவரை தவிர மற்ற கதாநாயகிகள் சும்மா பாட்டுக்காகவும் , பணயக் கைதியாகவும் இருக்க வே இதில் இருகின்றனர் ...

படம் முழுக்க அஜித் அஜித் அஜித் ... நிறைய ஹாலி வுட் நடிகர்களின் பாடி லாங்குவேஜ் ஜை காப்பி அடித்திருக்கிறார் அஜித் .தலை ரசிகர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் " ஆஹா " என ரசிக்கும் அளவுக்கு இருக்கிறார்.

நிறைய ஹாலி வுட் படங்களை தழுவி இருக்கிறது .

பணம் வந்தால் பற்றும் (பத்தும்) பறந்து (மறந்து ) போகும் என்பது பழமொழி . அந்த பத்தில் ஒன்று மனசாட்சியும் என்பது இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

சரி... பொழுதுப் போக்கிற்காக ஒரு முறை தான் மங்காத்தா விளையாடி பாருங்களேன் ... சும்மா ஒரு ஜாலி க்கு ....


Saturday, July 9, 2011

கண்ணா

கண்ணா என

அழைக்கும் போது

என் கண் முன்னே

தோன்றுகிறாய் .

தென்றலாய் மேனித்

தொடுகிறாய்,

நிலவாய் வந்து

காய்கிறாய்,

திசைத் தெரியாமல்

போகையில்

வழிப்போக்கனாய்

வந்து கை கோர்கிறாய்.

தூசியால் கண்கள்

கலங்கினாலும்

துயர் தீர்க்க ஓடி வரும்

உன் கரங்கள்.

எவரிடம் சொல்ல

உன் பெருமை

எனக்கே எனக்கான

என் கள்வா..

தெய்வத் திருவுருவம்

உன் மேனி

அதை தீண்டலாகாது

பரம்பொருளே

ஆடை திருடும்

கள்வனே - அதன்

அர்த்தம் என்னடா

வாசனே ..

உடம்பு என்பது

ஒன்றும் இல்லை

அதை மூடிவைத்தல்

அர்த்தமில்லை ..

உள்ளொளி எழுப்பு

சடப் பொருளே

அதை உணர்த்தவோ

விளையாடுகிறாய்

கருவன்னனே..

அமுதரச வழியும்

உன் சிரிப்பில்

ஆண்களும் தப்புவதில்லை

அர்ச்சுதனே

உனை அன்பெனும்

மாலையால்

தினம் சூடி

திகட்டும் இன்பம்

பெறவேண்டும்

அற்ப உயிர்

போகுமுன்னே

எனை ஆட்கொண்டுவிடு

என் வாசனே...

Saturday, June 25, 2011

அவன் இவன் - எனது பார்வையில்.

கல்பாத்தி அகோரம் - இன்னொரு படைப்பு. கதைக்கு போவதற்கு முன் ..

இயக்குனர் - பாலா, தயாரிப்பு - கல்பாத்தி அகோரம் க்ரூப்ஸ்.

இசை - யுவன் ஷங்கர் ராஜா, கதை - பாலா, திரைக் கதை - பாலா, வசனம் - எஸ் . ராமகிருஷ்ணன்.

நடிகர்கள் நான் சொல்லவே தேவையில்லை, இருந்தாலும் ஒரு தகவலுக்கு ..

ஜி. எம் . குமார் , விஷால் , ஆர்யா , அம்பிகா, ஜஜனி ஐயர், மது ஷாலினி.

கதை பாலாவிற்கு பிடித்த மதுரை பக்கம் தான். தேனீ யில் எடுக்கப்பட்டது. விஷால் ,ஆர்யா இருவருக்கும் அப்பா ஒன்று , தாய் இரண்டு. அம்பிகாவின் மகன் விஷால். தன் பரம்பரை தொழிலான திருட்டை ஆர்யா நடத்தி வருகிறான், விஷால் தயங்குகிறார். அதனால் ஏற்ப்படும் குடும்ப சண்டைகள். அம்பிகா விஷாலையும் திருட சொல்கிறாள். இது தான் அவர்கள் குடும்ப பின்னணி. ஒரு குடும்பத்தில் ஏற்படும் சண்டையை பக்கத்தில் இருந்து பார்க்கும் ஏற்படும் சுவாரஸ்யம் வருகிறது. கொஞ்சம் வசனங்கள் அப்பட்டமாக உண்மை சண்டையை உருவகப்படுத்துகிறது. அது காதுகளை சில சமயம் கூச வைக்கிறது.

அடுத்து ஜி. எம். குமார் . அவர் ஊர் ஜமிந்தார் . நல்லவர் . வல்லவராக இருந்தவர். குழந்தை மனம் கொண்டவராக சித்தரிக்க படுகிறார். அவரை ஏமாற்றி சொத்துக்கள் முக்கால் வாசி பறிபோகிறது. பிள்ளைகளுக்கு பிள்ளையாய் விஷாலும் ஆர்யாவும் துணை இருகிறார்கள்.

அன்பு காட்டுவதற்கு தன் ரத்தமாக தான் இருக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை, உண்மையான அன்பை பரிமாறிக் கொள்ள எதிர்மாறான இனமாக தான் இருக்கவேண்டுமா என்ன? இல்லை இல்லை அன்பை எவரிடத்திலும் காட்டமுடியும் என்ற அர்த்தத்தை புரியவைக்கிறார் பாலா.

நான் கடவுளில் மனித வதம் பற்றி சொன்னவர், இதில் மிருக வதம் பற்றி சொல்கிறார். ஆங்காங்கே காட்சிகள் விட்டு விட்டு போனது போல் ஒரு திருப்தியின்மையும் இருக்கிறது.

"இது தான்பா கதை" என்று சொல்லும் அளவு கதையில்லை. ஆனால் , வால்ட்டர் வணங்காமுடி (விஷாலின் கதாபாத்திரத்தின் பெயர்) நம்மை வணங்கவைத்துவிட்டார்.

விஷால் - ஹாட்ஸ் ஆப்.

கும்புடறேன் சாமி ஆர்யாவின் பெயர்.... அவர் செய்யும் லூட்டிகளுக்கு உண்மையில் கும்புடு போடா வைக்கிறார்.

இரண்டு ஜோடிகளுக்கு என்ன வேலை என்று கேட்கிறீர்கள ? ' ஜோடி' என்ற வார்த்தையிலே அர்த்தம் புரிந்திருக்கும். டூயட் பாடல்கள் இல்லை . அது ஒரு மன திருப்தி.

இன்னொரு "பிதாமகனா" என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் இதில் இரண்டு மகன்கள்.

ஆனால் இன்னொரு பிதாமகன் சூர்யாவையும் விக்ரமையும் பார்ப்பது போல் ஒரு எண்ணம் ஆங்காங்கே உருவாகிறது.

ஜி எம் குமார் - இத்தனை நாள் எங்கே சார் போனீங்க? அவர் திறமையை இந்த படத்தின் மூலம் வெளிகொண்டுவந்தமைக்கு பாலாவிற்கு நன்றி.

ஜி . எம். சார் கலக்கிடீங்க.

அம்பிகா - கதாநாயகியாய் பார்த்த நமக்கு அழகான இன்னொரு விருந்து கொடுத்துள்ளார். அம்பிகா நடிப்பதை நிறுத்திவிடாதீர்கள்.

ஒரே ஒரு காட்சியில் வந்து போகிறார் சூர்யா . சூர்யா கண்களால் பேசிவிட்டு செல்கிறார்.

விஷால் நவரசங்களை காட்டி அசத்துகிறார்....கண்ணீரையும் வரவைக்கிறார்.

ஒவ்வொரு கலைஞனும் தனக்கு அங்கிகாரம் கிடைக்க எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது . உண்மையான திறமை எப்படி யாவது யார்மூலமாவது வெளி வரும் . அதை சொல்லாமல் சொல்கிறார் பாலா.

ஒவ்வொரு கலைஞனின் திறமையை காணவிரும்புவோருக்கு இந்த படம் ஒரு விருந்து. கதை தேடி செல்வோருக்கு

ரோட்டு கடை இட்லி.

சில ரோட்டு கடை இட்லியும் சூப்பரா இருங்குங்க. சாப்பிட்டு பாருங்க..


Monday, March 14, 2011

பிச்சைகாரனின் ஆறுதல்

இருள் சூழ்ந்திருக்கும் நேரம்
நடைப் பாதையில்
நாய்களோடு நாங்கள்
கொசுக்கள் தாலாட்டுப் பாடும்..
நட்சத்திரங்கள் கண் சிமிட்டும் ..
வாகனம் பறந்துப் போகும் - போகையில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
சிற்றாடையும் பறக்கும் ..

லட்டியை வைத்துக் கொண்டு
லொட்டு லொட்டென்று
தட்டிவரும் கூர்க்கா..
அவருக்கும் ஓர் தைரியம்
எங்கள் துணையில்
அவர் அலைவதில் ..

வீடில்லை வாசலில்லை - அதனால்
வரியில்லை செலவுமில்லை ..
வட்டிலிலே சோறு இருக்கும்
அதுவும் எப்பவும் நிரந்தரம் இல்லை

இப்படி இருப்பதில்
சுகமிருக்கு..
கட்டை சாய்ந்தால்
தூக்கிப் போட
குப்பை லாரி இருக்கு ..

கரம் பிடிக்க

சாலையை கடக்கும் போது
முதல் முதலாய்
பற்றிய உன் கரங்கள் ..
வண்ணத்துப் பூச்சிகள்
நெஞ்சுக்குள் படபடக்கும்
ஓர் உணர்வு ...
நீண்டுப் போகாதோ என
வேண்டுகிறேன் - உன்
கரங்கள் எனை விடாமலிருக்க ..

Sunday, March 13, 2011

கடல்

அலையாய் ஓடி வந்து

அணைத்திடும் உன் கைகள்

அன்னையாய் இருந்து

உலகை காக்கின்றாய்

உன் மடியினில் தான்

எத்தனை உயிரினங்கள்

ஓர் செல்லிலிருந்து

பல செல் வரையிலே

உன் ஆழத்தை கண்டுக் கொள்ள

பல ஆண்டுகள் ஆனதுவே

உன் சீற்றதினாலே

பல உயிர்கள் போனதுவே

உப்பு நீராய் இருந்திடினும்

சுவையாய் மழை நீர் தருகின்றாய்

சூரியனுக்கும் உனக்கும் ஒப்பந்தமோ

சுத்திகரிப்பு ஆலை பல வைத்துள்ளாய்

பூமியிலுள்ள தீவிரவாதம் போல்

உன்னுள்ளும் இருக்கும் எரிமலைகள்

குண்டுகள் போல் நெருப்பை கக்கிடினும்

பாறைகளாய் அதனை மாற்றுகின்றாய்

காற்று தானோ உன் கணவன்

அவன் அசையும் படியே அசைகின்றாய்

கோபம் என்று வந்து விட்டால்

பேரலையாய் மாறி அழிகின்றாய்

படர்ந்து கிடக்கும் பூமியிலே

முக்கால் பங்கு நீ தானே

பெயர் தான் உனக்கு வெவ்வேறு

நீ இன்றி இங்கு பூமி எது.....?!


காதலை சொல்லிவிடு

கண்ணை நோக்கின்

மனதை பரிகொடுத்தாய்

என்னை நோக்கின்

மனதினை யாசித்தாய்..

பின்னர்

யாசித்தலும் நேசித்தலும்

மறைமுகமாக....

மனதார பகிர்தலே

காதல் ..

மனதிற்குள்ளே

வைத்திருப்பதல்ல..

கனமாக இருக்கும்

காதல்

கணமாய்

மாறிவிடும்

நீ

பகிராமல் போய்விட்டால் ...

தவறேதும் இல்லையடி

அதனை

மனமுவந்து சொல்லிவிடு

உன் மௌனம் வலிக்குதடி

அச்சத்தை தவிர்த்துவிடு ....

நினைவுகள்

உன் கண்களின் கருணையில்...

கனிந்த வார்தைகைளில்...

முத்தங்களின் எச்சிலில்

வழிகிறது துரோகம்.

'மழுப்பிப்' புன்னகைக்க

மனம் மறுக்கிறது ..

என் இயலாமையை

உன் கன்னத்தில் வளர்ந்த

முடிகளாய் நினைத்து

சவரமிட்டுவிட்டாய்

என் பார்வையிலும்

வார்த்தையிலும் சவரமிட்ட

கத்தியைப் போல்

கூர்மயில்லை போலும்

போகட்டும்

காலம் எனும் கடவுள்

புரியவைக்கும் ...

மறந்து போகட்டும்

உன் நினைவலைகள்

அலைகளால் அழிக்கப்பட்ட

காலடி சுவடுகளாய் .....

துணுக்குகள் 1

உன் பிம்பம்

என் மனதில்

சுக்கலாகின..

நீ சொல்லெனும்

கல்லை

விட்டெறிந்ததால் ..

நிலவே

நீ

பிரகாசி

இருளை

அகற்று ..

உன் பிம்பம்

என் கண்ணுக்குள்

நுழைவாயிலாய்

இதயம்

வசிக்கும்

இடமாய்..

தமிழ்

ஆங்கிலத்தை

பார்த்து சொன்னது

நான் தொலைந்தேன்

உன்னால் ..

நீ வளர்ந்தாய்

என்னால் ...


ஆகையால் அன்பு செய்

கண்டவுடன் காதல் என்பார் - சிலர்

காணாமலே காதல் என்பார்

காதலே உண்மையாகும் - அதில்

காமமும் கலந்திருந்தால்

காலத்தால் அழிந்த காதல் - பல

காலகாலமாய் கதையாய் உண்டு

லைலா மஜ்னு காதல் என்று

லயமாய் பேசி சிரிப்போர் உண்டு

ஹோர்மோன் செய்யும் வேலையினாலே

பேயாய் மனமே அலைந்திடுதே

காதல் இல்லையேல் உலகம் இல்லை -என

பொய்யாய் திரியும் மனிதர்களே Align Left

காதல் எனப்படும் மடமை ஒழித்து

அன்பை கொடுத்திட முற்படுவோம்

அன்பு என்பது அற்புதச் சொல்

அதற்கு சாதி மதங்கள் தேவை இல்லை

அன்பு என்பது சக்தி தரும் சொல்

அது மனிதன் மிருகம் பார்ப்பதில்லை

உலகம் இயங்குவது அன்பாலே

மனிதம் வளர்ப்போம் அதனாலே ..


Tuesday, March 8, 2011

மகளிர் தினம்

ஒரு முகநூல் நண்பருக்கும் எனக்கும் நடந்த ஒரு உரையாடல் ..அதை இங்கு பகிர்ந்துள்ளேன்


என்ன இது ??????

by N Suresh Chennai on Tuesday, March 8, 2011 at 6:26pm
மகளிர் தினம் - என்றொரு நாளை கொண்டாட என்ன தேவை என்று உலகமகளிர் எல்லோரும் தீர்மானம் எடுக்கும் பொந்நாள் விரைவில் வர எனது பிரார்த்தனைகள்!!!


பெண்ணை அதிசயம் என்று கண்டு வியந்து வணங்கிய காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலம் தான் ஆண்களில் பலர் மனிதர்களாக இருந்திருப்பார்கள்.

நானும் அந்த காலத்தில் காட்டுமிராண்டியாக பிறந்திருக்கலாம்!

மகளிர் தினம் கொண்டாடும் கொடுமையை காணும் காலத்தில் நான் ஏன் பிற்ந்து வாழ்கிறேனோ!!!

பாசமிகு - அப்பா தம்பி அண்ணன் என இனிய உறவுகளை மறந்து பெண்ணியம் பேசும் சில சகோதரிகளோடு எனக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், தில்லி போன்ற நகரங்களில் பெண்களாள் பாதித்த ஆண்களின் அமைப்புகளைக் கண்ட வியப்புகள் என்னில் இருப்பினும்.... பெண்கள் வணக்கத்திற்கும் மரியாதைக்கும் உரியவர்களே!!!!

பெண் தெய்வங்களே உங்களை வணங்குகிறேன்!

அம்மா சித்தி தங்கை அக்கா பெரியம்மா அத்தை மாமி மனைவி நாத்தனார் மகள் என எல்லோரும் எல்லோருக்கும் வேண்டும்; ஆனால் பிறக்கும் குழந்தை மட்டும் "ஆண் குழந்தை போதும்| என்ற மடமையான ஆசை/எண்ணம் 100%

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இல்லாமல் இருக்கட்டும்! இவ்வுலகத்திற்கு நிச்சயம் கிடைக்கும் வெளிச்சம்!


நான் சொன்னது :
"நண்பரே பெண்களை தெய்வமாக வணங்குங்கள் என்று நாங்கள் கோரிக்கை விடுக்க வில்லை.
நாங்கள் மனித இனத்தை சேர்ந்தவர்கள், எங்களுக்கும் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கம் அவளாவே.
ம்ம்.. உண்மை..போதுமான அளவில் உரிமைகளும் பெற்றுவிட்டோம் என்பதில் ஐயமில்லை.... எவ்வளவோ ஆடவர்கள் செய்யும் அராஜகங்கள் உங்கள் கண்களில் தென்ப்பட்டும் ஏன் பெண்கள் மட்டும் "அப்படி செய்கிறார்கள் இப்படி செய்கிறார்கள்" என்று குறை கூறுகிறீர்கள். சம உரிமை என்பதென்ன ? எல்லாவற்றில்லும் தானே .. அதற்காக கீழ்போக்கு வழியில் செல்லும் பெண்களை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. ஆண்களுக்கான ஈகோ தழைத்தோங்கி நிற்கத்தான் செய்கிறது."

அவர் சொன்னது :
"லைக்ஸ் - இட்ட அனைவரும் தங்கள் கருத்துக்களையும் இடலாமே? ப்ளீஸ்.... ஏன் ஆண் பிள்ளைகளை இன்னமும்ம் ஏங்குகிறது இந்த சமூகம்? திருமணச்செலவாலா? பெண் பிள்ளைகள் தானே பாசத்தோடு இன்று பெற்றோர்களுக்கு சேவை செய்கிறார்கள்? பெண்கள் ஏன் வெறுக்கப்படவேண்டும்??? உங்கள் கருத்துக்களை தயவாக இடுங்கள். நான் புரிந்து கொள்ள் வேண்டும்.. இந்த களத்தில் உபயோகமான விவாதத்தை நாம் நடத்தி நமது கடமையை நிறைவேற்றுவோம் வாருங்க்ள்...ப்ளீஸ்... பெண்மையை மதிக்கும் நல்லோர்களின் கருத்துக்களை காத்திருக்கிறேன்.
வசுமதி - தாய் தந்தையர்களை முதியோர் இல்லங்களில் விட்டு விடும் கொடுமை மாறினால் கொஞ்சம் மனிதம் வருமோ? - என்று தோன்றுகிறது.

இந்த சமூகம் என்ன பெண்களுக்கு கொடுப்பது? நீங்கள் எடுத்தக் கொள்ள வேண்டிய உரிமைகளை இனி பறிக்க வருபவர் யார்???

பெண்களுக்கு இன்னமும் முழுமையாக கல்வியும் சட்டம் சம்பந்தப்பட்ட விழுப்புணர்வும் இதற்கொரு வழி வகுக்குமா?"

நான் சொன்னது:
"பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடும் அவலம் சுயநலம் குறைந்தால் தான் முற்றுப் பெரும்.
யாரும், யாவரும், எதுவும் எதையும் தடுத்திடவில்லை. ஆதிகாலத்தில் பெண்கள் தானே சௌகர்யமாய் கூடாரத்தில் புகுந்துக் கொண்டார்கள். அதற்கு அவர்கள் உடல் ரீதியாக வரும் இயற்க்கை உபத்திரவங்களும் ஒரு காரணம். கூடாரத்தைப் பாதுக்காக்கும் ஆண்கள். அதுவே காலப்போக்கில் வழக்கமாகி விட்டது. பின்பு அதை கூடாரத்தை விட்டு வெளியே வர போராட்டம் நட்த்தவேண்டியதாகி விட்டது. அதற்கு முட்டுக்கட்டையாய் நின்றது ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான்.
என்ன படித்து, என்ன பயன்? வாழ்க்கை என்பதென்ன என்ற தெளிவு பிறக்கும் வரை ஒன்றும் நடவாது.
பெண்களும் ஆண்களும் ஒரே
உயிரினம் .....அது புரியவேண்டும் முதலில்."
அவர் சொன்னது :
"வசுமதியின் எழுத்தில் காணும் வீச்சு எனக்கு பிடித்திருக்கிறது, வாழ்த்துக்கள். மனித இனத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் இவர்களில் பெண்கள் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள் என்று உணர உலகின் ஏதாவது ஒரு பெண்ணின் சுயசரிதம் வாசித்தால்/அறிந்தால்/கேட்டால் போதும்!!!
அன்பினிய தோழி வசுமதி, உங்கள் எழுத்துக்களால் இன்றைய பெண்களின் நிலமை முன்னேற தொடர்ந்து எழுத உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்! இறைவன் உங்களை தொடர்ந்து ஆசீர்வதிக்கட்டும்! நிச்சயம் ஒரு நாள் இந்த சமூகம் உங்கள் எண்ணங்களையும் எழுத்துக்களையும் போற்றும், மதித்து செயலாற்றும் என்று உறுதியாக நம்புகிறேன். வெற்றி நிச்சயம்!"


Sunday, March 6, 2011

பிள்ளைகள் - சொந்தக் கருத்து (தொடர்ச்சி)

திருட்டு - அதை பற்றி பேசுவோம். கோடிக் கோடியாகக் கொள்ளை போகிறது, இதெல்லாம் ஒரு விஷயமா என்று தட்டி கழிக்கும் விஷயம் அல்ல.

பிள்ளைகள் லூட்டி அடிப்பது இயல்பான விஷயம் தான். அதுவே விஷமத்தனமான விஷயம் என்றால் என்ன செய்வது?

முதலில் "இப்படி பிள்ளைகள் விஷமங்கள் செய்வார்களா / செய்கிறார்களா" என்று பெற்றோருக்கு தெரிந்திருக்க வேண்டும் . பெற்றோர்களின் கவனக்குறைவால் தான் பிள்ளைகளுக்கு திருடும் பழக்கம் ஏற்படுகிறது என்பது உளநூலின் கருத்து.

சில குழந்தைகள் செய்யும் திருட்டு ஏன் என்றே தெரியாமல் இருக்கும். திருடும் பொருள் அவர்களுக்கு தேவைப் படாமலும் இருக்கலாம். ஆனால் எதோ ஒரு உந்துதல் காரணமாக திருடச் செய்வார்கள்.

முதலில் குழந்தை திருட ஆரம்பிப்பது தெரிய நேரிட்டால், ஏன்? எதற்கு ? அப்படி செய்வது தவறு என்று அறிவுரை கூறுவது நல்லது. அதுவே இரண்டாவது முறை செய்தானாயின் , கண்டிப்பது, அல்லது எங்கே திருட நேர்ந்ததோ அவர்களிடம் பெர்சனலாக மன்னிப்பு கேட்கவைப்பது நல்லது.

மேலும் மேலும் திருட்டு நிற்காமல் போனால் ஒரு ஆலோசகர் (சைகொலஜி / ச்ய்கியற்றிஸ்ட் )

அறிவுரை கேட்டு இயல் படுவது நல்லது.

நிறுத்தாமல் திருடும் பழக்கம் உள்ளவர்கள் க்லேப்டோமானியா (kleptomania) என்னும் நோயினால் பாதிக்க பட்டிருக்கலாம்.

அதை ஏன் செய்கிறார்கள் என்ற காரணம் தெரியாமல் செய்வார்கள். மன எதிர்ப்பு/ கட்டுப்பாடு

இல்லாமல் போவதால்,ஏற்படுகிறது . மன அழுத்தம், விசாரம் இருக்கும் காரணத்தினால் வருகிறது.

அடுத்து டிபிகல் தெப்ட் (typical theft) செய்பவர்களும் உண்டு. அவர்கள் செய்யும் திருட்டு பழிவாங்கும் உணர்ச்சியினாலோ, கோபத்தினாலோ, பெற்றோரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவோ, முறைகேடான வகையில் ஈடுபடுவதற்கான முயற்சியில் இறங்கவோ இருக்கலாம்.

பெற்றோரின் கவனம் போதுமல்லாமல் இருப்பதும், நெகடிவாக(negative) கவனம் செழுத்துவதும் ஒன்று தான்.

உதாரணத்திற்கு, வேலை முடிந்து வரும் போது குழந்தைக்கு வாங்கி வந்து, அவர்களுக்கு போதுமான நேரம் ஒதுக்காமல் போவது அவர்களுக்கு வெறுப்பை அதிகரிக்கும்.

ஆகையால் பெற்றோர்கள் கவனத்திற்கு, பிள்ளைகளை பெற்றுவிட்டால் மட்டும் போதாது.. .. கவனம் தேவை.


Friday, March 4, 2011

நடுநிசி நாய்கள் - எனது பார்வையில்

நடுநிசி நாய்கள் - எனது பார்வையில்

பாரதிராஜாவின் "சிவப்பு ரோஜாக்கள் " க்கு பிறகு வந்த சைகொலோஜிக்கள் த்ரிளர்.
இப்போது சிவப்பு ரோஜாக்கள் படம் பார்த்தாலும் மனம் கொஞ்சம் ட்ரம்ஸ் வாசிக்கத்தான் செய்யும். அப்படிஇதயம் ட்ரம்ஸ் வாசித்தவர்கள் தயவு செய்து இந்த படத்தை பார்க்கவேண்டாம்.
என்னடா எடுத்த உடனே இப்படி பீதியை கிளப்புறீங்க, எல்லாம் கேள்விபட்டது தான் என்று சொல்கிறீர்களா ?


சரி ..சொல்றேன் .. அதுக்கு முன்னாடி இந்த கதைக்கு பின்னாடி இருக்குறவங்கள பத்தி சொல்றேன்.
இயக்கம் : கௌத்தம் வாசுதேவன் மேனன்.
நடிகர்கள் : சமீரா ரெட்டி, வீர பஹு, தேவா, ஸ்வப்னா அப்ரகாம், சமந்தா.
தயாரிப்பு: போட்டான் கதாஸ் ப்ரொடக்ஷன் ( குமார், ஜெயராமன், மதன்)
பிப் -18- 2011- வெளியானப் படம்.


துணுக்குகள் : சமீரா ரெட்டி யை தவிர மற்ற அனைவரும் அறிமுகம். (ஆகையால் சிவாஜி range ku எதிர்பார்க்காதீர்கள்.), தெலுங்கிலும் "ERRA GULABILU" மொழி மாற்றம் (dub) செய்யப்பட்டுள்ளது,
கதைக்கு செல்வோமா ?

சமீர் (வீரா) கதையின் நாயகன், சின்ன வயசுலேயே அம்மா இறக்குறாங்க. மும்பையில் அப்பா வளர்ப்பில் வளர்கிறான். . அப்பா ஒரு சைக்கோ. அதை மிகை படுத்தி காட்டவில்லை . அதனால் பாதிப்படையும் சமீர். அவன் வீட்டில் எந்நேரமும் கும்மாளம், ஒரு சின்ன சிவப்பு நிற ஏரியா மாதிரி திகழ்கிறது. எட்டு வயதிலேயே பார்க்க கூடாததும் அவன் கற்பனை செய்ய முடியாதளவு அனுபவிக்கவும் செய்கிறான்.
அதை பார்க்கும் நமக்கும் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது.
அந்த சூழ்நிலையில் வளர்ந்தமையால் அவனுக்கு மனச்சிதைவு ஏற்படுகிறது அவனுக்கு பதிமூன்று வயதில் .
பக்கத்துவீட்டு பெண்மணி மீனாக்ஷி (ஸ்வப்னா),அறிமுகமாகிறாள். சமீரின் மேல் அனுதாபப்படுகிறாள். திருட்டுத்தனமாக அவன் வீட்டை நோட்டமிட, அதிர்ச்சியடைந்து அங்கிருக்கும் அனைவரையும் போலீஸ் சில் ஒப்படைக்கிறாள். சமீர் அனாதையாக அவளிடம் தஞ்சம் அடைகிறான் அங்கே வீரா என்று அவளால் அழைக்கப் படுகிறாள்.
வீராவுக்கு மீனாட்சியை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறான். அதை மனதிலேஅடக்கி வைத்து, எரிமலைப் போல் வெடித்து சிதர்கிறது.
மீனாட்சியை அம்மா என்று அழைத்தாலும் 'அனைத்தும் அவளே' என்றாகிறது. யாருக்கும் விட்டுத் தர மனம் இல்லாமல் போகிறது.
அந்த சம்பவத்திற்கு பிறகு, மீனாக்ஷி தனக்கொரு துணை தேடிக் கொள்ள நினைக்க, அவளை விரும்பியவனை மணம் முடிக்கிறாள்.
வீரா தன் கட்டுபாட்டில் இல்லாமல் போகிறான்.
மீனாக்ஷி கணவனை கொல்கிறான். ஆக்சிடேண்டலி மெழுகு வத்தி விழுந்து தீ பிடித்து எல்லாம் பற்ற மீனாக்ஷியை காப்பாற்றுகிறான்.

மீனாட்சியுடன் சென்னை வருகிறான்.
பத்தாம் வகுப்பு சென்னையில் தொடர, அதில் ஆர்வம் இல்லாமல் போகிறது.
சென்னையில் ஒரு பெரிய பங்களா ஆள் நடமாட்டம் அதிகமில்லா இடம்.. துணைக்கு நான்கு ஐந்து நாய்களுடன் நாயாக அவன்.
சென்னையில் வேட்டை ஆரம்பமாகிறது. வலை தளம் மூலம் பெண்கள கவர்கிறான். வீடிற்கு அழைத்து வருகிறான். அங்கே அந்த பெண்கள் கொல்லப்படுகிறார்கள்.யாரால் என்பது சஸ்பென்ஸ்.
சச்பன்ச கடைசியில சொல்றேன் ..
ஹீரோயின் சுகன்யா (சமீரா ரெட்டி ) பாதி படத்துக்கு மேல் தான் வராங்க. அவங்க வீராவோட பத்தாவது படிச்சவங்க(இந்தப் படத்துல ). அவங்கள பார்த்ததும் நம்ம ஆளுக்கும் கண்டதும் காதல். அவளை ட்ராக் பண்ணி பிடிக்கிறான். அதில் சில போலீஸ்காரர்கள் கொல்லப்படுகிறார்கள். துப்புத் துலக்க வருகிறார் விஜய் ஏ சி (தேவா)
சமீரா நன்றாக அரை வாங்கி இருக்கிறார் , ( அடுத்த படத்தில் வீரா நீங்க உஷார்...., பதிலுக்கு பதில் கிடைத்தாலும் கிடைக்கும் ).
சுகன்யா தப்பிக்க நினைக்கும் போது சஸ்பன்ஸ் உடைகிறது. மீனாக்ஷி நெருப்புக் காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, எட்டு மாதத்திற்கு பின் இறக்கிறாள்.
சமீர் ,வீரா, மீனாக்ஷி அம்மா மூன்று பெர்சனாளிடீஸ் (மல்டிப்பல் பெர்சனாலிட்டி) யோடு இருக்கிறான். வீரா சாந்த சொருபி, தனக்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணத்தில் தேடுகிறான், சமீர், அவனுக்கு நடந்த கொடுமையினால் ஏற்பட்ட வக்கிரத்தோடு, மீனாக்ஷி அம்மா பலிக்கு பலி தீர்த்தல் என்னும் கோணத்தில் வெளிப்படுகிறாள். தனக்கு வாய்த்தத் துணையை சமீர் கொன்றான், அவனுக்குத் துணை வேண்டாம் என்று அந்த கிள்ட்டி கான்ஷியஸ்.
கடைசியாக, சமீரா தப்பிச் செல்வதற்கு முயல, விஜய் (தேவா) காப்பாற்றுகிறான்.

இந்த படத்தின் நல்ல அம்சங்கள்

* பேக் கிரௌண்ட் ஸ்கோர் இல்லாமல் அவ்வளவு விறுவிறுப்பாக செல்கிறது . திகில் ஊட்டுகிறது. நாச்சுரல் சவுண்ட் எபக்ட்ஸ்- திரு ரெங்கநாத் ரவி அவருக்கு கண்டிப்பாக "ஒ" போடவேண்டும்.
* சமீரா வின் நடிப்பு
* சில இடங்களில் இது ஏன் ? எப்படி ? என்ற கேள்வி எழுந்தாலும் ஒரு கம்ப்ளிஷன் இருக்கு.
* டூயட் இல்ல .... ஆனால் "கிஸ் " கள் பல.

கெட்ட அம்சங்கள்
* சில இடங்களில் மிக கீழ்மையாக (வல்கரிட்டி ) காட்டப்பட்டிருக்கு.
* இலை மறைக் காயை சொல்லவேண்டியதை அதிகமாகவும், சொல்ல வரும் கருத்தை குறைவாகச் சித்தரித்து இருப்பதால் அடிப்பட்டுவிடுகிறது.
* வீரா வின் வேடம் கொஞ்சம் அவருக்கு ஜாஸ்தி தான் . இருந்தாலும் ட்ரை செய்திருக்கிறார்.
* எறிந்த மீனாக்ஷி வேடம் கொஞ்சம் பயமுறுத்தவே செய்கிறார்.
* ஓரினசேர்க்கை பற்றி தெரியாதவர்க்கும் பாடம் கற்றுத் தருவது போல் உள்ளது.

கடைசியாக .....
இப்படி ஒரு சுப்ஜெக்ட் ட தைரியமா தேர்வு செஞ்ச கௌதம் மேனன் க்கு ஒரு "ஒ"
பலருக்கு தெரியாத விஷயங்களை வெளிக் கொண்டுவருவது நல்ல செயல் தான் இருப்பினும், அதை டைஜெஸ்ட் பண்ணிக்கிற அளவு மனசு வேண்டும் . அது நம் நாட்டில் குறைவுதான்,
."மனச்சிதைவு " உள்ளவர்கள் அனைவரும் இப்படி இருப்பார்கள் என்று சொல்லமுடியாது என்று கடைசியாக டாக்டர் சொல்லும் அட்வைஸ் மன ஆறுதல்.

மொத்தத்தில் எதையும் செரிமானம் செய்துக் கொள்ளும் மனம்,அதாவது ஏற்கனவே பல ஆங்கில சைக்கோ த்ரில்லர்
பார்த்தவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.

அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .