Thursday, December 1, 2011

மயக்கம் என்ன - எனது பார்வையில்.

செல்வராகவன் படைப்பில் வெளி வந்திருக்கும் படம்... தனுஷ், ரிச்சா கங்கோபத்யை மற்றும் தனுஷ் நண்பர்களாக சிலர்... இசை -ஜி வி பிரகாஷ், ஒளிபதிவு - ராம்ஜி, தயாரிப்பு - ஜெமினி க்ரூப்ஸ்.

கதை என்னவென்றால் கார்த்திக் சுவாமிநாதன் (தனுஷ்) ஒரு ப்ரீ லான்ஸ் போட்டோகிராபர். நல்ல சான்ஸ் தேடி அலையும் பிள்ளை. அம்மா அப்பா கிடையாது.... தங்கை ஒருத்தி இவர்களுடன் நண்பர்கள் ...நம் செல்வராகவன் படத்தில் நண்பர்கள் இன்றி எது ? சரி கதைக்கு வருகிறேன் . கார்த்திக்கோட(தனுஷ்) நண்பன் தன் பெண் தோழியை அறிமுகம் படுத்தி வைக்கிறார். எடுத்தவுடன் மோதல் ஆகிறது இருவருக்கும்...அது காதலின் அறிகுறி என்று தெரியாமல்... பின்பு தெரியவருகிறது. அதற்கு நடுவில் கார்த்திக் ஒரு பெரிய போடோக்ராபரிடம் சான்ஸ் கேட்டு செல்கிறார்.. நிராகரிக்க படுகிறார். " 'அட்லீஸ்ட்' உங்க அச்சிடன்ட் ஆகா சான்ஸ் கிடைக்குமா" என்றும் கெஞ்சி பார்கிறார். "அட்லீஸ்ட்" என்று அந்த பெரிய போடோக்ராபர் நக்கலாக சிரித்து ஏளனம் போது நமக்கும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. பாவமான தனுஷ் முகத்தை பல படத்தில் பார்த்து விட்டோம். இதிலும் இதிலும் நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது. தான் எடுக்கும் போடோஸ் லாயக்கில்லை என்று பல இடங்களில் நிராகரிக்கு பட்டு ஒரு சான்ஸ் கிடைத்து போடோஸ் எடுத்து தருகிறார். அனைத்தும் புகைப்படமும் சரி இல்லை என்று நிராகரிக்கப் பட்டு மனம் நொந்து குடிக்கிறார்.

ஹீரோயின் யாமினி (ரிச்சா) வேண்டுமென்றே கார்த்திக்கிடம் நெருங்கி பழகுகிறாள். கார்த்திக்கும் அவளை பிடிக்கிறது. ஆனால் நண்பனுக்கு துரோகம் செய்ய மனம் மறுக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த எல்லையை மீறும் சூழ்நிலை. நண்பர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர். அதற்கு நடுவே கார்த்திக் எடுத்த புகைப் படம் நேஷனல் காக்ராபிக் புக் கில் வேறொரு நபரின் பெயரில் வெளியாகி இருப்பதாய் கண்டு கோபப் படுகிறார். சென்று வாதிடுகிறார். முடியவில்லை. திருமணம் முடிந்து வாழ்கையை ஓட்ட... செய்தி தாளில் அந்த நபருக்கு விருது வழங்கப்பட்டதை கண்டு மாடியிலிருந்து விழுகிறார். கொஞ்சம் மூளை பாதிப்படைகிறது. தோற்று விட்டோம், ஒதுக்க படுகிறோம் போன்ற மன ஆழுத்தம் அவனை வாட்டுகிறது. எல்லாவற்றையும் தாங்கி கார்த்திக் ஒரு வழிக்கு கொண்டு வருகிறாள் நம் ஹீரோயின். கடைசியில் இன்டர்நேஷனல் வைல்ட் போடோக்ராபிக் அவார்ட் வாங்குகிறார்.

" I am thankful to all those who said 'no' because of them, I did it myself "

ஐன்ஸ்டீன் வாக்கு படி தன் மனைவியால் முன்னுக்கு வந்தாலும் 'வேண்டாம்', 'நன்றாக இல்லை ' என்று நிராகரிக்க பட்டாலும் அவன் திறமையை வெளி கொண்டு வந்து சாதிக்கிறான்.இது தான் கதை.

கதையின் பின் பாதி ஒரு ஆங்கிலபடத்தின் சாயல்லில் இருக்கிறது.

கார்த்திக், ஒரு மத்தியதர நபர். அவருக்கெப்படி அவ்வளவு விலை உயர்ந்த

டெலிபோட்டோ லென்ஸ் எப்படி வாங்கினார் ?..... நண்பர்கள் அவ்வளவு க்லோசாக இருக்கும் பட்சத்தில் எப்படி துரோகம் செய்ய மனம் வருகிறது.?...ஜீனியஸ் என்று தனுஷ் எதற்கு அழைக்கப் படுகிறார்?...... பெங்குயன் போட்டோ எடுக்க அண்டார்டிக்கா சென்றாரா என்ன... ? இப்படி பல கேள்விகள் மனதில் உதிக்கிறது...

அங்கே அங்கே பிச்சி பிச்சி எடுத்து ஓட்ட வைத்து நேஷனல் ஆவார்ட் வாங்கிய தனுஷ் தன்னை நிக்கவைப்பார் என்ற தைரியத்தில் படம் எடுத்திருக்கிறார் அவர் அண்ணன்.

"மயக்கம் என்ன" ..... தயக்கமாய் தான் இருக்கிறது பாருங்கள் என்று சொல்வதற்கு.... ஒரு வேண்டுகோள் ஆண் நண்பர்கள் தன் பெண் தோழியை சக நண்பனுக்கு அறிமுகப் படுத்தவேண்டாம்


No comments:

Post a Comment