Wednesday, February 29, 2012





உத்தர ராமேஸ்வரம் திருகோயிலில் எங்கள் மதுர கலாநிகேத்தன் நடத்திய கூச்சுபுடி நடன நிகழ்ச்சி.

அடோல்ப் ஹிட்லர் - பகுதி 2

அடோல்ப் ஹிட்லரை பற்றி ..... தொடர்கிறது

ஹிட்லருடைய ஒன்றுவிட்ட சகோதரர் பார்த்தக் காட்சியை கேட்டால் அதிர்ச்சியாக இருக்கும் நமக்கு. ஒருமுறை எதோ தவறு செய்துவிட்ட வளர்ப்பு நாயை அடித்த அடியில், அது வீரிட்டு நடுஹாலில் சிறுநீர் கழித்துவிட்டதாம். என்ன கொடுமை ல ... ? தந்தையே இப்படி கொடூரமாக இருந்ததினாலோ என்னவோ மகனுக்கும் அதே மனநிலை போல..

ஹிட்லருக்கு பதினான்கு வயதான போது, தந்தை ச்ற்றோகே வந்து இறந்து போனார். பிறகு அவரின் பென்ஷனில் குடும்பம் சமாளித்தது. அப்பா போனதும் ஹிட்லர் தன் ஆசை நிறைவேற்றிக் கொள்ள வசதியாய் போனது. ஓவியராகி தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்க, அவர் தாயும் மனதை சமாதனப் படுத்திக் கொண்டு செலவுக்குப் பணம் தந்து ஹிட்லரை வழி அனுப்பினார். ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவுக்கு ரயில் ஏறினார் ஹிட்லர்.

வியன்னாவில் இருந்த புகழ்பெற்ற ' ஆர்ட் அகாடமி' யில் சேருவதற்காக முயற்சித்தார் ஹிட்லர். பரிட்சையிலும் கலந்துக் கொண்டார் . அவரின் ஓவியங்கள் சுமாராக இருந்தமையால் நிராகரிக்கப் பட்டார். வேறு வழியில்லாமல் கட்டடக் கலைக்கான கல்வியாவது படிப்போம் என அங்கே சேர முயற்சி எடுத்தார். அடிப்படைக் கல்வி இல்லாததினால் அங்கேயும் அனுமதி மறுக்கப் பட்டது.

வியன்னா வந்த ஓராண்டில் ஹிட்லரின் தாய் இறந்த தகவல் வர.... வாழ்கையே வெறுத்துப் போனார். பிற்பாடு, தாய் சேர்த்துவைத்திருந்த கணிசமான பென்ஷன் பணமும் வீடும் ஹிட்லருக்கு வந்து சேர .....கூடவே இன்னொரு காரியத்தையும் துணிகரமாக செய்தார். தான் இன்னும் மாணவராகத் தொடரவதாக பொய் சர்டிபிகேட்டை அரசுக்கு அனுப்பி, அம்மாவுக்கு வந்த பென்ஷன் தொடர்ந்து தனக்கு வரும் படி ஏற்பாடு செய்துகொண்டார்.
ஹிட்லருக்கு கொஞ்சம் நாடோடி தனமான வாழ்க்கையாக மாறியது . வியன்னாவில் தெருவோர டீக்கடையில் உட்கார்ந்து நாளிதழ்களை ஒரு வரி விடாமல் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அரசியல் ஈடுபாடு வந்தது அப்போது தான்.

தான் ஒரு ஓவியன் என நிருபிக்க, அவ்வப்போது வாட்டர் கலர் ஓவியங்களை வரைவதை ஹாபியாக வைத்திருந்தார். சில ஓவியங்கள் விற்கவும் செய்தன.
ஹிட்லர் யாரிடமும் மனம் திறந்து பேசுவதே இல்லை. நியாமாக அவருக்கு நிறையவே நண்பர்கள் ஏற்பட்டிருக்கவேண்டும். ஆனால், அவர் பேசாதிருந்த காரணத்தினால், ஒரு நட்புகூட அவருக்குக் கிடைக்காமல் போனது.

துணுக்குகள் -3

இயற்கையோடு
எய்வதினாலோ
இப்போது
ஆடை குறைத்தல்
நாகரீகம்
ஆராயப்படுகிறது..
மீண்டும்
ஆதாமேவாள்
ஆடைகள்
புதுபிக்கப்படுமோ !?!


என் கண்களில் வழிந்த கண்ணீர்
அவன் உறக்கத்தை கலைத்துவிட்டது போலும்
என் செல்பேசியில் அவனின் அழைப்பு மணி

அவள் சிணுங்களில்
நான் விழித்தேன்...
மனதில் ஊறிய
கட்டெறும்பினால் ....

நிந்திக்கத் தெரிந்த
மனதுக்கு
மறக்கத் தெரியவில்லை
இதயம் கல்லாய்
இருப்பதினால்..

Tuesday, February 28, 2012

அடால்ப் ஹிட்லர் - பகுதி 1

அடால்ப் ஹிட்லர் - பெயரை கேட்கும் போதே "சும்மா அதிருதுல்ல" என்று சொல்லும் வில்லன் போல கற்பனை செய்துப்பாருங்கள். உலகத்தின் இவர் ஒருவருக்கு மட்டுமே சொந்தாமான பெயர். யாருக்கும் அந்த பெயரை வைக்க இது வரை தைரியம் கிடையாது என்றே சொல்லலாம்.
"கொடூர மனிதன்" என்கிற அடை மொழி வந்ததற்கு காரணம், அவர் மற்ற நாடுகளுடன் அநியாயமாகப் போரிட்டதால் மட்டும் அல்ல. குறிப்பிட்ட சில தவறுகளைச் செய்ததால் வீழ்ச்சியடைந்த மிகப் பெரிய கமாண்டர்களில் இவரும் ஒருவர்.
ஒரு இனத்தையே அழிக்க முடிவெடுத்து, பல லட்சக்கணக்கான அப்பாவிகளை திட்டம் தீட்டி கொன்றவர் ஹிட்லர். வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைய அதுவே காரணம் ஆயிற்று .

ஜெர்மனியில் ஏதோ மூலையில் கேட்பாரற்று திரிந்த மனிதர், எப்படி பிற்பாடு உலகையே ஆட்டிப் படைக்கும் பெரும் அரக்கனாக மாறமுடிந்தது என்ற கேள்வி பலப் பேருக்கு ஏற்பட்டிருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
ஹிட்லர் ஒரு சாதனையாளர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அனால் அவர் செய்த சாதனைகள் பேசப் படவில்லை. அவர் பெயரை உச்சரித்தாலே தர்ம சங்கடமான நிலை தான் ஏற்படுகிறது.

ஹிட்லரின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் பற்றி கொஞ்சம் அலசுவோம்.

ஜனநாயக ரீதியில் தேர்தலில் முறையாக ஜெயித்து, ஆட்சிக்கு வந்தவர் ஹிட்லர் - புரட்சியின் மூலம் அல்ல.
ஹிட்லர் ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனியில் குடியேறியவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.
ஹிட்லருக்கு தன் தாத்தா யாரென்று தெரியாதாம், அதாவது ஒரு யூதரினால் ஏமாற்ற பட்டவர் தான் ஹிட்லரின் பாட்டி என்றும், அதனால் யூதர்களின் மீது வெறுப்புக் கொண்டு யூதர் இனத்தையே அழிக்க கிளம்பிவிட்டார் பேரப்பிள்ளை என்ற தகவலும் உண்டு. ஆனால் அதற்கு ஆதாரங்கள் கிடையாது. (தமிழ் சினிமாவில் வரும் பழிவாங்கும் படலம் என்ற ரீல் சுற்றுகிறதா?)

ஏழ்மையான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர் ஹிட்லர். அவரின் தந்தை ஆலோய்ஸ் ஹிட்லர் சிரமப் பட்டு உழைத்து, கஸ்டம்ஸ் டிபாட்மென்ட் ஒரு சாதாரண அதிகாரியாக உயர்ந்தார். அவர் வாழ்ந்து வளர்ந்த சூழ்நிலை, அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. சிரிப்பையே அவர் முகத்தில் காணமுடியாமல் போயிற்று. மிகமிகக் கண்டிப்பான தந்தையாக இருந்தார். சிறு வயதிலிருந்தே ஹிட்லருக்கும் அவர் தந்தைக்கும் கருத்து வேறுபாடுகள் நிறைய இருந்தன.
இவரை போலவே ஹிட்லரும் அரசுப் பணியில் சேர்ந்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், ஹிட்லர் ஓவியராக ஆகா ஆசைப்பட்டார்.
ஹிட்லரின் தந்தைக்கு குடிபழக்கம் இருந்தது. குடிவெறியில் தன் தாயை ஏசுவதும் அடிப்பதும் ஹிட்லருக்கு வெறுப்பை ஏற்ப்படுத்த பிளவு அதிகமானது.
வீட்டில் அனைவரையும் அடிமையாகவே நடத்தினார் ஹிட்லரின் தந்தை. அவரை தந்தை என அழைக்கக் கூடாது என்றும் "பெரியவர்" என்று அழைக்கபடவேண்டும் என்று உத்தரவிட்டார். அது மட்டுமல்ல, ஹிட்லரை அவர் "அடால்ப்" என்ற பெயர் வைத்து அழைப்பது இல்லை. மகனைக் கூப்பிட, அவர் விசிலைப் பயன்படுத்தினார். அவர் விசில் ஊதினால் ஓடி வந்து ' அடேன்ஷனில்' நிற்கவேண்டும்........

தொடரும்

Tuesday, February 14, 2012

துணுக்குகள் - 2

காட்டாறு
வெள்ளத்தினால்
உருண்டுவரும்
பாறைகள்
சிலது
மண்துகள்களாய்..
சிலது
கூழாங்கற்களாய் ..



அரிகாரத்தை பூசாமல்
நடித்துக்கொண்டிருக்கிறோம்
ஒவ்வொரு உறவிடம்
ஒவ்வொரு மாதிரி
உனக்காக நீ
நடிக்காமல் ..
மனம் கேட்கும்
கேள்விக்கு
பதில் இல்லை.

குறை ஏதேனும்
கண்டுப் பிடித்து
குற்றம் சாட்டப்படும்
முதிர் கன்னிகள்
முதிர்ச்சியை
மனம் ஏற்றாலும்
ஓயாது புரளி பேசும்
சமுதாயம் .
முதிர்கண்ணன்களுக்கும்
இதே நிலையோ !

Thursday, February 2, 2012

வாழ்க்கை

மூச்சை பிடித்து
மூழ்கும் சூழ்ச்சி '
யாவரும் அறியாதது .

விலை கொடுத்ததை
வாங்க வழி
தெரியாதது .

காலப் பெருங்கடல்
சுழற்றும் பேரலை
சேர்த்திடும் ஓர் கரையில் .

அந்த சாயலை கொண்டு
சாரமும் கண்டு
வாழ்த்திட துணியும் மனம்.

ஏன் ? எதற்கு? என
கேட்கும் அறிவு
இல்லாது போவோரும் ,
மனித வடிவில்
திரியும் அவனும்
மிருக இனமே!