Wednesday, August 15, 2012

ஐயப்பன்

ஐயப்பன், கரு கருவென விழிகள்.. தோல் நிறமும் அதுவே.. வெண்ணிற பற்கள் முகத்தில் சிரிக்க, ஓயாமல் பேசி எங்களை உற்சாகப் படுத்திய சிறுவன் . 
அவனுக்கு பத்தே வயது தான் ஆகிறது. தமக்கை இரண்டு பேர், அண்ணன்கள் இரண்டு பேர். தந்தையும் ஒரு அண்ணணுமே பொருளீட்ட ... எதோ ஓடுகிறது அவர்கள் வாழ்கை சக்கரம். .. மரணம் என்ற சொல் காதில் கேட்கும் போதே சிலருக்கு பயம் வயிற்றில் இருந்து தொடங்கி வெளியே கொப்பளிக்க ஆரம்பிக்கும். .. அதுவும்  தனக்கு நெருங்கிய நபராக  இருக்கும் பட்சத்தில் ரொம்பவே பாதிக்கச் செய்யும். இவன் வாழ்க்கையிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்திருகிறது. 
சோகம்  உள் இருப்பினும், வெளியே பிரவேசிக்காமல் இருந்தது. 
நான் வரிசையாகக்  கேட்ட கேள்விகளுக்கு உடனடி பதில்கள், ஆனால்  அந்த பதிகள்,  என்னால் ஜீரணிக்க முடியாமல் போனது தான் உண்மை. சமுதாயத்தில் ஒரு நல்ல பிள்ளை உருவாக பெற்றோர்களின் போக்கும், அரவணைப்பும் எவ்வளவு முக்கியமானது... தன் கண் முன்னே இவனின் தாய் தூக்கிலிட்டு கொண்டாள், தன் அப்பா அம்மாவிற்கு சண்டை நடந்தது, பின் மனமுடைந்து அவள் இங்ஙனம் செய்து மாய்த்து கொண்டாள் என்பது எனக்கு செய்தி தான் . இருப்பினும், எத்தனையோ இடங்களில் இப்படி பட்டச் சம்பவங்கள்  நடந்த வண்ணம் தான் இருக்கிறது.. அதனால் பாதிக்கப்  படப் போவது இளையத் தலைமுறையே அன்றி வேறு யாரும் இல்லை .. இது தொடர்கதையாகத் தான் இருக்கப் போகிறது..

Saturday, March 17, 2012

விடுதலை

உண்மைக்கும்
படிமத்திற்கும் நடுவில்
ஊடுருவும் என் மனது..
உத்தேசம் இல்லை..
உதாசினப் படுத்த ..
கருதுவமையில்
மாட்டிக் கொண்டு
கலக்கமே மிச்சம்
வெளிச்சத்தில்
நின்றுக் கொண்டு
விடியலைத் தேடி
மறுபரிசீலனைச் செய்கிறேன்
இந்த வாழ்கையை
வாழலாமா அல்லது
விடுதலைப் பெறலாமா !

பொய் பூசாமல்

நாணும் கண்களால்
நானும் கலங்குகிறேன்
பேசா வாய்தனில்
பொய் பூசாமல்
சிரிகின்றாய்
நாணத்தால்
உன் கால்விரல்கள்
சொல்லும் வார்த்தை,
வாய் திறந்து
சொல்லிடாயோ !
கேள்விக்குறியாய்
உன் செவிகள் ரெண்டும்,
என் மனத்துக்குள்
கேட்குதடி !
கண்களால் தூதுவேண்டாம்
முகப் புத்தகத்தில்
அனுப்புப் போதும்!

Sunday, March 11, 2012

அடோல்ப் ஹிட்லர் - பகுதி 3

ஹிட்லருக்கு நெருங்கிய நண்பர்கள் கிட்டவில்லை. நாடோடியாக திரிந்துக் கொண்டிருந்தார். கையில் இருந்த பணம் குறையவே வேறு வழி இன்றி ஜெர்மனிக்கு பயணம் ஆனார். ஏதாவது சாதித்து தன் ஹீரோயசத்தை வெளிப் படுத்தவேண்டும் என்ற ஆவல் ஹிட்லர் மனதில் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்தது. தான் ஆசைப் பட்டது போல் ஓவியராக முடியவில்லை. ராணுவத்திலாவது சேருவோம் என்ற முடிவெடுத்து தன் இருபத்தைந்தாம் வயதில் ராணுவத்தில் சேர்ந்தார் ஹிட்லர்.

முதலாம் உலகப்போர் வெடிக்கும் நேரம்.... 1914 ஆம் ஆண்டு.


ஆரம்பத்தில் படைவீரராக சேர்ந்தார். முதாலாம் உலகப்போரின் போது எல்லையில்
"ரன்னராக " இருந்தார். அதாவது, போரின் போது போர்வீரர்களுக்கு தகவல்களையும், கட்டளைகளையும் சுமந்து ஓடிச் சென்று தருவது தான் பணி. போர் முனையில் குண்டுமழை பொழிய, அச்சமின்றி தன் பணியை கடமை தவறாமல் செய்தமைக்கு ஹிட்லருக்கு ராணுவம் "அயன் கிராஸ்" என்னும் பதக்கம் அணிவித்து கௌரவப்படுத்தியது.
உலகப்போரின் போது "மஸ்டர்ட்" என்னும் விஷவாயு வீசப் பட்டு ஹிட்லரின் ஒரு கண் தற்காலிகமாகப் பார்வை இழந்தது.

' வேர்சைலஸ் ட்ரீட்டி" ஜெர்மையிடம் ஆயுதங்களை பறிமுதல் செய்து , இழப்பீடு தர கட்டளையிட்டது. ஜெர்மனியில் கடன் தீர்க்க வழியின்றியும், வேலையில்லா திண்டாட்டமும், அதிகமானது.

ஜெர்மனி முதாலாம் போரில் தோல்வியாக, ஹிட்லருக்கு பொறுக்க முடியவில்லை. யூதர்களும், கம்யூனிஸ்ட் களும், ஒற்று வேலை பார்த்ததினால் ஜெர்மனி போரில் தோல்வியுற்றது என்பதை ஆழமாக நம்பின்னார். அதை அவரால் தாங்கமுடியாமல் " யூதர்களையும், கம்யூனிஸ்ட் களையும் " பழிவாங்கியே தீருவேன் என சபதம் எடுத்து அழுதார் ஹிட்லர்.

- தொடரும் ..

Friday, March 9, 2012

துணுக்குகள் - 4

விஸ்தாரமான இடத்தில்
விரிந்து கிடக்கும் நிலத்தில்
இறைந்துகிடக்கின்றோம்
கிளிஞ்சள்களாய்
சிலது அலங்காரப்
பொருட்களாய்
சிலது புதைந்து
அலை அடித்து
கரை சேர்ந்துவிட்டோம்
உயிரற்ற ஜடப்
பொருளாய் ....


என்னை விடுவித்துக் கொள்ள
முற்படுகிறேன்...
தடையாய் இருப்பது
அவள் அன்பு மட்டுமே ...

உன் விழியின்
வெளிச்சத்திற்காக
காத்திருக்கிறேன்
அதுவே என்
விடியலென்று...

உன் மௌனமும்
உபசரிப்பும்
அரவணைப்பும்
ஆசை பேச்சும்
இதயத்தை துளைக்குது
நம்பிக்கைத்ரோகமாய்
நான் வீசிய அம்பு
திரும்பி அன்பாய்
என் மீது ...

Sunday, March 4, 2012

அம்புலி - எனது பார்வையில்..




அம்புலி - நிலவின் இன்னொரு பெயர். படத்திற்கு ஏன் அம்புலி என்ற பெயர் வைத்தார்கள் என்ற கேள்வி எழுப்பாமல் பாருங்கள். த்ரில்லர் , பிக்சியஸ் ஸ்டோரி. பழைய என்றால் கொஞ்சம் பழங்காலத்து படங்களை தழுவியிருந்தாலும், தமிழ் படத்தில் முதல் முயற்சி என்று சொல்லலாம்.

அமுதன் (அஜய் ) வேந்தன் (ஸ்ரீஜித்) . கல்லூரி மாணவர்கள். விடுமுறை விட்டப் பிறகும், அமுதன் காதலுக்காக தன் ஊருக்கு செல்லாமல் தன் நண்பன் வேந்தன் ஊரிலேயே தங்குகிறான். வேந்தன் அந்த கல்லூரி காவல்காரனின் மகன் . காலகாலமாக ஒரு விபரீதம் நடந்து வருகிறது. சோள புலத்தில் அம்புலி வந்து வேட்டையாடிகிறதென்றும், சாயங்கால நேரம் அனால் யார்ம வெளியே நடமாட கூடாதென்றும் ஊரு கட்டுப்பாடு வித்தித்து இருக்கிறது. அதை மீறி அமுதன் அந்த சோள காட்டை தாண்டி வர, சத்தம் கேட்டு அரண்டு திரண்டு ஓடி வருகிறான். பின்பு அமுதனும் வேந்தனும் யார் இந்த அம்புலி என்று துப்பு துலக்கி கண்டறிகிறார்கள்..

ஒரு வெளிநாட்டவன் அந்த ஊரில் வசிக்கும் ஒரு கர்பவதியை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அதனால் ஏற்படும் விளைவு தான் இந்த நிலா வெளிச்சத்தில் நடைபெறும் ரகசியம். அந்த ரகசியம் என்ன? என்பதை திரையில் காணுங்கள்.
செங்கோடன் (பார்த்திபன்) சொலக் காட்டில் தனியாக வாழ்கிறான், அவனை அம்புலி ஒன்றும் செய்ய வில்லை என்பது ஆச்சர்யம். இசை, பரவில்லை . கே . வெங்கட் பிரபு ஷங்கர், சி . எஸ். சாம் , சதீஷ் மற்றும் மெல்வின் சாலமன். மூவரும் சேர்ந்து இசை அமைத்திருகிறார்கள்.

நாராயண் ஹரி ஷங்கர் மற்றும் ஹரீஷ் இந்த படத்தின் இயக்குனர்கள். ஏற்கனவே ஒரு த்ரில்ளீர் படம் எடுத்த அனுபவம் இவர்களுக்கு உண்டு.

இந்த படம் 3d படம். இந்த படம் பிரமாண்டமாக இல்லையென்றாலும், நம் ஆட்கள் வந்து குச்சியை நீட்டுவதும், பேப்பர்களை தூவும் போது நம் மீது விழுவதும்.....(எவளவோ பார்த்துட்டோம்...... இவளவு தானா?) அதே அதே..

ஹீரோ மற்றும் ஹீரோஇன் புதுசு.. அதனால் பெருசாக எதையும் எதிபார்க்க முடியவில்லை.
குழந்தைகளுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். பெரியவர்களுக்கு ...ம்ம்ம்ம்... சரி ஒரு முறை பார்க்க முயற்சி செய்யுங்கள்.

Thursday, March 1, 2012

the boy in the striped pyjamas




இந்த படம் ஒரு நாவலை தழுவி எடுக்கப் பட்ட படம். ஐரிஷ் எழுத்தாளர் ஜான் பாயன் ரெண்டரை நாட்களில் எழுதி, முடித்து ஐந்து மில்லியன் காபீஸ் விற்ற பெருமை உண்டு. இந்த கதை இரண்டாதவது போரின் நேரம் அமைந்ததாக இருக்கு. இந்த படத்துல நடிச்சவங்க பற்றி அப்புறம் பேசுவோம். முதல கதைய சொல்றேன்.
எட்டு வயசு பையன் ப்ருனோ. தன் தாய், தந்தை, அக்காவோட சந்தோஷமா வாழ்றான். அவன் வயது கேற்ற விளையாட்டு அவனை சுற்றி நண்பர்கள், ரொம்ப ஆரோக்யமா போய்ட்டிருக்கு. அவன் அப்பா ஈவா பிரான் ஒரு பெரிய பதவியில் வகிக்கும் ஒரு ராணுவ வீரர். அவருக்கு ப்ரோமோஷன் கிடைச்சு நகர் ஆச்சுவத்ஸ்(Auschwitz) என்னும் கிராமப்புறத்திற்கு மாற்றலாகிறார். குடும்பத்துடன் கிளம்ப நேர்கிறது.

அங்கே பெரிய வீடு, ப்ருனோ வை சுற்றி இருக்கும் சூழ்நிலைஅவனுக்கு ஏற்றார் போல்இல்லை. அவன் வயதுகேற்றாற்போல் விளையாடும் வயதில் தோழர்கள் இல்லை. அவன் தாத்தா பாட்டி, அவன் நண்பர்களை ரொம்ப மிஸ் பண்ண ஆரம்பிக்கிறான் .
வீட்டிலேயே ஆசிரியரை வரவழைத்து ப்ருநோவுக்கும், அவன் அக்காவிற்கும் பாடம் நடத்தப் படுகிறது. ரொம்ப வெறுத்து வீட்டை சுற்றி ஆராய ஆரம்பிக்கிறான். தூரத்தில் கூடாரங்கள் போடப்பட்டு சிலர் அங்கே வேலை செய்வதை பார்க்க நேரிடுகிறது. அவர்கள் கோடூ போட்ட பைஜாமாவில் இருப்பதை பார்க்கிறான். அவன் வீட்டில் வயதான பணியாளரும் அதே உடையில் இருப்பதை பார்த்து, தன் தந்தையிடம் பைஜாமாவில் இருப்பவர்கள் யார் என விசாரிக்கிறான். அதற்கு அவன் தந்தை. "அவர் மக்களே அல்ல, அவர்கள் ஜூய் " ("they are people, they are jews") என்று சொல்கிறார். அவனுக்கு புரியாமல் போகிறது.


இப்படியே நாட்கள் ஓட, ப்ருனோவுக்கு அந்த கூடாரங்களில் யார் வசிகிறார்கள்?, அங்கே இருக்கும் சிம்னியில் ஏன் துர்நாற்றம் வருது?என்பதை தெரிந்து கொள்ள ஆசை வருகிறது. யாருக்கும் தெரியாமல் ஆராயத் துவங்குகிறான் . அங்கே ஒரு வேலி. வேலிக்கு அந்த பக்கம் ஒரு பையன். அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பிக்கிறான். அவன் பெயர் ஷ்முள்(shmuel) என்றும், அவனுக்கும் எட்டு வயது தான் ஆகிறது என்றும், அவனை போல் மற்றவர்களும் அங்கு ஏன் அடைக்க வைத்து அடிமை படுத்தப்படுகிறார்கள் என்பது தெரியாது என்று சொல்கிறான். அவனுக்கு தெரிந்த ஒன்று அவன் ஒரு ஜூய்.
ப்ருனோ , 'தன்னை நண்பனாய் ஏற்பாயா?' என்று கேட்க அவனும் சம்மதிக்கிறான். சமயம் கிட்டும் போது ஷ்முள்க்கு ப்ருனோ சாப்பிட எடுத்து வருகிறான்.
ஒரு நாள், ஷ்முள் அவனுடைய தந்தையை காணோம் என்றும் அவனுக்கு உதவி செய்வாயா என்று ப்ருனோவை கேட்க. அவனும் 'சரி' என்று சொல்கிறான். இருவரும் திட்டம் தீட்டி, ப்ருனோ ஷ்முள் போலவே பைஜாமா தரித்து, வேலி தாண்டி செல்கிறான். இருவரும் தேடி செல்கிறார்கள். அப்போது அடைக்கப்பட்ட அடிமைகள் சிலரை கும்பலாக ஒரு அறைக்குள் அழைத்து செல்ல நடுவில் இவர்கள் இருவரும் மாட்டி கொள்கின்றனர். இவர்கள் இருவருக்கும் என்ன ஆகிறது? என்ன ஆகி இருக்கும் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ? படத்தை பாருங்கள் .

இப்படியே நாட்கள் ஓட, ப்ருனோவுக்கு அந்த கூடாரங்களில் யார் வசிகிறார்கள், அங்கே இருக்கும் சிம்னியில் ஏன் துர்நாற்றம் வருது , அதை பற்றி தெரிந்து கொள்ள ஆசை வருகிறது. யாருக்கும் தெரியாமல் போகிறான். அங்கே ஒரு முள் வேலி. வேலிக்கு அந்த பக்கம் ஒரு பையன். அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பிக்கிறான். அவன் பெயர் ஷ்முள் என்றும், அவனுக்கும் எட்டு வயது தான் ஆகிறது என்றும், அவனை போல் மற்றவர்களும் அங்கு ஏன் அடைக்க வைத்து அடிமை படுத்தப் பட்டிருகிறார்கள் என்பது தெரியாது என்று சொல்கிறான். அவனுக்கு தெரிந்த ஒன்று அவன் ஒரு ஜூய்.
ப்ருனோ , தன்னை நண்பனாய் ஏற்பாயா என்று கேட்க அவனும் சம்மதிக்கிறான். ஷ்முள் கு ப்ருனோ சாப்பிட எடுத்து வருகிறான்.
ஒரு நாள், ஷ்முள் அவனுடைய தந்தையை காணோம் என்றும் அவனுக்கு உதவி செய்வாயா என்று ப்ருனோவை கேட்க. அவனும் 'சரி' என்று சொல்கிறான். இருவரும் திட்டம் தீட்டி, ப்ருனோ ஷ்முள் போலவே பைஜாமா அணிந்து , வேலி தாண்டி செல்கிறான். இருவரும் தேடி செல்கிறார்கள். அப்போது அடைக்கப்பட்ட அடிமைகள் சிலரை கும்பலாக ஒரு அறைக்குள் அழைத்து செல்ல நடுவில் இவர்கள் இருவரும் மாட்டி கொள்கின்றனர். இவர்கள் இருவருக்கும் என்ன ஆகிறது? என்னவாகியிருக்கும்? கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ? படத்தை பாருங்கள்.....

ரொம்ப அருமையான ஸ்டோரி. அப்படியே அந்த ஹிட்லர் காலத்திருக்கு இண்டேரக்ட கொண்டு போகுது. 'ஜூய்' வா பிறந்தது தான் அவர்கள் செய்த குற்றமா நு மனம் கலங்கும். இந்த கதையில, ப்ருனோ வீட்ல வேலை செய்யும் ஒரு தாத்தா டாக்டர் என்று தெரியா வர, ப்ருனோ அவரிடம் கேட்பான், "டாக்டரா இருந்துட்டு ஏன் உருளைகிழங்கு உரிக்கிறீங்க?" அதற்கு அவரிடம் பதில் இருக்காது. சில சீன்ஸ் ரொம்ப டச்சிங்கா இருக்கு.

இதுல நடிச்சவங்க யாரு ? ப்ருனோ - ஆசா பட்டர் பீல்ட்
அப்பா (ஈவா பிரான்) - டேவிட் தேவ்லிஸ்
டைரக்டர் - மார்க் ஹெர்மன் , கதை - ஜான் பாயன் .

தி பாய் இன் தி ஸ்டரிப்ட் பைஜமாஸ் ..(the boy in the striped pyjamas)

இந்த படம் ஒரு நாவலை தழுவி எடுக்கப் பட்ட படம். ஐரிஷ் எழுத்தாளர் ஜான் பாயன் ரெண்டரை நாட்களில் எழுதி, முடித்து ஐந்து மில்லியன் காபீஸ் விற்ற பெருமை உண்டு. இந்த கதை இரண்டாதவது போரின் நேரம் அமைந்ததாக இருக்கு. இந்த படத்துல நடிச்சவங்க பற்றி அப்புறம் பேசுவோம். முதல கதைய சொல்றேன்.
எட்டு வயசு பையன் ப்ருனோ. தன் தாய், தந்தை, அக்காவோட சந்தோஷமா வாழ்றான். அவன் வயது கேற்ற விளையாட்டு அவனை சுற்றி நண்பர்கள், ரொம்ப ஆரோக்யமா போய்ட்டிருக்கு. அவன் அப்பா ஈவா பிரான் ஒரு பெரிய பதவியில் வகிக்கும் ஒரு ராணுவ வீரர். அவருக்கு ப்ரோமோஷன் கிடைச்சு நகர் ஆச்சுவத்ஸ்(Auschwitz) என்னும் கிராமப்புறத்திற்கு மாற்றலாகிறார். குடும்பத்துடன் கிளம்ப நேர்கிறது.

அங்கே பெரிய வீடு, ப்ருனோ வை சுற்றி இருக்கும் சூழ்நிலைஅவனுக்கு ஏற்றார் போல்இல்லை. அவன் வயதுகேற்றாற்போல் விளையாடும் வயதில் தோழர்கள் இல்லை. அவன் தாத்தா பாட்டி, அவன் நண்பர்களை ரொம்ப மிஸ் பண்ண ஆரம்பிக்கிறான் .
வீட்டிலேயே ஆசிரியரை வரவழைத்து ப்ருநோவுக்கும், அவன் அக்காவிற்கும் பாடம் நடத்தப் படுகிறது. ரொம்ப வெறுத்து வீட்டை சுற்றி ஆராய ஆரம்பிக்கிறான். தூரத்தில் கூடாரங்கள் போடப்பட்டு சிலர் அங்கே வேலை செய்வதை பார்க்க நேரிடுகிறது. அவர்கள் கோடூ போட்ட பைஜாமாவில் இருப்பதை பார்க்கிறான். அவன் வீட்டில் வயதான பணியாளரும் அதே உடையில் இருப்பதை பார்த்து, தன் தந்தையிடம் பைஜாமாவில் இருப்பவர்கள் யார் என விசாரிக்கிறான். அதற்கு அவன் தந்தை. "அவர் மக்களே அல்ல, அவர்கள் ஜூய் " ("they are people, they are jews") என்று சொல்கிறார். அவனுக்கு புரியாமல் போகிறது.


இப்படியே நாட்கள் ஓட, ப்ருனோவுக்கு அந்த கூடாரங்களில் யார் வசிகிறார்கள்?, அங்கே இருக்கும் சிம்னியில் ஏன் துர்நாற்றம் வருது?என்பதை தெரிந்து கொள்ள ஆசை வருகிறது. யாருக்கும் தெரியாமல் ஆராயத் துவங்குகிறான் . அங்கே ஒரு வேலி. வேலிக்கு அந்த பக்கம் ஒரு பையன். அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பிக்கிறான். அவன் பெயர் ஷ்முள்(shmuel) என்றும், அவனுக்கும் எட்டு வயது தான் ஆகிறது என்றும், அவனை போல் மற்றவர்களும் அங்கு ஏன் அடைக்க வைத்து அடிமை படுத்தப்படுகிறார்கள் என்பது தெரியாது என்று சொல்கிறான். அவனுக்கு தெரிந்த ஒன்று அவன் ஒரு ஜூய்.
ப்ருனோ , 'தன்னை நண்பனாய் ஏற்பாயா?' என்று கேட்க அவனும் சம்மதிக்கிறான். சமயம் கிட்டும் போது ஷ்முள்க்கு ப்ருனோ சாப்பிட எடுத்து வருகிறான்.
ஒரு நாள், ஷ்முள் அவனுடைய தந்தையை காணோம் என்றும் அவனுக்கு உதவி செய்வாயா என்று ப்ருனோவை கேட்க. அவனும் 'சரி' என்று சொல்கிறான். இருவரும் திட்டம் தீட்டி, ப்ருனோ ஷ்முள் போலவே பைஜாமா தரித்து, வேலி தாண்டி செல்கிறான். இருவரும் தேடி செல்கிறார்கள். அப்போது அடைக்கப்பட்ட அடிமைகள் சிலரை கும்பலாக ஒரு அறைக்குள் அழைத்து செல்ல நடுவில் இவர்கள் இருவரும் மாட்டி கொள்கின்றனர். இவர்கள் இருவருக்கும் என்ன ஆகிறது? என்ன ஆகி இருக்கும் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ? படத்தை பாருங்கள் .

இப்படியே நாட்கள் ஓட, ப்ருனோவுக்கு அந்த கூடாரங்களில் யார் வசிகிறார்கள், அங்கே இருக்கும் சிம்னியில் ஏன் துர்நாற்றம் வருது , அதை பற்றி தெரிந்து கொள்ள ஆசை வருகிறது. யாருக்கும் தெரியாமல் போகிறான். அங்கே ஒரு முள் வேலி. வேலிக்கு அந்த பக்கம் ஒரு பையன். அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பிக்கிறான். அவன் பெயர் ஷ்முள் என்றும், அவனுக்கும் எட்டு வயது தான் ஆகிறது என்றும், அவனை போல் மற்றவர்களும் அங்கு ஏன் அடைக்க வைத்து அடிமை படுத்தப் பட்டிருகிறார்கள் என்பது தெரியாது என்று சொல்கிறான். அவனுக்கு தெரிந்த ஒன்று அவன் ஒரு ஜூய்.
ப்ருனோ , தன்னை நண்பனாய் ஏற்பாயா என்று கேட்க அவனும் சம்மதிக்கிறான். ஷ்முள் கு ப்ருனோ சாப்பிட எடுத்து வருகிறான்.
ஒரு நாள், ஷ்முள் அவனுடைய தந்தையை காணோம் என்றும் அவனுக்கு உதவி செய்வாயா என்று ப்ருனோவை கேட்க. அவனும் 'சரி' என்று சொல்கிறான். இருவரும் திட்டம் தீட்டி, ப்ருனோ ஷ்முள் போலவே பைஜாமா அணிந்து , வேலி தாண்டி செல்கிறான். இருவரும் தேடி செல்கிறார்கள். அப்போது அடைக்கப்பட்ட அடிமைகள் சிலரை கும்பலாக ஒரு அறைக்குள் அழைத்து செல்ல நடுவில் இவர்கள் இருவரும் மாட்டி கொள்கின்றனர். இவர்கள் இருவருக்கும் என்ன ஆகிறது? என்னவாகியிருக்கும்? கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ? படத்தை பாருங்கள்.....

ரொம்ப அருமையான ஸ்டோரி. அப்படியே அந்த ஹிட்லர் காலத்திருக்கு இண்டேரக்ட கொண்டு போகுது. 'ஜூய்' வா பிறந்தது தான் அவர்கள் செய்த குற்றமா நு மனம் கலங்கும். இந்த கதையில, ப்ருனோ வீட்ல வேலை செய்யும் ஒரு தாத்தா டாக்டர் என்று தெரியா வர, ப்ருனோ அவரிடம் கேட்பான், "டாக்டரா இருந்துட்டு ஏன் உருளைகிழங்கு உரிக்கிறீங்க?" அதற்கு அவரிடம் பதில் இருக்காது. சில சீன்ஸ் ரொம்ப டச்சிங்கா இருக்கு.

இதுல நடிச்சவங்க யாரு ? ப்ருனோ - ஆசா பட்டர் பீல்ட்
அப்பா (ஈவா பிரான்) - டேவிட் தேவ்லிஸ்
டைரக்டர் - மார்க் ஹெர்மன் , கதை - ஜான் பாயன் .

Wednesday, February 29, 2012





உத்தர ராமேஸ்வரம் திருகோயிலில் எங்கள் மதுர கலாநிகேத்தன் நடத்திய கூச்சுபுடி நடன நிகழ்ச்சி.

அடோல்ப் ஹிட்லர் - பகுதி 2

அடோல்ப் ஹிட்லரை பற்றி ..... தொடர்கிறது

ஹிட்லருடைய ஒன்றுவிட்ட சகோதரர் பார்த்தக் காட்சியை கேட்டால் அதிர்ச்சியாக இருக்கும் நமக்கு. ஒருமுறை எதோ தவறு செய்துவிட்ட வளர்ப்பு நாயை அடித்த அடியில், அது வீரிட்டு நடுஹாலில் சிறுநீர் கழித்துவிட்டதாம். என்ன கொடுமை ல ... ? தந்தையே இப்படி கொடூரமாக இருந்ததினாலோ என்னவோ மகனுக்கும் அதே மனநிலை போல..

ஹிட்லருக்கு பதினான்கு வயதான போது, தந்தை ச்ற்றோகே வந்து இறந்து போனார். பிறகு அவரின் பென்ஷனில் குடும்பம் சமாளித்தது. அப்பா போனதும் ஹிட்லர் தன் ஆசை நிறைவேற்றிக் கொள்ள வசதியாய் போனது. ஓவியராகி தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்க, அவர் தாயும் மனதை சமாதனப் படுத்திக் கொண்டு செலவுக்குப் பணம் தந்து ஹிட்லரை வழி அனுப்பினார். ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவுக்கு ரயில் ஏறினார் ஹிட்லர்.

வியன்னாவில் இருந்த புகழ்பெற்ற ' ஆர்ட் அகாடமி' யில் சேருவதற்காக முயற்சித்தார் ஹிட்லர். பரிட்சையிலும் கலந்துக் கொண்டார் . அவரின் ஓவியங்கள் சுமாராக இருந்தமையால் நிராகரிக்கப் பட்டார். வேறு வழியில்லாமல் கட்டடக் கலைக்கான கல்வியாவது படிப்போம் என அங்கே சேர முயற்சி எடுத்தார். அடிப்படைக் கல்வி இல்லாததினால் அங்கேயும் அனுமதி மறுக்கப் பட்டது.

வியன்னா வந்த ஓராண்டில் ஹிட்லரின் தாய் இறந்த தகவல் வர.... வாழ்கையே வெறுத்துப் போனார். பிற்பாடு, தாய் சேர்த்துவைத்திருந்த கணிசமான பென்ஷன் பணமும் வீடும் ஹிட்லருக்கு வந்து சேர .....கூடவே இன்னொரு காரியத்தையும் துணிகரமாக செய்தார். தான் இன்னும் மாணவராகத் தொடரவதாக பொய் சர்டிபிகேட்டை அரசுக்கு அனுப்பி, அம்மாவுக்கு வந்த பென்ஷன் தொடர்ந்து தனக்கு வரும் படி ஏற்பாடு செய்துகொண்டார்.
ஹிட்லருக்கு கொஞ்சம் நாடோடி தனமான வாழ்க்கையாக மாறியது . வியன்னாவில் தெருவோர டீக்கடையில் உட்கார்ந்து நாளிதழ்களை ஒரு வரி விடாமல் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அரசியல் ஈடுபாடு வந்தது அப்போது தான்.

தான் ஒரு ஓவியன் என நிருபிக்க, அவ்வப்போது வாட்டர் கலர் ஓவியங்களை வரைவதை ஹாபியாக வைத்திருந்தார். சில ஓவியங்கள் விற்கவும் செய்தன.
ஹிட்லர் யாரிடமும் மனம் திறந்து பேசுவதே இல்லை. நியாமாக அவருக்கு நிறையவே நண்பர்கள் ஏற்பட்டிருக்கவேண்டும். ஆனால், அவர் பேசாதிருந்த காரணத்தினால், ஒரு நட்புகூட அவருக்குக் கிடைக்காமல் போனது.

துணுக்குகள் -3

இயற்கையோடு
எய்வதினாலோ
இப்போது
ஆடை குறைத்தல்
நாகரீகம்
ஆராயப்படுகிறது..
மீண்டும்
ஆதாமேவாள்
ஆடைகள்
புதுபிக்கப்படுமோ !?!


என் கண்களில் வழிந்த கண்ணீர்
அவன் உறக்கத்தை கலைத்துவிட்டது போலும்
என் செல்பேசியில் அவனின் அழைப்பு மணி

அவள் சிணுங்களில்
நான் விழித்தேன்...
மனதில் ஊறிய
கட்டெறும்பினால் ....

நிந்திக்கத் தெரிந்த
மனதுக்கு
மறக்கத் தெரியவில்லை
இதயம் கல்லாய்
இருப்பதினால்..

Tuesday, February 28, 2012

அடால்ப் ஹிட்லர் - பகுதி 1

அடால்ப் ஹிட்லர் - பெயரை கேட்கும் போதே "சும்மா அதிருதுல்ல" என்று சொல்லும் வில்லன் போல கற்பனை செய்துப்பாருங்கள். உலகத்தின் இவர் ஒருவருக்கு மட்டுமே சொந்தாமான பெயர். யாருக்கும் அந்த பெயரை வைக்க இது வரை தைரியம் கிடையாது என்றே சொல்லலாம்.
"கொடூர மனிதன்" என்கிற அடை மொழி வந்ததற்கு காரணம், அவர் மற்ற நாடுகளுடன் அநியாயமாகப் போரிட்டதால் மட்டும் அல்ல. குறிப்பிட்ட சில தவறுகளைச் செய்ததால் வீழ்ச்சியடைந்த மிகப் பெரிய கமாண்டர்களில் இவரும் ஒருவர்.
ஒரு இனத்தையே அழிக்க முடிவெடுத்து, பல லட்சக்கணக்கான அப்பாவிகளை திட்டம் தீட்டி கொன்றவர் ஹிட்லர். வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைய அதுவே காரணம் ஆயிற்று .

ஜெர்மனியில் ஏதோ மூலையில் கேட்பாரற்று திரிந்த மனிதர், எப்படி பிற்பாடு உலகையே ஆட்டிப் படைக்கும் பெரும் அரக்கனாக மாறமுடிந்தது என்ற கேள்வி பலப் பேருக்கு ஏற்பட்டிருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
ஹிட்லர் ஒரு சாதனையாளர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அனால் அவர் செய்த சாதனைகள் பேசப் படவில்லை. அவர் பெயரை உச்சரித்தாலே தர்ம சங்கடமான நிலை தான் ஏற்படுகிறது.

ஹிட்லரின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் பற்றி கொஞ்சம் அலசுவோம்.

ஜனநாயக ரீதியில் தேர்தலில் முறையாக ஜெயித்து, ஆட்சிக்கு வந்தவர் ஹிட்லர் - புரட்சியின் மூலம் அல்ல.
ஹிட்லர் ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனியில் குடியேறியவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.
ஹிட்லருக்கு தன் தாத்தா யாரென்று தெரியாதாம், அதாவது ஒரு யூதரினால் ஏமாற்ற பட்டவர் தான் ஹிட்லரின் பாட்டி என்றும், அதனால் யூதர்களின் மீது வெறுப்புக் கொண்டு யூதர் இனத்தையே அழிக்க கிளம்பிவிட்டார் பேரப்பிள்ளை என்ற தகவலும் உண்டு. ஆனால் அதற்கு ஆதாரங்கள் கிடையாது. (தமிழ் சினிமாவில் வரும் பழிவாங்கும் படலம் என்ற ரீல் சுற்றுகிறதா?)

ஏழ்மையான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர் ஹிட்லர். அவரின் தந்தை ஆலோய்ஸ் ஹிட்லர் சிரமப் பட்டு உழைத்து, கஸ்டம்ஸ் டிபாட்மென்ட் ஒரு சாதாரண அதிகாரியாக உயர்ந்தார். அவர் வாழ்ந்து வளர்ந்த சூழ்நிலை, அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. சிரிப்பையே அவர் முகத்தில் காணமுடியாமல் போயிற்று. மிகமிகக் கண்டிப்பான தந்தையாக இருந்தார். சிறு வயதிலிருந்தே ஹிட்லருக்கும் அவர் தந்தைக்கும் கருத்து வேறுபாடுகள் நிறைய இருந்தன.
இவரை போலவே ஹிட்லரும் அரசுப் பணியில் சேர்ந்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், ஹிட்லர் ஓவியராக ஆகா ஆசைப்பட்டார்.
ஹிட்லரின் தந்தைக்கு குடிபழக்கம் இருந்தது. குடிவெறியில் தன் தாயை ஏசுவதும் அடிப்பதும் ஹிட்லருக்கு வெறுப்பை ஏற்ப்படுத்த பிளவு அதிகமானது.
வீட்டில் அனைவரையும் அடிமையாகவே நடத்தினார் ஹிட்லரின் தந்தை. அவரை தந்தை என அழைக்கக் கூடாது என்றும் "பெரியவர்" என்று அழைக்கபடவேண்டும் என்று உத்தரவிட்டார். அது மட்டுமல்ல, ஹிட்லரை அவர் "அடால்ப்" என்ற பெயர் வைத்து அழைப்பது இல்லை. மகனைக் கூப்பிட, அவர் விசிலைப் பயன்படுத்தினார். அவர் விசில் ஊதினால் ஓடி வந்து ' அடேன்ஷனில்' நிற்கவேண்டும்........

தொடரும்

Tuesday, February 14, 2012

துணுக்குகள் - 2

காட்டாறு
வெள்ளத்தினால்
உருண்டுவரும்
பாறைகள்
சிலது
மண்துகள்களாய்..
சிலது
கூழாங்கற்களாய் ..



அரிகாரத்தை பூசாமல்
நடித்துக்கொண்டிருக்கிறோம்
ஒவ்வொரு உறவிடம்
ஒவ்வொரு மாதிரி
உனக்காக நீ
நடிக்காமல் ..
மனம் கேட்கும்
கேள்விக்கு
பதில் இல்லை.

குறை ஏதேனும்
கண்டுப் பிடித்து
குற்றம் சாட்டப்படும்
முதிர் கன்னிகள்
முதிர்ச்சியை
மனம் ஏற்றாலும்
ஓயாது புரளி பேசும்
சமுதாயம் .
முதிர்கண்ணன்களுக்கும்
இதே நிலையோ !

Thursday, February 2, 2012

வாழ்க்கை

மூச்சை பிடித்து
மூழ்கும் சூழ்ச்சி '
யாவரும் அறியாதது .

விலை கொடுத்ததை
வாங்க வழி
தெரியாதது .

காலப் பெருங்கடல்
சுழற்றும் பேரலை
சேர்த்திடும் ஓர் கரையில் .

அந்த சாயலை கொண்டு
சாரமும் கண்டு
வாழ்த்திட துணியும் மனம்.

ஏன் ? எதற்கு? என
கேட்கும் அறிவு
இல்லாது போவோரும் ,
மனித வடிவில்
திரியும் அவனும்
மிருக இனமே!

Thursday, January 26, 2012

நண்பன் - எனது பார்வையில்

நண்பன்....
ஏற்கனவே நிறைய பேர் ஹிந்தி யில் பார்த்திருப்பீர்கள்.. திரும்ப தமிழில் என்ன நம்ம ஷங்கர் சார் சொல்லியிருப்பார் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் ., அதே காரணம் தான் எனக்கும்...சென்று பார்த்தேன்.. ஒரு வித்யாசமும் இல்லை. அதே அதே.... ஆனால் தமிழில்...ரீமேக் செய்து பணம் விரயம் செய்ததற்கு பதில் டப் செய்திருக்கலாம்.
சரி படம் பார்க்காதவர்களுக்கு ஒரு கதை முன்னோட்டம்.... இதோ...........
பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வெங்கட் ராமகிருஷ்ணன் (ஸ்ரீகாந்த்) , சேவற்கொடி செந்தில் (ஜீவா) , பஞ்சவன் பாரிவேந்தன்(விஜய்) . கூட படிக்கும் இன்னொரு வகுப்பினன் ஸ்ரீவத்சன் (சத்யன்). இவர்களது கல்லூரி நிர்வாகியாக விருமாண்டி "வைரஸ் சந்தானம் . துண்டு மீசை தான் இல்லை... அப்படியே ஹிட்லர் ரின் பிரதிபலிப்பு.
மிகுந்த புத்திசாலி என்று தன்னை தானே மார் தட்டிக் கொள்ளும் கேரக்டர்.
மார்க் ஒன்றே ஒரு மாணவன் வாழ்கையை தீர்மானிக்கும் என்று கூறி கஷ்டப் படுத்தும் மாணவர்களை , எதையும் விரும்பி செய்தால் தானாக நடக்கும் என்ற புது என்னத்தை உருவாக்கும் நமது ஹீரோ. நான்கு வருட கல்லூரி வாழ்க்கையில் அடிக்கும் லூட்டிகளும், ஏமாற்றங்களும், வெற்றிகளும் தோல்விகளும் எடுத்து சொல்லும் கதை.
வெங்கட் கு(ஸ்ரீகாந்த்) வைல்ட் லைப் போடோக்ராபர் ஆகவேண்டும் என்று ஆசை . தந்தையின் ஆசையை நிறைவேற்ற வந்து சேர்ந்து படிக்கிறார். செந்தில் (ஜீவா) வுக்கு வாழ்கையே பயம். சின்ன வயதிலிருந்தே தன் குடும்ப பாரத்தை நினைத்து பயம்..... பாரி கு (விஜய்)எந்த வித கவலையும் இல்லை. .. அவரே முதலாக வருகிறார் (ஹீரோ ஆயிற்றே) ...
சத்யன் எபோதும் இவர்களை இன்சுல்ட் செய்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர்க்கு புத்தி புகட்ட ஆசிரியர் தினம் அன்று மேடைபெச்சுக் காக தயார் செய்திருக்கும் கட்டுரையை கொஞ்சம் மாற்றி எழுதுகிறார் பாரி. அதுவே சவாலை முடிகிறது.. கடைசியில் வெங்கட் போடோக்ராபர் ஆகிறார? செந்தில் படித்து முடித்து வேலை கிடக்கிறதா ? நம்ம பாரி என்ன ஆகிறார் என்பது தான் கதை.
மேடை பேச்சு ...குலுங்க குலுங்க சிரிக்க வைத்தாலும்.... ஆங்கங்கே நெளிய வைக்கிறது... "கற்பழிப்பு"என்ற வார்த்தைகளை பிள்ளைகள் தமிழ் அகராதியில் தேடாமல் இருந்தால் சரி.
ஷங்கர் சார் கதை யை காப்பி அடித்தார் சரி... ஹிந்தி படத்தில் வரும் கேரக்டர்களின் பாடி லாங்குவேஜ் சையும் காப்பி அடிக்கவேண்டுமா என்ன ? அதற்க்கு பெயரையும் மாற்றாமல் இருந்திருக்கலாமே?
கதையின் நாயகி ரியா ( இலியான ) பாட்டுக்காகவும் , நம்ம ஹீரோ வுக்கு ஜோடி அவளாவே... இருபினும் அவர் பேசும் தமிழ் கதிர்க்கு கொஞ்சம் குளிர்ச்சி தான்.. (தமிழ் பேசும் பெண்களே தமிழ் ஒழுங்காக பேசுவதில்லை ).
இசை: ஹாரிஸ் ஜெயராஜ் . இரண்டு பாடல்கள் கேட்க்கும் படியாக இருக்கிறது.... " என் பிரெண்ட் அ போல யாரு மச்சான்" , " அஸ்கா லஸ்க " நல்ல இருக்கு.
அது என்ன கடைசியில் விஜயின் உண்மையான பெயர் இப்படி இருக்கிறது என்பது புலப் படவில்லை " கொசாக்கி "பாப்பு " பசப்புகழ்". கதையில் ட்விஸ்ட் இருக்கும் சரி.. பெயரிலேயே ட்விஸ்ட் ஆ ?
எது எப்படியோ..... ரெண்டே முக்கால் மணி நேரம் சுபராக செல்லும் ஒரு ஜாலியான படம்

Tuesday, January 17, 2012

கண்மணியே ஏன் மறந்தாய்

தோள்களிலே உனை தாங்கி
தாலாட்டு பாடினேனே
வாயினிலே இட்ட சோறு
வயிற்றுக்குள் போவதற்குள்
அழு குரல் கேட்டவுடன்
அன்னத்தை தள்ளி வைத்து
அணைக்க வந்த கரங்களையே
ஏன் மறந்தாய் கண்மணியே !

கண்ணுறக்கம் இல்லாமல் - என்
கால்களிலே தான் சுமந்தேன்
நோய் நொடி அண்டாமல்
நாளாகப் பார்த்திருந்தேன்
காயாத கனியமுதே
கண்மணியே ஏன் மறந்தாய் !

தேனாக பேசுவியே
தெவிட்டாத கனி அமுதே
மானாக ஓடி வந்து
மடியினிலே தலை புதைப்பாய்
தாயாக பெற்றெடுத்தேன்
தங்கமே என் கற்கண்டே
சீராக பார்த்தேன் உனை
சீற்றம் ஏன் கொண்டாயடா !

வயதாகி போனதுவோ
வழித் தடங்கல் மறந்தனவோ
கை கால்கள் விழுதனவோ - உனக்கு
பாரமாக ஆகினேனோ
குழந்தையாய் ஆனேனடா
குறைகளை அதை பாராயடா
குமரனாய் இருந்து விட யாரும்
வரங்களை பெற வில்லையடா !

முது வயதும் ஒரு நாள் வந்திடுமே
உன்னால் மறுக்கயிலாதடா
என் அருமை மகனே நீயும்
எனை மறந்து போனாயடா
காலன் என்னை தொட்டப் பின்பும்
கண்மணியே உனை மறவேனடா!

Thursday, January 12, 2012

malaysia vasudevan hits

http://youtu.be/jGTrZDp4c1A

http://youtu.be/kiDAKd2Jd48

http://youtu.be/iETA1aeGKts

http://youtu.be/B4T0fjYELw8

http://youtu.be/jn7CZrK39Aw

http://youtu.be/a0tXKdL6Mbk

http://youtu.be/Q8MPSbmZjy4

http://youtu.be/3J095E4z16I

http://youtu.be/IhgbBxyZB0s

http://youtu.be/i4Hw9pVkGhg

Sunday, January 8, 2012

என் மனதில் நின்ற ஒரு சம்பவம்

ஷேர் ஆட்டோ காரன் "எம்மா குழந்தைகளை கூட்டிகிட்டு கீழே இறங்குமா " என்று சத்தம் போட்டார். அதற்க்கு அந்த பெண்மணி "நான் பசங்களுக்கும் பைசா குடுக்கிறேன் பா" என்று சொல்லி பிள்ளைகளை அமரவைத்துக்கொண்டர். கை பேசியில் 'எங்கே? எங்கே?' என கேட்டு வர அவருக்கு அந்த இடம் புதிது என்று கணிக்க முடிந்தது. அந்த பெண் பிள்ளைகளும் "அப்பாடா உட்கார இடம் கிடைத்து ரொம்ப சந்தோசம் ல "என்று பேசி சிரித்துக் கொண்டு வந்தார்கள். அதில் ஒரு குழந்தை பேசுவதில் கொஞ்சம் வித்யாசம் இருந்தது. அந்த குழந்தை ஆட்டிசம் குழந்தை போல தோன்றியது...
கொஞ்சம் இருட்டியும் விட்டது.. அப்போது அந்த பெண் முகத்தில் சின்னக் கவலை தென் பட நானே பேச துவங்கினேன். "நீங்க எங்க போகணும் ?" என் முதல் கேள்வியாக இருந்தது. அதற்க்கு அவர்கள் "தெரியல ங்க எதோ அட்ரஸ் கொடுத்திருக்காங்க.. வேலம்மாள் ஸ்கூல் எங்க தெரியுமா ?" என்று கேட்டார்கள். அதற்க்கு நான் "நான் இறங்கும் இடத்திலிருந்து கொஞ்சம் ௨௦௦ மீட்டர் தொலைவு தான் , ஆட்டோ காரர் சரியாக இறக்கி விடுவார் என்றேன். ஒரு சிறு மௌனத்திற்கு பிறகு எனக்கு இருப்பு கொள்ளாமல் அந்த குழந்தையைப் பற்றி விசாரித்தேன். "அந்த குழந்தைக்கு எதாவது பிரச்சனையா ?" என்று சன்னக் குரலில் கேட்டேன். அதற்கு அந்த பெண்மணி அந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கும் பார்வை இல்லை என்றும் , இருவரும் பள்ளி தோழிகள் , அதில் ஒரு குழந்தையை தன்வீட்டில் வந்து தங்கி இருந்ததாகவும் , அவளை அவள் வீட்டில் வந்து விடுவதற்காக வந்ததாகவும் சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் என் மனம் கனக்க ஆரம்பித்தது .... என்ன சொல்வது என்றே புரியவில்லை. ... அந்த தாயிக்கு ஏற்பட்ட படபடப்பு புது இடம், இரண்டு கண் தெரியாத ஆறு வயது மதிக்கத் தக்க குழந்தைகளுடன் ஐந்து வயது குழந்தை. அவளுடன் பேரம் பேசும் ஷேர் ஆட்டோ காரன்.....மனதில் ஆயிரம் ரணமிருந்தும் புன்னகை மாறாத அந்த தாயின் முகம் என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது.

Monday, January 2, 2012

மனதின் ரீங்காரம்

கூடிநின்ற ஒவ்வொரு தருணமும்
பேசிக்கொண்டிருக்க தோன்றிற்று
வெறுமனே வார்த்தைகளால் மட்டுமல்ல
மனதாலும் கண்களாலும் ..
சொல்லாது போன வார்த்தைகள்
இன்னும் தேங்கிக் கிடக்கிறது
அலைகழித்தபடி கடக்கின்றேன்
தென்னங்கீற்றினூடே நுழைந்த காற்றின்
எழுந்தும் ஓசை போல
எதோ ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்
என் மனது - அதனால்
வெளிவராமல் இருப்பது வார்த்தைகள்
மட்டுமல்ல என் வாழ்க்கையும் தான்