Monday, March 14, 2011

பிச்சைகாரனின் ஆறுதல்

இருள் சூழ்ந்திருக்கும் நேரம்
நடைப் பாதையில்
நாய்களோடு நாங்கள்
கொசுக்கள் தாலாட்டுப் பாடும்..
நட்சத்திரங்கள் கண் சிமிட்டும் ..
வாகனம் பறந்துப் போகும் - போகையில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
சிற்றாடையும் பறக்கும் ..

லட்டியை வைத்துக் கொண்டு
லொட்டு லொட்டென்று
தட்டிவரும் கூர்க்கா..
அவருக்கும் ஓர் தைரியம்
எங்கள் துணையில்
அவர் அலைவதில் ..

வீடில்லை வாசலில்லை - அதனால்
வரியில்லை செலவுமில்லை ..
வட்டிலிலே சோறு இருக்கும்
அதுவும் எப்பவும் நிரந்தரம் இல்லை

இப்படி இருப்பதில்
சுகமிருக்கு..
கட்டை சாய்ந்தால்
தூக்கிப் போட
குப்பை லாரி இருக்கு ..

கரம் பிடிக்க

சாலையை கடக்கும் போது
முதல் முதலாய்
பற்றிய உன் கரங்கள் ..
வண்ணத்துப் பூச்சிகள்
நெஞ்சுக்குள் படபடக்கும்
ஓர் உணர்வு ...
நீண்டுப் போகாதோ என
வேண்டுகிறேன் - உன்
கரங்கள் எனை விடாமலிருக்க ..

Sunday, March 13, 2011

கடல்

அலையாய் ஓடி வந்து

அணைத்திடும் உன் கைகள்

அன்னையாய் இருந்து

உலகை காக்கின்றாய்

உன் மடியினில் தான்

எத்தனை உயிரினங்கள்

ஓர் செல்லிலிருந்து

பல செல் வரையிலே

உன் ஆழத்தை கண்டுக் கொள்ள

பல ஆண்டுகள் ஆனதுவே

உன் சீற்றதினாலே

பல உயிர்கள் போனதுவே

உப்பு நீராய் இருந்திடினும்

சுவையாய் மழை நீர் தருகின்றாய்

சூரியனுக்கும் உனக்கும் ஒப்பந்தமோ

சுத்திகரிப்பு ஆலை பல வைத்துள்ளாய்

பூமியிலுள்ள தீவிரவாதம் போல்

உன்னுள்ளும் இருக்கும் எரிமலைகள்

குண்டுகள் போல் நெருப்பை கக்கிடினும்

பாறைகளாய் அதனை மாற்றுகின்றாய்

காற்று தானோ உன் கணவன்

அவன் அசையும் படியே அசைகின்றாய்

கோபம் என்று வந்து விட்டால்

பேரலையாய் மாறி அழிகின்றாய்

படர்ந்து கிடக்கும் பூமியிலே

முக்கால் பங்கு நீ தானே

பெயர் தான் உனக்கு வெவ்வேறு

நீ இன்றி இங்கு பூமி எது.....?!


காதலை சொல்லிவிடு

கண்ணை நோக்கின்

மனதை பரிகொடுத்தாய்

என்னை நோக்கின்

மனதினை யாசித்தாய்..

பின்னர்

யாசித்தலும் நேசித்தலும்

மறைமுகமாக....

மனதார பகிர்தலே

காதல் ..

மனதிற்குள்ளே

வைத்திருப்பதல்ல..

கனமாக இருக்கும்

காதல்

கணமாய்

மாறிவிடும்

நீ

பகிராமல் போய்விட்டால் ...

தவறேதும் இல்லையடி

அதனை

மனமுவந்து சொல்லிவிடு

உன் மௌனம் வலிக்குதடி

அச்சத்தை தவிர்த்துவிடு ....

நினைவுகள்

உன் கண்களின் கருணையில்...

கனிந்த வார்தைகைளில்...

முத்தங்களின் எச்சிலில்

வழிகிறது துரோகம்.

'மழுப்பிப்' புன்னகைக்க

மனம் மறுக்கிறது ..

என் இயலாமையை

உன் கன்னத்தில் வளர்ந்த

முடிகளாய் நினைத்து

சவரமிட்டுவிட்டாய்

என் பார்வையிலும்

வார்த்தையிலும் சவரமிட்ட

கத்தியைப் போல்

கூர்மயில்லை போலும்

போகட்டும்

காலம் எனும் கடவுள்

புரியவைக்கும் ...

மறந்து போகட்டும்

உன் நினைவலைகள்

அலைகளால் அழிக்கப்பட்ட

காலடி சுவடுகளாய் .....

துணுக்குகள் 1

உன் பிம்பம்

என் மனதில்

சுக்கலாகின..

நீ சொல்லெனும்

கல்லை

விட்டெறிந்ததால் ..

நிலவே

நீ

பிரகாசி

இருளை

அகற்று ..

உன் பிம்பம்

என் கண்ணுக்குள்

நுழைவாயிலாய்

இதயம்

வசிக்கும்

இடமாய்..

தமிழ்

ஆங்கிலத்தை

பார்த்து சொன்னது

நான் தொலைந்தேன்

உன்னால் ..

நீ வளர்ந்தாய்

என்னால் ...


ஆகையால் அன்பு செய்

கண்டவுடன் காதல் என்பார் - சிலர்

காணாமலே காதல் என்பார்

காதலே உண்மையாகும் - அதில்

காமமும் கலந்திருந்தால்

காலத்தால் அழிந்த காதல் - பல

காலகாலமாய் கதையாய் உண்டு

லைலா மஜ்னு காதல் என்று

லயமாய் பேசி சிரிப்போர் உண்டு

ஹோர்மோன் செய்யும் வேலையினாலே

பேயாய் மனமே அலைந்திடுதே

காதல் இல்லையேல் உலகம் இல்லை -என

பொய்யாய் திரியும் மனிதர்களே Align Left

காதல் எனப்படும் மடமை ஒழித்து

அன்பை கொடுத்திட முற்படுவோம்

அன்பு என்பது அற்புதச் சொல்

அதற்கு சாதி மதங்கள் தேவை இல்லை

அன்பு என்பது சக்தி தரும் சொல்

அது மனிதன் மிருகம் பார்ப்பதில்லை

உலகம் இயங்குவது அன்பாலே

மனிதம் வளர்ப்போம் அதனாலே ..


Tuesday, March 8, 2011

மகளிர் தினம்

ஒரு முகநூல் நண்பருக்கும் எனக்கும் நடந்த ஒரு உரையாடல் ..அதை இங்கு பகிர்ந்துள்ளேன்


என்ன இது ??????

by N Suresh Chennai on Tuesday, March 8, 2011 at 6:26pm
மகளிர் தினம் - என்றொரு நாளை கொண்டாட என்ன தேவை என்று உலகமகளிர் எல்லோரும் தீர்மானம் எடுக்கும் பொந்நாள் விரைவில் வர எனது பிரார்த்தனைகள்!!!


பெண்ணை அதிசயம் என்று கண்டு வியந்து வணங்கிய காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலம் தான் ஆண்களில் பலர் மனிதர்களாக இருந்திருப்பார்கள்.

நானும் அந்த காலத்தில் காட்டுமிராண்டியாக பிறந்திருக்கலாம்!

மகளிர் தினம் கொண்டாடும் கொடுமையை காணும் காலத்தில் நான் ஏன் பிற்ந்து வாழ்கிறேனோ!!!

பாசமிகு - அப்பா தம்பி அண்ணன் என இனிய உறவுகளை மறந்து பெண்ணியம் பேசும் சில சகோதரிகளோடு எனக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், தில்லி போன்ற நகரங்களில் பெண்களாள் பாதித்த ஆண்களின் அமைப்புகளைக் கண்ட வியப்புகள் என்னில் இருப்பினும்.... பெண்கள் வணக்கத்திற்கும் மரியாதைக்கும் உரியவர்களே!!!!

பெண் தெய்வங்களே உங்களை வணங்குகிறேன்!

அம்மா சித்தி தங்கை அக்கா பெரியம்மா அத்தை மாமி மனைவி நாத்தனார் மகள் என எல்லோரும் எல்லோருக்கும் வேண்டும்; ஆனால் பிறக்கும் குழந்தை மட்டும் "ஆண் குழந்தை போதும்| என்ற மடமையான ஆசை/எண்ணம் 100%

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இல்லாமல் இருக்கட்டும்! இவ்வுலகத்திற்கு நிச்சயம் கிடைக்கும் வெளிச்சம்!


நான் சொன்னது :
"நண்பரே பெண்களை தெய்வமாக வணங்குங்கள் என்று நாங்கள் கோரிக்கை விடுக்க வில்லை.
நாங்கள் மனித இனத்தை சேர்ந்தவர்கள், எங்களுக்கும் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கம் அவளாவே.
ம்ம்.. உண்மை..போதுமான அளவில் உரிமைகளும் பெற்றுவிட்டோம் என்பதில் ஐயமில்லை.... எவ்வளவோ ஆடவர்கள் செய்யும் அராஜகங்கள் உங்கள் கண்களில் தென்ப்பட்டும் ஏன் பெண்கள் மட்டும் "அப்படி செய்கிறார்கள் இப்படி செய்கிறார்கள்" என்று குறை கூறுகிறீர்கள். சம உரிமை என்பதென்ன ? எல்லாவற்றில்லும் தானே .. அதற்காக கீழ்போக்கு வழியில் செல்லும் பெண்களை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. ஆண்களுக்கான ஈகோ தழைத்தோங்கி நிற்கத்தான் செய்கிறது."

அவர் சொன்னது :
"லைக்ஸ் - இட்ட அனைவரும் தங்கள் கருத்துக்களையும் இடலாமே? ப்ளீஸ்.... ஏன் ஆண் பிள்ளைகளை இன்னமும்ம் ஏங்குகிறது இந்த சமூகம்? திருமணச்செலவாலா? பெண் பிள்ளைகள் தானே பாசத்தோடு இன்று பெற்றோர்களுக்கு சேவை செய்கிறார்கள்? பெண்கள் ஏன் வெறுக்கப்படவேண்டும்??? உங்கள் கருத்துக்களை தயவாக இடுங்கள். நான் புரிந்து கொள்ள் வேண்டும்.. இந்த களத்தில் உபயோகமான விவாதத்தை நாம் நடத்தி நமது கடமையை நிறைவேற்றுவோம் வாருங்க்ள்...ப்ளீஸ்... பெண்மையை மதிக்கும் நல்லோர்களின் கருத்துக்களை காத்திருக்கிறேன்.
வசுமதி - தாய் தந்தையர்களை முதியோர் இல்லங்களில் விட்டு விடும் கொடுமை மாறினால் கொஞ்சம் மனிதம் வருமோ? - என்று தோன்றுகிறது.

இந்த சமூகம் என்ன பெண்களுக்கு கொடுப்பது? நீங்கள் எடுத்தக் கொள்ள வேண்டிய உரிமைகளை இனி பறிக்க வருபவர் யார்???

பெண்களுக்கு இன்னமும் முழுமையாக கல்வியும் சட்டம் சம்பந்தப்பட்ட விழுப்புணர்வும் இதற்கொரு வழி வகுக்குமா?"

நான் சொன்னது:
"பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடும் அவலம் சுயநலம் குறைந்தால் தான் முற்றுப் பெரும்.
யாரும், யாவரும், எதுவும் எதையும் தடுத்திடவில்லை. ஆதிகாலத்தில் பெண்கள் தானே சௌகர்யமாய் கூடாரத்தில் புகுந்துக் கொண்டார்கள். அதற்கு அவர்கள் உடல் ரீதியாக வரும் இயற்க்கை உபத்திரவங்களும் ஒரு காரணம். கூடாரத்தைப் பாதுக்காக்கும் ஆண்கள். அதுவே காலப்போக்கில் வழக்கமாகி விட்டது. பின்பு அதை கூடாரத்தை விட்டு வெளியே வர போராட்டம் நட்த்தவேண்டியதாகி விட்டது. அதற்கு முட்டுக்கட்டையாய் நின்றது ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான்.
என்ன படித்து, என்ன பயன்? வாழ்க்கை என்பதென்ன என்ற தெளிவு பிறக்கும் வரை ஒன்றும் நடவாது.
பெண்களும் ஆண்களும் ஒரே
உயிரினம் .....அது புரியவேண்டும் முதலில்."
அவர் சொன்னது :
"வசுமதியின் எழுத்தில் காணும் வீச்சு எனக்கு பிடித்திருக்கிறது, வாழ்த்துக்கள். மனித இனத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் இவர்களில் பெண்கள் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள் என்று உணர உலகின் ஏதாவது ஒரு பெண்ணின் சுயசரிதம் வாசித்தால்/அறிந்தால்/கேட்டால் போதும்!!!
அன்பினிய தோழி வசுமதி, உங்கள் எழுத்துக்களால் இன்றைய பெண்களின் நிலமை முன்னேற தொடர்ந்து எழுத உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்! இறைவன் உங்களை தொடர்ந்து ஆசீர்வதிக்கட்டும்! நிச்சயம் ஒரு நாள் இந்த சமூகம் உங்கள் எண்ணங்களையும் எழுத்துக்களையும் போற்றும், மதித்து செயலாற்றும் என்று உறுதியாக நம்புகிறேன். வெற்றி நிச்சயம்!"


Sunday, March 6, 2011

பிள்ளைகள் - சொந்தக் கருத்து (தொடர்ச்சி)

திருட்டு - அதை பற்றி பேசுவோம். கோடிக் கோடியாகக் கொள்ளை போகிறது, இதெல்லாம் ஒரு விஷயமா என்று தட்டி கழிக்கும் விஷயம் அல்ல.

பிள்ளைகள் லூட்டி அடிப்பது இயல்பான விஷயம் தான். அதுவே விஷமத்தனமான விஷயம் என்றால் என்ன செய்வது?

முதலில் "இப்படி பிள்ளைகள் விஷமங்கள் செய்வார்களா / செய்கிறார்களா" என்று பெற்றோருக்கு தெரிந்திருக்க வேண்டும் . பெற்றோர்களின் கவனக்குறைவால் தான் பிள்ளைகளுக்கு திருடும் பழக்கம் ஏற்படுகிறது என்பது உளநூலின் கருத்து.

சில குழந்தைகள் செய்யும் திருட்டு ஏன் என்றே தெரியாமல் இருக்கும். திருடும் பொருள் அவர்களுக்கு தேவைப் படாமலும் இருக்கலாம். ஆனால் எதோ ஒரு உந்துதல் காரணமாக திருடச் செய்வார்கள்.

முதலில் குழந்தை திருட ஆரம்பிப்பது தெரிய நேரிட்டால், ஏன்? எதற்கு ? அப்படி செய்வது தவறு என்று அறிவுரை கூறுவது நல்லது. அதுவே இரண்டாவது முறை செய்தானாயின் , கண்டிப்பது, அல்லது எங்கே திருட நேர்ந்ததோ அவர்களிடம் பெர்சனலாக மன்னிப்பு கேட்கவைப்பது நல்லது.

மேலும் மேலும் திருட்டு நிற்காமல் போனால் ஒரு ஆலோசகர் (சைகொலஜி / ச்ய்கியற்றிஸ்ட் )

அறிவுரை கேட்டு இயல் படுவது நல்லது.

நிறுத்தாமல் திருடும் பழக்கம் உள்ளவர்கள் க்லேப்டோமானியா (kleptomania) என்னும் நோயினால் பாதிக்க பட்டிருக்கலாம்.

அதை ஏன் செய்கிறார்கள் என்ற காரணம் தெரியாமல் செய்வார்கள். மன எதிர்ப்பு/ கட்டுப்பாடு

இல்லாமல் போவதால்,ஏற்படுகிறது . மன அழுத்தம், விசாரம் இருக்கும் காரணத்தினால் வருகிறது.

அடுத்து டிபிகல் தெப்ட் (typical theft) செய்பவர்களும் உண்டு. அவர்கள் செய்யும் திருட்டு பழிவாங்கும் உணர்ச்சியினாலோ, கோபத்தினாலோ, பெற்றோரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவோ, முறைகேடான வகையில் ஈடுபடுவதற்கான முயற்சியில் இறங்கவோ இருக்கலாம்.

பெற்றோரின் கவனம் போதுமல்லாமல் இருப்பதும், நெகடிவாக(negative) கவனம் செழுத்துவதும் ஒன்று தான்.

உதாரணத்திற்கு, வேலை முடிந்து வரும் போது குழந்தைக்கு வாங்கி வந்து, அவர்களுக்கு போதுமான நேரம் ஒதுக்காமல் போவது அவர்களுக்கு வெறுப்பை அதிகரிக்கும்.

ஆகையால் பெற்றோர்கள் கவனத்திற்கு, பிள்ளைகளை பெற்றுவிட்டால் மட்டும் போதாது.. .. கவனம் தேவை.


Friday, March 4, 2011

நடுநிசி நாய்கள் - எனது பார்வையில்

நடுநிசி நாய்கள் - எனது பார்வையில்

பாரதிராஜாவின் "சிவப்பு ரோஜாக்கள் " க்கு பிறகு வந்த சைகொலோஜிக்கள் த்ரிளர்.
இப்போது சிவப்பு ரோஜாக்கள் படம் பார்த்தாலும் மனம் கொஞ்சம் ட்ரம்ஸ் வாசிக்கத்தான் செய்யும். அப்படிஇதயம் ட்ரம்ஸ் வாசித்தவர்கள் தயவு செய்து இந்த படத்தை பார்க்கவேண்டாம்.
என்னடா எடுத்த உடனே இப்படி பீதியை கிளப்புறீங்க, எல்லாம் கேள்விபட்டது தான் என்று சொல்கிறீர்களா ?


சரி ..சொல்றேன் .. அதுக்கு முன்னாடி இந்த கதைக்கு பின்னாடி இருக்குறவங்கள பத்தி சொல்றேன்.
இயக்கம் : கௌத்தம் வாசுதேவன் மேனன்.
நடிகர்கள் : சமீரா ரெட்டி, வீர பஹு, தேவா, ஸ்வப்னா அப்ரகாம், சமந்தா.
தயாரிப்பு: போட்டான் கதாஸ் ப்ரொடக்ஷன் ( குமார், ஜெயராமன், மதன்)
பிப் -18- 2011- வெளியானப் படம்.


துணுக்குகள் : சமீரா ரெட்டி யை தவிர மற்ற அனைவரும் அறிமுகம். (ஆகையால் சிவாஜி range ku எதிர்பார்க்காதீர்கள்.), தெலுங்கிலும் "ERRA GULABILU" மொழி மாற்றம் (dub) செய்யப்பட்டுள்ளது,
கதைக்கு செல்வோமா ?

சமீர் (வீரா) கதையின் நாயகன், சின்ன வயசுலேயே அம்மா இறக்குறாங்க. மும்பையில் அப்பா வளர்ப்பில் வளர்கிறான். . அப்பா ஒரு சைக்கோ. அதை மிகை படுத்தி காட்டவில்லை . அதனால் பாதிப்படையும் சமீர். அவன் வீட்டில் எந்நேரமும் கும்மாளம், ஒரு சின்ன சிவப்பு நிற ஏரியா மாதிரி திகழ்கிறது. எட்டு வயதிலேயே பார்க்க கூடாததும் அவன் கற்பனை செய்ய முடியாதளவு அனுபவிக்கவும் செய்கிறான்.
அதை பார்க்கும் நமக்கும் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது.
அந்த சூழ்நிலையில் வளர்ந்தமையால் அவனுக்கு மனச்சிதைவு ஏற்படுகிறது அவனுக்கு பதிமூன்று வயதில் .
பக்கத்துவீட்டு பெண்மணி மீனாக்ஷி (ஸ்வப்னா),அறிமுகமாகிறாள். சமீரின் மேல் அனுதாபப்படுகிறாள். திருட்டுத்தனமாக அவன் வீட்டை நோட்டமிட, அதிர்ச்சியடைந்து அங்கிருக்கும் அனைவரையும் போலீஸ் சில் ஒப்படைக்கிறாள். சமீர் அனாதையாக அவளிடம் தஞ்சம் அடைகிறான் அங்கே வீரா என்று அவளால் அழைக்கப் படுகிறாள்.
வீராவுக்கு மீனாட்சியை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறான். அதை மனதிலேஅடக்கி வைத்து, எரிமலைப் போல் வெடித்து சிதர்கிறது.
மீனாட்சியை அம்மா என்று அழைத்தாலும் 'அனைத்தும் அவளே' என்றாகிறது. யாருக்கும் விட்டுத் தர மனம் இல்லாமல் போகிறது.
அந்த சம்பவத்திற்கு பிறகு, மீனாக்ஷி தனக்கொரு துணை தேடிக் கொள்ள நினைக்க, அவளை விரும்பியவனை மணம் முடிக்கிறாள்.
வீரா தன் கட்டுபாட்டில் இல்லாமல் போகிறான்.
மீனாக்ஷி கணவனை கொல்கிறான். ஆக்சிடேண்டலி மெழுகு வத்தி விழுந்து தீ பிடித்து எல்லாம் பற்ற மீனாக்ஷியை காப்பாற்றுகிறான்.

மீனாட்சியுடன் சென்னை வருகிறான்.
பத்தாம் வகுப்பு சென்னையில் தொடர, அதில் ஆர்வம் இல்லாமல் போகிறது.
சென்னையில் ஒரு பெரிய பங்களா ஆள் நடமாட்டம் அதிகமில்லா இடம்.. துணைக்கு நான்கு ஐந்து நாய்களுடன் நாயாக அவன்.
சென்னையில் வேட்டை ஆரம்பமாகிறது. வலை தளம் மூலம் பெண்கள கவர்கிறான். வீடிற்கு அழைத்து வருகிறான். அங்கே அந்த பெண்கள் கொல்லப்படுகிறார்கள்.யாரால் என்பது சஸ்பென்ஸ்.
சச்பன்ச கடைசியில சொல்றேன் ..
ஹீரோயின் சுகன்யா (சமீரா ரெட்டி ) பாதி படத்துக்கு மேல் தான் வராங்க. அவங்க வீராவோட பத்தாவது படிச்சவங்க(இந்தப் படத்துல ). அவங்கள பார்த்ததும் நம்ம ஆளுக்கும் கண்டதும் காதல். அவளை ட்ராக் பண்ணி பிடிக்கிறான். அதில் சில போலீஸ்காரர்கள் கொல்லப்படுகிறார்கள். துப்புத் துலக்க வருகிறார் விஜய் ஏ சி (தேவா)
சமீரா நன்றாக அரை வாங்கி இருக்கிறார் , ( அடுத்த படத்தில் வீரா நீங்க உஷார்...., பதிலுக்கு பதில் கிடைத்தாலும் கிடைக்கும் ).
சுகன்யா தப்பிக்க நினைக்கும் போது சஸ்பன்ஸ் உடைகிறது. மீனாக்ஷி நெருப்புக் காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, எட்டு மாதத்திற்கு பின் இறக்கிறாள்.
சமீர் ,வீரா, மீனாக்ஷி அம்மா மூன்று பெர்சனாளிடீஸ் (மல்டிப்பல் பெர்சனாலிட்டி) யோடு இருக்கிறான். வீரா சாந்த சொருபி, தனக்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணத்தில் தேடுகிறான், சமீர், அவனுக்கு நடந்த கொடுமையினால் ஏற்பட்ட வக்கிரத்தோடு, மீனாக்ஷி அம்மா பலிக்கு பலி தீர்த்தல் என்னும் கோணத்தில் வெளிப்படுகிறாள். தனக்கு வாய்த்தத் துணையை சமீர் கொன்றான், அவனுக்குத் துணை வேண்டாம் என்று அந்த கிள்ட்டி கான்ஷியஸ்.
கடைசியாக, சமீரா தப்பிச் செல்வதற்கு முயல, விஜய் (தேவா) காப்பாற்றுகிறான்.

இந்த படத்தின் நல்ல அம்சங்கள்

* பேக் கிரௌண்ட் ஸ்கோர் இல்லாமல் அவ்வளவு விறுவிறுப்பாக செல்கிறது . திகில் ஊட்டுகிறது. நாச்சுரல் சவுண்ட் எபக்ட்ஸ்- திரு ரெங்கநாத் ரவி அவருக்கு கண்டிப்பாக "ஒ" போடவேண்டும்.
* சமீரா வின் நடிப்பு
* சில இடங்களில் இது ஏன் ? எப்படி ? என்ற கேள்வி எழுந்தாலும் ஒரு கம்ப்ளிஷன் இருக்கு.
* டூயட் இல்ல .... ஆனால் "கிஸ் " கள் பல.

கெட்ட அம்சங்கள்
* சில இடங்களில் மிக கீழ்மையாக (வல்கரிட்டி ) காட்டப்பட்டிருக்கு.
* இலை மறைக் காயை சொல்லவேண்டியதை அதிகமாகவும், சொல்ல வரும் கருத்தை குறைவாகச் சித்தரித்து இருப்பதால் அடிப்பட்டுவிடுகிறது.
* வீரா வின் வேடம் கொஞ்சம் அவருக்கு ஜாஸ்தி தான் . இருந்தாலும் ட்ரை செய்திருக்கிறார்.
* எறிந்த மீனாக்ஷி வேடம் கொஞ்சம் பயமுறுத்தவே செய்கிறார்.
* ஓரினசேர்க்கை பற்றி தெரியாதவர்க்கும் பாடம் கற்றுத் தருவது போல் உள்ளது.

கடைசியாக .....
இப்படி ஒரு சுப்ஜெக்ட் ட தைரியமா தேர்வு செஞ்ச கௌதம் மேனன் க்கு ஒரு "ஒ"
பலருக்கு தெரியாத விஷயங்களை வெளிக் கொண்டுவருவது நல்ல செயல் தான் இருப்பினும், அதை டைஜெஸ்ட் பண்ணிக்கிற அளவு மனசு வேண்டும் . அது நம் நாட்டில் குறைவுதான்,
."மனச்சிதைவு " உள்ளவர்கள் அனைவரும் இப்படி இருப்பார்கள் என்று சொல்லமுடியாது என்று கடைசியாக டாக்டர் சொல்லும் அட்வைஸ் மன ஆறுதல்.

மொத்தத்தில் எதையும் செரிமானம் செய்துக் கொள்ளும் மனம்,அதாவது ஏற்கனவே பல ஆங்கில சைக்கோ த்ரில்லர்
பார்த்தவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.

அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .

Wednesday, March 2, 2011

PSYCHOLOGY OF TERRORISM

WHY INDIVIDUALS BECOME TERRORISTS OR ENGAGE IN TERRORISM?

PSYCHOLOGICAL ANALYSIS.


Among the key psychological factors in understanding whether, how
and which individuals in a given environment will enter the process of
becoming a terrorist are motive and vulnerability. By definition, motive
is an emotion, desire, physiological need, or similar impulse that acts as
an incitement to action, and vulnerability refers to susceptibility or
liability to succumb, as to persuasion or temptation
.
One’s motivation for engaging in terrorism is often presumed to be the
“cause” or ideology of the group. However, as Crenshaw (1985)
notes, “the popular image of the terrorist as an individual motivated
exclusively by deep and intransigent political commitment obscures a
more complex reality.” That reality is that motives to join a terrorist
organization and to engage in terrorism vary considerably across
different types of groups, and also within groups – and they may change
over time.
Martha Crenshaw (1985) for example, suggests that there are at least
four categories of motivation among terrorists: (1) the opportunity for
action, (2) the need to belong, (3) the desire for social status, and (4)
the acquisition of material reward. Post (1990) has gone even further
to suggest even that terrorism is an end unto itself, independent of any
stated political or ideological objectives. His argument is that “the cause
is not the cause. The cause, as codified in the group’s ideology,
according to this line of reasoning, becomes the rationale for acts the
terrorists are driven to commit. Indeed, the central argument of this
position is that individuals become terrorists in order to join terrorist
groups and commit acts of terrorism” .
The quest to understand vulnerabilities should not be confused with a
search for the “terrorist personality” (Horgan, 2003). Horgan (in
press) has framed the issue of vulnerability in the perhaps most lucid
and useful way as “factors that point to some people having a greater
openness to increased engagement than others.” Based on a review of
the existing literature three motivational themes - injustice, identity, and
belonging - appear to be prominent and consistent. These themes also
relate to one’s potential openness or vulnerability.

Injustice: Perceived injustice has long been recognized a central factor
in understanding violence generally and terrorism specifically, dating
back to some of the earliest writings. In the mid-1970s, Hacker (1976 )
concluded that “remediable injustice is the basic motivation for
terrorism”. A desire for revenge or vengeance is a common response to
redress or remediate a wrong of injustice inflicted on another. It is not
difficult to imagine that “one of the strongest motivations behind
terrorism is vengeance, particularly the desire to avenge not oneself but
others. Vengeance can be specific or diffuse, but it is an obsessive
drive that is a power people thought to be responsible for injustices” (Crenshaw, 1992 )
Perceptions of injustice may also be viewed as grievances, which Ross (1993)
has posed as the most important precipitant cause of
terrorism. He suggests such grievances may be economic, ethnic,
racial, legal, political, religious, and/or social, and that they may be
targeted to individuals, groups, institutions or categories of people.
Identity: One’s psychological identity is a developed, stable sense of
self and resolved security in one’s basic values, attitudes, and beliefs.
Developmentally, its formation typically occurs in a crisis of adolescence
or young adulthood, and is tumultuous and emotionally challenging.
However, “the successful development of personal identity is essential
to the integrity and continuity of the personality” (Crenshaw, 1986) .
An individual’s search for identity may draw him or her to
extremist or terrorist organizations in a variety of ways. One may fall
into what psychologist Jim Marcia calls “identity foreclosure” where a
role and set of ideas and values (an identity) are adopted without
personal, critical examination. The absolutist, “black and white” nature
of most extremist ideologies is often attractive to those who feel
overwhelmed by the complexity and stress of navigating a complicated
world.
A variant on this process is one in which an individual defines his or her
identity simply through group membership. Essentially, one’s personal
identity is merged with a group identity, with no sense of (or need for)
individuality or uniqueness. As Johnson and Feldman (1992) suggest,
"membership in a terrorist group provides a sense of identity or
belonging for those personalities whose underlying sense of identity is
flawed.” For these individuals, “belonging to the terrorist group becomes
… the most important component of their psychosocial identity” Post

A similar mechanism is one in which a desperate quest for personal
meaning pushes an individual to adopt a role to advance a cause, with
little or no thoughtful analysis or consideration of its merit. In essence,
the individual resolves the difficult question “Who am I?” by simply
defining him or herself as a “terrorist,” a “freedom fighter,” ”shahid” or
similar role (Della Porta, 1992; Knutson, 1981). Taylor and Louis(2004)
describe a classic set of circumstances for recruitment into a
terrorist organization: “These young people find themselves at a time in
their life when they are looking to the future with the hope of engaging in
meaningful behavior that will be satisfying and get them ahead. Their
objective circumstances including opportunities for advancement are
virtually nonexistent; they find some direction for their religious collective
identity but the desperately disadvantaged state of their community
leaves them feeling marginalized and lost without a clearly defined
collective identity” .

Belonging: In radical extremist groups, many prospective terrorists find
not only a sense of meaning, but also a sense of belonging,
connectedness and affiliation. Luckabaugh and colleagues (1997 )
argue that among potential terrorists “the real cause or psychological
motivation for joining is the great need for belonging.” For these
alienated individuals from the margins of society, joining a terrorist
group represented the first real sense of belonging after a lifetime of
rejection, and the terrorist group was to become the family they never
had” . This strong sense of belonging has critical
importance as a motivating factor for joining, a compelling reason for
staying, and a forceful influence for acting Volkan (1997) .. argued” .
that terrorist groups may provide a security of family by subjugating
individuality to the group identity. A protective cocoon is created that
offers shelter from a hostile world” (Marsella, 2003). Observations on
terrorist recruitment show that many people are influenced to join by
seeking solidarity with family, friends or acquaintances (Della Porta,1995)
and that “for the individuals who become active terrorists, the
initial attraction is often to the group, or community of believers, rather
than to an abstract ideology or to violence” (Crenshaw, 1988) .
Indeed, it is the image of such strong cohesiveness and solidarity
among extremist groups that makes them more attractive than some
prosocial collectives as a way to find belonging (Johnson & Feldman,1982)
Conclusion: These three factors - injustice, identity, and belonging –
have been found often to co-occur in terrorists and to strongly influence
decisions to enter terrorist organizations and to engage in terrorist
activity. Some analysts even have suggested that the synergistic effect
of these dynamics forms the real “root cause” of terrorism, regardless of
ideology. Luckabaugh and colleagues (1997), concluded
“the real cause or psychological motivation for joining is the great need
for belonging, a need to consolidate one's identity. A need to belong,
along with an incomplete personal identity, is a common factor that cuts
across the groups.” Jerrold Post (1984) has similarly theorized that
“the need to belong, the need to have a stable identity, to resolve a split
and be at one with oneself and with society- … is an important bridging
concept which helps explain the similarity in behavior of terrorists in
groups of widely different espoused motivations and composition.”

Tuesday, March 1, 2011

தீ -விட- வாதம்

ஓர் உரையாடல்.
கண் மையிருட்டில்
நட்சத்திரங்கள் கண் சிமிட்ட
தூக்கமின்றி திரிந்தேன்
ஒளிந்தபடியே ஒருவன்
நிலவுக்குத் துணையாக
சுற்றும் முற்றும் பார்த்தபடி
மரத்தின் அடியே
மயங்கி விழுந்தான்.
புயம் கொண்டுத் தூக்கி
அவனுக்கு தஞ்சம் கொடுத்தேன்
வீட்டினுள்ளே..
நெற்றியிலே பலத்த காயம்
நீண்ட பயணத்தினாலான களைப்பு
மயக்கத்திலேயிருந்தான் .
ரத்தம் துடைத்து படுக்கவைத்தேன்
காயத்திற்கு மருந்துப் போட்டேன்
கண்திறக்காதிருந்தான்.
அசந்து தூங்கியவனை
அசராமல் பார்த்தேன்
சிறிதுநேரம் ஆயிற்று
சுவரிலே சாய்ந்தபடி
நானும் தூங்கிப்போனேன்
காலை எழுந்தும் பொது
காணமல் போயிருப்பான் -என
நினைத்துக் கண்விழித்தேன்
நான் எண்ணியது தவறு
துவண்டு அங்கேயே படுத்திருந்தான் .
கண் விழித்துப் பார்த்தான்

எழுந்தமர்ந்து கேட்டான்

நான் எங்கே இருகின்றேனென்று ?

விவரம் சொன்னேன் பட்டும்படாமல்

வினவிய அவன் வினாவாக நின்றான்.

மெல்ல கேள்வியை ஆரம்பித்தேன்

"யார் நீ ? எங்கிருந்தாய்? எங்கு வந்தாயென்று"

கண்கள் செந்நிறமாக கர்ஜித்தான்

"படை ஒன்று திரட்டுகின்றோம்

பாவப்பட்ட நாங்கள்

கட்ட ஒரு கோவணமின்றி

காட்டில் வாழும் மக்கள் ,

திசைத் தெரியாமல் போகும் - எமக்கு

விசை ஒன்று இருக்கு

கசப்பான நிகழ்வு பல

நெஞ்சுக்குள்ளே இருக்கு..
.
எந்தையை சுட்டான்

என் தாயையும் கொன்றான்

தங்கையை சூறையாடி -பல

கன்னியர் கற்பை அளித்தான்
.
வஞ்சம் தீர்க்க வேண்டியே - இங்கு

தஞ்சம் புகுந்துள்ளோம்

கஞ்சி சோறு இல்லாவிடினும்

அஞ்சி ஓட மாட்டோம்.

அறியாத மக்களுக்கு

நாங்கள் தீவிரவாதி

தெரிந்த மக்களுக்கு

நாங்கள் ஞாயவாதி .



அதிர்ச்சியாய் இருந்தது

அவன் சொன்ன கதை கேட்டு

முதிர்ச்சி அற்ற வார்த்தைகளால்

நகர்ந்தேன் அவனை விட்டு

சிறிது மௌனத்திற்குப் பின்

"போராடும் வாழ்க்கையில்

ஓர் அர்த்தம் வேண்டும் தோழா

உன் துயரம் புரிகிறது

அதற்கு மறுப்பு இல்லை தோழா

போன உயிர் திரும்பிடுமோ

வஞ்சம் விடுவாய் தோழா

கண்களை குருடாக்கிய

கத்தி அதை விட்டுவிட்டு

மற்றவர் கண்களை

பறிக்கும் செயலும் சரிதானோ!

தலைவன் அவன் தூண்டிவிட்டு

தொட்டிலிலே தூங்குகின்றான் .

பகடைக்காயாய் பயன்படுத்தி

வியாபாரமாய் மாற்றுகின்றான்

போன உயிர் விதியினாலே என்று

நீயும் எண்ணிடுவாய்..

மனம் அதனை ஒருநிலைப்படுத்தி

துயரத்தைப் போக்கிடுவாய்".

"அறிவுரையை நிறுத்திடுவாய்" என

ஆத்திரத்தில் கத்தினான்.

"பாசாங்கு சொல்லிடவும்

பல் இளித்து பேசிடவும்

தெருவில் போட்ட சோற்றை

நக்கித் திங்க வரவில்லை

கதை ஒன்று சொல்கிறேன்

கேட்டிடுவாய் தோழா

உங்களவர் எழுதியது

பெயரினிலே வெற்றியிருக்கும்

அவர் சொன்ன கதை இது

'ஒற்றையாய் சுற்றிய

வெட்டியானாம்..

அவன் பிணம் வரும்போதெல்லாம்

பாடுவானாம்

தனக்கென வந்தாளாம்

துணை ஒருத்தி

குழந்தையும் பிறந்ததாம் - அவன்

குடும்பம் விருத்தி

ஒரு நாள் குழந்தையும்

காணலயாம்

தேடித் தேடித் பித்தாக

அலைந்தானாம்

கண்டானாம் குழந்தையை

பிணமாக...

அன்றோடு நிறுத்தினானாம்

பாடுவதை '..

தனக்கென்று வந்தால் தான்

தெரியுமடா

தசை கிழிந்து வரும் வலியும்

புரியுமடா

மெத்தை சுகம் கண்ட உனக்கு

மெய் புரியாது

பொய்யான வாழ்கையை யார்

வாழ்கிறார் என்று...


மென்மையாக ஆரம்பித்தேன் என் பேச்சினை


"நாவடக்கம் வேண்டும் தோழா

நன்றி மறவாதே

நானும் சூழ்நிலைக் கைதி தான்

அதை மறந்திடாதே

உன்னை போல் ஒருவனால்

அன்னை இழந்தேன்

தோழனாகப் பாவித்த

தந்தை இழந்தேன்

கோபம் கொண்டு எழுந்திருந்தால்

மனிதனாகிருப்பேன்

சீற்றம் அதை அடக்கியே

மனிதம் வளர்த்திட்டேன்.

பசிக்கு வேட்டையாடல்

அது உயிரினத்தின் தர்மம்

அறிந்தே பழித் தீர்ப்பது

மனதின் வன்மம்.

தீர்வுக்கு வழி தேடினால்

தானாகப் பிறக்கும்

வரும் தீர்வை மடக்கினால்

போர்களமே வெடிக்கும்

மனதினிலே மாற்றம்

கொண்டால்

பூமி சொர்க்கமாகும்

உனை சார்ந்தோர்க்கு

அன்பு காட்டு

புது உறவு கிடைக்கும்.."


"அமைதியாக யோசி நண்பா

விளக்கம் கிடைக்கும்" எனத்

தனிமையில் விட்டு சென்றேன்
..
...