Wednesday, August 15, 2012

ஐயப்பன்

ஐயப்பன், கரு கருவென விழிகள்.. தோல் நிறமும் அதுவே.. வெண்ணிற பற்கள் முகத்தில் சிரிக்க, ஓயாமல் பேசி எங்களை உற்சாகப் படுத்திய சிறுவன் . 
அவனுக்கு பத்தே வயது தான் ஆகிறது. தமக்கை இரண்டு பேர், அண்ணன்கள் இரண்டு பேர். தந்தையும் ஒரு அண்ணணுமே பொருளீட்ட ... எதோ ஓடுகிறது அவர்கள் வாழ்கை சக்கரம். .. மரணம் என்ற சொல் காதில் கேட்கும் போதே சிலருக்கு பயம் வயிற்றில் இருந்து தொடங்கி வெளியே கொப்பளிக்க ஆரம்பிக்கும். .. அதுவும்  தனக்கு நெருங்கிய நபராக  இருக்கும் பட்சத்தில் ரொம்பவே பாதிக்கச் செய்யும். இவன் வாழ்க்கையிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்திருகிறது. 
சோகம்  உள் இருப்பினும், வெளியே பிரவேசிக்காமல் இருந்தது. 
நான் வரிசையாகக்  கேட்ட கேள்விகளுக்கு உடனடி பதில்கள், ஆனால்  அந்த பதிகள்,  என்னால் ஜீரணிக்க முடியாமல் போனது தான் உண்மை. சமுதாயத்தில் ஒரு நல்ல பிள்ளை உருவாக பெற்றோர்களின் போக்கும், அரவணைப்பும் எவ்வளவு முக்கியமானது... தன் கண் முன்னே இவனின் தாய் தூக்கிலிட்டு கொண்டாள், தன் அப்பா அம்மாவிற்கு சண்டை நடந்தது, பின் மனமுடைந்து அவள் இங்ஙனம் செய்து மாய்த்து கொண்டாள் என்பது எனக்கு செய்தி தான் . இருப்பினும், எத்தனையோ இடங்களில் இப்படி பட்டச் சம்பவங்கள்  நடந்த வண்ணம் தான் இருக்கிறது.. அதனால் பாதிக்கப்  படப் போவது இளையத் தலைமுறையே அன்றி வேறு யாரும் இல்லை .. இது தொடர்கதையாகத் தான் இருக்கப் போகிறது..

Saturday, March 17, 2012

விடுதலை

உண்மைக்கும்
படிமத்திற்கும் நடுவில்
ஊடுருவும் என் மனது..
உத்தேசம் இல்லை..
உதாசினப் படுத்த ..
கருதுவமையில்
மாட்டிக் கொண்டு
கலக்கமே மிச்சம்
வெளிச்சத்தில்
நின்றுக் கொண்டு
விடியலைத் தேடி
மறுபரிசீலனைச் செய்கிறேன்
இந்த வாழ்கையை
வாழலாமா அல்லது
விடுதலைப் பெறலாமா !

பொய் பூசாமல்

நாணும் கண்களால்
நானும் கலங்குகிறேன்
பேசா வாய்தனில்
பொய் பூசாமல்
சிரிகின்றாய்
நாணத்தால்
உன் கால்விரல்கள்
சொல்லும் வார்த்தை,
வாய் திறந்து
சொல்லிடாயோ !
கேள்விக்குறியாய்
உன் செவிகள் ரெண்டும்,
என் மனத்துக்குள்
கேட்குதடி !
கண்களால் தூதுவேண்டாம்
முகப் புத்தகத்தில்
அனுப்புப் போதும்!

Sunday, March 11, 2012

அடோல்ப் ஹிட்லர் - பகுதி 3

ஹிட்லருக்கு நெருங்கிய நண்பர்கள் கிட்டவில்லை. நாடோடியாக திரிந்துக் கொண்டிருந்தார். கையில் இருந்த பணம் குறையவே வேறு வழி இன்றி ஜெர்மனிக்கு பயணம் ஆனார். ஏதாவது சாதித்து தன் ஹீரோயசத்தை வெளிப் படுத்தவேண்டும் என்ற ஆவல் ஹிட்லர் மனதில் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்தது. தான் ஆசைப் பட்டது போல் ஓவியராக முடியவில்லை. ராணுவத்திலாவது சேருவோம் என்ற முடிவெடுத்து தன் இருபத்தைந்தாம் வயதில் ராணுவத்தில் சேர்ந்தார் ஹிட்லர்.

முதலாம் உலகப்போர் வெடிக்கும் நேரம்.... 1914 ஆம் ஆண்டு.


ஆரம்பத்தில் படைவீரராக சேர்ந்தார். முதாலாம் உலகப்போரின் போது எல்லையில்
"ரன்னராக " இருந்தார். அதாவது, போரின் போது போர்வீரர்களுக்கு தகவல்களையும், கட்டளைகளையும் சுமந்து ஓடிச் சென்று தருவது தான் பணி. போர் முனையில் குண்டுமழை பொழிய, அச்சமின்றி தன் பணியை கடமை தவறாமல் செய்தமைக்கு ஹிட்லருக்கு ராணுவம் "அயன் கிராஸ்" என்னும் பதக்கம் அணிவித்து கௌரவப்படுத்தியது.
உலகப்போரின் போது "மஸ்டர்ட்" என்னும் விஷவாயு வீசப் பட்டு ஹிட்லரின் ஒரு கண் தற்காலிகமாகப் பார்வை இழந்தது.

' வேர்சைலஸ் ட்ரீட்டி" ஜெர்மையிடம் ஆயுதங்களை பறிமுதல் செய்து , இழப்பீடு தர கட்டளையிட்டது. ஜெர்மனியில் கடன் தீர்க்க வழியின்றியும், வேலையில்லா திண்டாட்டமும், அதிகமானது.

ஜெர்மனி முதாலாம் போரில் தோல்வியாக, ஹிட்லருக்கு பொறுக்க முடியவில்லை. யூதர்களும், கம்யூனிஸ்ட் களும், ஒற்று வேலை பார்த்ததினால் ஜெர்மனி போரில் தோல்வியுற்றது என்பதை ஆழமாக நம்பின்னார். அதை அவரால் தாங்கமுடியாமல் " யூதர்களையும், கம்யூனிஸ்ட் களையும் " பழிவாங்கியே தீருவேன் என சபதம் எடுத்து அழுதார் ஹிட்லர்.

- தொடரும் ..

Friday, March 9, 2012

துணுக்குகள் - 4

விஸ்தாரமான இடத்தில்
விரிந்து கிடக்கும் நிலத்தில்
இறைந்துகிடக்கின்றோம்
கிளிஞ்சள்களாய்
சிலது அலங்காரப்
பொருட்களாய்
சிலது புதைந்து
அலை அடித்து
கரை சேர்ந்துவிட்டோம்
உயிரற்ற ஜடப்
பொருளாய் ....


என்னை விடுவித்துக் கொள்ள
முற்படுகிறேன்...
தடையாய் இருப்பது
அவள் அன்பு மட்டுமே ...

உன் விழியின்
வெளிச்சத்திற்காக
காத்திருக்கிறேன்
அதுவே என்
விடியலென்று...

உன் மௌனமும்
உபசரிப்பும்
அரவணைப்பும்
ஆசை பேச்சும்
இதயத்தை துளைக்குது
நம்பிக்கைத்ரோகமாய்
நான் வீசிய அம்பு
திரும்பி அன்பாய்
என் மீது ...

Sunday, March 4, 2012

அம்புலி - எனது பார்வையில்..




அம்புலி - நிலவின் இன்னொரு பெயர். படத்திற்கு ஏன் அம்புலி என்ற பெயர் வைத்தார்கள் என்ற கேள்வி எழுப்பாமல் பாருங்கள். த்ரில்லர் , பிக்சியஸ் ஸ்டோரி. பழைய என்றால் கொஞ்சம் பழங்காலத்து படங்களை தழுவியிருந்தாலும், தமிழ் படத்தில் முதல் முயற்சி என்று சொல்லலாம்.

அமுதன் (அஜய் ) வேந்தன் (ஸ்ரீஜித்) . கல்லூரி மாணவர்கள். விடுமுறை விட்டப் பிறகும், அமுதன் காதலுக்காக தன் ஊருக்கு செல்லாமல் தன் நண்பன் வேந்தன் ஊரிலேயே தங்குகிறான். வேந்தன் அந்த கல்லூரி காவல்காரனின் மகன் . காலகாலமாக ஒரு விபரீதம் நடந்து வருகிறது. சோள புலத்தில் அம்புலி வந்து வேட்டையாடிகிறதென்றும், சாயங்கால நேரம் அனால் யார்ம வெளியே நடமாட கூடாதென்றும் ஊரு கட்டுப்பாடு வித்தித்து இருக்கிறது. அதை மீறி அமுதன் அந்த சோள காட்டை தாண்டி வர, சத்தம் கேட்டு அரண்டு திரண்டு ஓடி வருகிறான். பின்பு அமுதனும் வேந்தனும் யார் இந்த அம்புலி என்று துப்பு துலக்கி கண்டறிகிறார்கள்..

ஒரு வெளிநாட்டவன் அந்த ஊரில் வசிக்கும் ஒரு கர்பவதியை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அதனால் ஏற்படும் விளைவு தான் இந்த நிலா வெளிச்சத்தில் நடைபெறும் ரகசியம். அந்த ரகசியம் என்ன? என்பதை திரையில் காணுங்கள்.
செங்கோடன் (பார்த்திபன்) சொலக் காட்டில் தனியாக வாழ்கிறான், அவனை அம்புலி ஒன்றும் செய்ய வில்லை என்பது ஆச்சர்யம். இசை, பரவில்லை . கே . வெங்கட் பிரபு ஷங்கர், சி . எஸ். சாம் , சதீஷ் மற்றும் மெல்வின் சாலமன். மூவரும் சேர்ந்து இசை அமைத்திருகிறார்கள்.

நாராயண் ஹரி ஷங்கர் மற்றும் ஹரீஷ் இந்த படத்தின் இயக்குனர்கள். ஏற்கனவே ஒரு த்ரில்ளீர் படம் எடுத்த அனுபவம் இவர்களுக்கு உண்டு.

இந்த படம் 3d படம். இந்த படம் பிரமாண்டமாக இல்லையென்றாலும், நம் ஆட்கள் வந்து குச்சியை நீட்டுவதும், பேப்பர்களை தூவும் போது நம் மீது விழுவதும்.....(எவளவோ பார்த்துட்டோம்...... இவளவு தானா?) அதே அதே..

ஹீரோ மற்றும் ஹீரோஇன் புதுசு.. அதனால் பெருசாக எதையும் எதிபார்க்க முடியவில்லை.
குழந்தைகளுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். பெரியவர்களுக்கு ...ம்ம்ம்ம்... சரி ஒரு முறை பார்க்க முயற்சி செய்யுங்கள்.