Monday, February 28, 2011

முடிவு

துணிவற்று போன நிமிடம்
துயரம் வந்து சூழ்ந்துக் கொண்டிருக்க
நாக்கு வறண்டு
சுவாசப்பை இறுக ஆரம்பித்தது
விடியலை தந்திடுமோ
வாழ்க்கை இருண்டிடுமோ என்று
முடிவுக்காக காத்திருக்கும் அந்நொடி
வயிற்றை பட்டினிப் போட்டு
மூளையை மெருகேற்றினேன்
மதிப்பெண்களுக்கே
மதிப்பு என்றானப்பின்
மன உருவுக்கு ஏது மதிப்பு
ஒற்றை வரி விடாமல் படித்து
தேர்வுத் தாளில் வாந்தி எடுத்ததுப் போக
மீதமானது குழப்பம் மட்டுமே ..

Saturday, February 26, 2011

கடல்

அலையாய் ஓடி வந்து

அணைத்திடும் உன் கைகள்

அன்னையாய் இருந்து

உலகை காக்கின்றாய்

உன் மடியினில் தான்

எத்தனை உயிரினங்கள்

ஓர் செல்லிலிருந்து

பல செல் வரையிலே

உன் ஆழத்தை கண்டுக் கொள்ள

பல ஆண்டுகள் ஆனதுவே

உன் சீற்றதினாலே

பல உயிர்கள் போனதுவே

உப்பு நீராய் இருந்திடினும்

சுவையாய் மழை நீர் தருகின்றாய்

சூரியனுக்கும் உனக்கும் ஒப்பந்தமோ

சுத்திகரிப்பு ஆலை பல வைத்துள்ளாய்

பூமியிலுள்ள தீவிரவாதம் போல்

உன்னுள்ளும் இருக்கும் எரிமலைகள்

குண்டுகள் போல் நெருப்பை கக்கிடினும்

பாறைகளாய் அதனை மாற்றுகின்றாய்

காற்று தானோ உன் கணவன்

அவன் அசையும் படியே அசைகின்றாய்

கோபம் என்று வந்து விட்டால்

பேரலையாய் மாறி அழிகின்றாய்

படர்ந்து கிடக்கும் பூமியிலே

முக்கால் பங்கு நீ தானே

பெயர் தான் உனக்கு வெவ்வேறு

நீ இன்றி இங்கு பூமி எது.....?!


பிள்ளைகள் - சொந்தக் கருத்து (தொடர்ச்சி )

கந்தன் , இந்த கதை/கட்டுரையின் நாயகன் பெயர். பெயரை மாற்றி அமைத்திருந்தாலும், இது உண்மை சம்பவம்.

ஒரு முறை நான் சாலையை கடந்து செல்கையில் ஒரு சிறுவன் ஒரு நாய் குட்டியை அடித்து சித்ரவதை செய்வதை பார்க்க நேர்ந்தது. அவனை தடுத்து நிறுத்தினேன். ஏன் என கேட்டதற்கு விடை தராமல் முறைத்தான். அவனை பற்றி விசாரிக்கும் பொழுது கிடைத்த தகவல்.
கந்தன், அவனுக்கு வயசு ஏழு. கீழ்தட்டு வர்கத்தை சேர்ந்தவன். அப்பா இறந்துவிட்டார், அம்மா வீட்டு
வேலை செய்யும் தொழிலாளி. குழந்தைக்கு சாப்பாடு, உடுக்க உடை, அதற்காக போராடும் வாழ்க்கை .
. பகலில் வீட்டு வேலை, சாயங்காலம் பூ விற்பது. இதுவே அவள் செயல்முறை. கந்தனை பார்த்துக் கொள்வது அவன் பாட்டிதான்
அப்பன் குடிகாரன்..கந்தனுக்கு நினைவு தெரிந்தவரை அவனின் தந்தை, அவனின் தாயை அடிப்பதை பார்த்திருக்கிறான். அவன் சுற்றி உள்ள ஆண்களும் அப்படியே.
அவனின் தந்தைக்கு வீண் சண்டையை விலைக்குவாங்குவது பொழுதுபோக்கு. அப்படி ஏற்பட்ட சண்டையில் உதய் வாங்கி, உடல் நிலை சரியில்லாமல் இறந்தே போனான்..
கந்தனை பள்ளியில் சேர்த்தாள் அவள் தாய். படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அவன் சக மாணவர்களோடு அவனால் விளையாட முடியவில்லை. சக மாணவர்களை அடிக்க ஆரம்பித்திருக்கிறான். அவனை நண்பனாக ஏற்க மற்ற பிள்ளைகள் பயப்படுகிறது.

ஒரு முறை ஆசிரியர் வீட்டுபாடம் செய்து வராததற்கு கண்ணிடிக்கவே, கல்லை எரிந்திருகிறான். இவ்வளவு கோபமும் ஆக்ரோஷமும் எங்கிருந்து வருகிறது? சுற்று சூழல்.
மற்றும் அவன் தந்தை தாயை அடித்தது பார்த்து வந்தமையால் ஏற்பட்ட கோபம்.
அதுமட்டுமல்லாமல் அவன் மேல் கவனம் செலுத்தவோ ,அக்கறை காட்டவோ, நல்லது கேட்டதை எடுத்து சொல்லவோ ஆள் இல்லை. பள்ளியிலும் ஆசிரியர்கள் கவனிக்கவில்லை.

கந்தனுக்கு ஏற்பட்டிருப்பது "அட்டன்ஷன் டெபிசிட் டிசாடேர்" என்று கூறலாம். அரவணைக்கப் படாமல் போனதால் ஏற்பட்டது. அதனால் வந்தது கோபம் வெறுப்பு.. யாரிடமாவது காட்டவேண்டும். அன்று மாட்டியது நாய் குட்டி. இப்படியே விட்டுவிட்டால் மோசமான நிலைக்கு மாறவும் வாய்ப்புள்ளது.

மீட்(MEAD) என்கிற சைகொலோக்ஸ்ட்(PSYCHOLOGIST), தேவேலோப்மேன்ட் பீரியடை (DEVELOPMENT PERIOD)
சில ச்டஜஸ் ஆக பிரிகிறார்.
௮) ப்லே ஸ்டேஜ்- பிறந்த குழந்தை முதல் நான்கு வயது வரை
ஆ) கேம் ஸ்டேஜ்- ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயது வரை

முதல் ஸ்டேஜில் குழந்தைகள் தன்னை சுற்றி உள்ளவர்களை இமிடேட் செய்யும். தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கத் தெரியாது. பார்க்கும் கோணமும் ஒரே வழிதான்
யோசிக்க ஆரம்பிப்பது அடுத்த ஸ்டேஜில் தான் . கேம் ஸ்டேஜில் தான் விதிகளையும் (RULES), நிபந்தனைகளும் (REGULATIONS), மதிப்பு (VALUES) மற்றும் நன்னடத்தை (MORALS) கற்றுகொள்ளும் தருணம் ஏற்படுகிறது.
கந்தனை பொறுத்தவரை அவன் இரண்டாவது ஸ்டேஜில் இருக்கவேண்டியவன், ஆனாலும் அவன் முதல் ஸ்டேஜிலேயே இருக்கிறான். அவன் வளரும் சூழல் இரண்டாம் ஸ்டேஜிக்கு போகவிடாமல் தடம் மாற்றிக்கொண்டிருகிறது .
அவன் அம்மாவோ, அவன் ஆசிரியரோ அவனை ஊக்குவித்து, அரவணைத்து இருந்தால் இந்த கோபமும் ஆக்ரோஷமும் குறைந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும் .

குழந்தைகள் நல்ல முறையில் வளர சூழலும் (சரௌண்டிங்க்ஸ் ) முக்கியம்.. .



Wednesday, February 23, 2011

பிள்ளைகள்.. சொந்தக் கருத்து

எனக்கு தெரிந்த ஒரு ஆண் குழந்தை, அவனுக்கு ஐந்து வயதிருக்கும். அவன் பார்ப்பதற்கு சகஜமான குழந்தை (நோர்மல் சைல்ட்) போல தான் இருப்பான். பார்க்க அழகாவும் ஆரோகியமாகவும் இருப்பான்.
ஆனால் அவனிடம் எனக்கு சில மாற்றங்கள் தெரிந்தது. முகத்தில் ஒரு வாட்டம் இருக்கும். புன்னகை பூபதர்க்கு காசு கொடுக்க வேண்டும். அப்படி முகத்தை இறுக வைத்திருப்பான். அவனுடன் மற்ற பிள்ளைகள் விளையாடுவதை தவிர்த்தது. காரணம், அவனால் கண்டுகொள்ள முடியவில்லை, அவன் சின்ன பிள்ளை தானே.
அவனின் தாயார் பணிக்கு செல்பவள். வீட்டில் வேலைக்கு ஒரு ஆயாவை நியமைத்துவிட்டார்கள்.. அவனின் தந்தையும் பயங்கர பிஸி. அவனுடன் நேரம் செலவு செய்வது எப்படி என்றால் சாயங்காலம் மொடோர்பய்க்கில் ஒரு ரவுண்டு , அவ்வளவு தான். அப்படி சாயங்காலம், ராத்திரி வேளையிலாவது பிரியாமல் இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை. அவ்வபோது பிள்ளையை தன் பாட்டியிடம் விட்டுவிட்டு டூர் கிளம்பி விடுவார்கள் .
அவனுக்கு ஒரு தங்கையும் பிறந்தால். குழந்தையை பார்த்துக்கொள்ள இயலாமல் மூன்று மாதத்திலேயே தன் தாயிடம்(ஊரில் ) விட்டுவிட்டு பணிக்கு செல்ல தொடங்கிவிட்டாள். தன்னோடு விளையாடா ஒரு துணை வந்துவிட்டது என்ற ஆனந்தத்தில் மிதந்த அந்த குழந்தைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மனதிற்குள்ளேயே ஒரு வெறுப்பு. அதனால் பிடிவாத குணம், எதை கண்டாலும் தூக்கி எறிவது போன்ற சேஷ்டைகள் செய்ய ஆரம்பித்தான்.
அவன் சேஷ்டைகள் மிகுதி ஆனதே தவிர குறைய வில்லை. மற்ற பிள்ளைகள் மீது சிறுநீர் கழிப்பதும், 'தூ' 'தூ' என்று துப்புவது அவனை பொறுத்தவரை விளையாட்டு.
பார்ப்பவர்கள் அவனை பின்னாடி திட்டினார்களே தவிர காரணம் கண்டு சொல்ல முற்படவில்லை.
அவனை அழைத்து அறிவுரை கூறவும் முடியாது. காரணம் அவன் குழந்தை. என்ன செய்வது?
வளர்ந்தவர்களுக்கு இருக்கும் எண்ணமும், புரிதலும், ஆசைகளும் சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு இருக்குமா? கண்டிப்பாக இருக்கும், சதவிகிதத்தில் தான் மாறும்.
அந்த குழந்தை அப்படி இருக்க யார் காரணம் என்று நினைகிறீர்கள் , அவனா? அவன் பெற்றோரா?
'அவன் நன்றாக இருக்கத்தானே உழைக்கிறோம்' என்று அவர்கள் கூறும் கருத்தும் ஒத்துகொள்ளபடவேண்டியது தான். சிறு வயதில் பிள்ளைகளுக்கு தேவை அரவணைப்பும், அன்பும் தவிர வேறு ஒன்றும் இல்லை.
போதுமான நேரம் ஒதுக்க வேண்டும்.
தனக்கு யாரும் இல்லை என்ற ஒரு குற்ற உணர்வு சிறு வயதிலேயே வந்துவிடும். வளர, வளர யார் உண்மையாக அன்பு செழுத்துபவர்கள் என்று புரியாமல் போய் விடும் .
அது மிகவும் சங்கடமான சூழ்நிலையை அந்த குழந்தைக்கு கொண்டு தரும்.
ஆகையால் பெற்றோர்கள் குழந்தைகளின் மீது அரவணைப்பை காட்ட நேரம் ஒதுக்கவேண்டும் என்பது என் கருத்து.

Tuesday, February 22, 2011

பிள்ளைகள் - சொந்தக் கருத்து

என் மகனுக்கு வயது 12. ஆறாவது வகுப்பு படிக்கிறான். இன்று பள்ளியிலிருந்து வந்தவுடன் 'அம்மா நாங்க பார்ட்டி கொண்டாடலாம்னு இருக்கோம்' என்றான்.

அவன் வருவதற்கு முன்பே எனக்கு இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புகள் வந்துவிட்டன சில பெண் பிள்ளைகளிடமிருந்து. என் மகன் சொன்ன விவரமும் அந்த தொலைபேசி அழைப்புக்கான நோக்கமும் புரிந்தது.

"எங்கே பார்ட்டி?" என்று கேட்டேன் .

திரும்பவும் தொலைபேசி மணி அடிக்கவே, விறு விறுவென அவனே சென்று எடுத்தான்.

" ஹேய் கம் ஆன் டூட், அவன்க வந்தா நான் வருவேன், ஜஸ்ட் டாக் டு தெம், அண்ட் லெட் மீ நோ .. எங்கே பார்ட்டி ஈ ஏ தானே ? சரி ..ஓகே ஓகே.. நீ பேசிட்டு சொல்லு " .

தொலைபேசி வைக்கப்பட்டது.

"அம்மா , என்ன மா சொல்ற, நான் போகட்டுமா? என்றான்.

நானும் அவனிடம் விவரங்கள் அறிய " யாரோட போறீங்க ? என்றேன்.மாம் யு டோன்ட் வொர்ரி, ஒரு அண்ணா கூட்டிட்டு போறாங்க, அவங்க என் பிரெண்ட் தான், என் கிளாஸ் மேட்டோட அண்ணன் தான்" என்றான் சர்வ சாதரணமாக.

அவனும் 'சரி ஓகே , போகல ' என்றான் . நானும் சர்வசாதரணமாக 'முடியாது ' என்று சொல்லிவிட்டு என் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

இவளவும் எதுக்கு சொன்னேன்னு யோசிக்கிறீங்களா ?

நம்ம பிள்ளைகள் எந்த கலாச்சாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றி யோசிக்கலானேன்.

வெளிய செல்வதனால், நல்லது, கேட்டது அறிந்து கொள்வார்கள் என்பது வேறு, ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலை அவர்களை எந்த திசையில் கொண்டுப் போகும் என்பதை நினைத்தால் ஐயமாக உள்ளது.

இப்போதெல்லாம் சில பிள்ளைகள் தன் பிரச்சனைகளை பெற்றோருடன் பகிர்ந்து கொள்வதை விட தன் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் தான் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதற்கு காரணம் பெற்றோர்கள் தன் நேரத்தை பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளாமையினால் வருவது. அப்படியே அவர்களுக்கு நல்ல நண்பர்கள் வாய்த்தால், சந்தோசம். இல்லாமல் போனால், அது வேறு மாதிரி சூழ்நிலையில் கொண்டுப் போய் விட்டுவிடும்.

சில குழந்தைகளுக்கு நண்பர்களும் கிட்ட மாட்டார்கள். அது அந்த குழைந்தைகளின் தயக்கமாக இருந்து அதனாலே மன அழுத்தம் வர வாய்ப்புள்ளது.

சிறு பிள்ளைகளுக்கும் மன அழுத்தம் வருமா? என்றால் கண்டிப்பாக வரும். அதனால் குழந்தைகளை பெற்று, நல்ல பள்ளிகூடத்தில் சேர்த்து படிக்கவைத்து , டூஷன் அனுப்பி, கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தால் மட்டும் போதாது, அரவணைப்பு வேண்டும், நண்பன் போல அவர்கள் வயதுக்கே மாறினால் அவர்களும் நம்மை நண்பனாய் பாவித்து நல்முறையில் வருவார்கள்.


Sunday, February 20, 2011

பயணம் - எனது பார்வையில்

பயணம் - சைலென்ட் மூவீஸ் ,பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வந்த படம்.

இயக்கம் - ராதாமோகன், இசை - ப்ரவின் மணி.

தமிழ் படத்தில் ஒரு புதிய முயற்சி.

பயணம் கிளம்பும் போது எல்லோருக்கும் ஒவ்வொரு அனுபவம். ஒரு சிலருக்கே இப்படி ஒரு அனுபவம் கிடைத்திருக்கும் . அப்படியொரு த்ரில் உள்ள பயணம் தான் இந்த படத்தின் கதை.

ராதா மோகன் ஒரு புதிய களத்தில் இறங்கி இருக்கிறார்.

நடிகர்கள் - நிறையபேர். அதில் முக்கியமானவர்கள் நாகர்ஜுன், பிரகாஷ்ராஜ், சான கான், ரிஷி, இன்னும் பல. சென்னைலிருந்து டெல்லி கிளம்பும் விமானம் சில தீவிர வாத கும்பலால் கடத்தப் படுகிறது. 100 பயணிகள் உள்ள விமானம். பயணிகள் உயிருடன் வேண்டுமென்றால், யூஸூப் கான் எனும் தீவிரதியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்கள். தீவிரவாதியை விடிவித்து பயணிகளை எப்படி காப்பாற்றுவது என்ற போராட்டம் தான் கதை. என் எஸ் ஜி செக்யூரிட்டி ரெப்பாக வருகிறார் ரவீந்திரன் (நாகார்ஜுன் ), மிடுக்கான தோற்றம். கமாண்டோ வேஷம் அவருக்கு அழகாக பொருந்துகிறது. கோமொண்டோஸ் சண்டைப் போடுவது மட்டும் அல்ல பிரச்சனைகளை எப்படி யோசித்து கையாள்கிறார்கள் என்பதை அற்புதமாக சொல்லியிருகிறார்கள்.

அரசும், அரசை சார்ந்த ஊழியர்களும் எங்ஙனம் தீர்வு காணாமல் யோசித்துக் கொண்டே இருப்பது நம்மையும் யோசிக்க வைக்கிறது .

பத்திரிகை துறையினால் வரும் நன்மை, தீமை, அதை சொல்லி இருக்கும் விதமும் அழகு.

படத்திற்கு முதல் பிளஸ் பாயிண்ட் 'விமானம்' . ஆர்ட் டைரக்டர் கதிர் ஒரு 'ஒஹோ ' போடலாம். 'செட்டிங் செய்த விமானம் என்று துளி கூட சந்தேகம் ஏற்படாத வகையில் அருமை.

இரண்டாவது பிளஸ் பாயிண்ட் வசனம்.. டி.எஸ் . ஞானவேல்.

தீவிரவாதிகளை ரொம்பத் தீவிரமாக காட்டமல் கொண்டு சென்று இருக்கிறார்கள். 26/11 ஞாபகத்தில் கொண்டுவராமல் கதையை பார்த்தால் அவர்களும் நல்லவர்கள் என தோன்ற ஆரம்பிக்கும்.

தீவிராதிகள் துப்பாக்கி காட்டி மிரட்டும் போது இருக்கும் அச்சம், ஒரு சில நிமிடங்களில் காணமல் போய்விடுகிறது. பார்லிமெண்டில் சண்டையிட்டு பேச்சு வார்த்தை நடத்துவது போல் இருக்கிறது சில இடங்களில்.

மற்ற படி படம், இந்த பயணம், கலவரத்துடன் போகும் அழகான பயணம்.

இந்த பயணத்தை மறக்காமல், மறுக்காமல் பாருங்கள் . ஒரு புது அனுபவம் கிடைக்கும்.

Saturday, February 19, 2011

127 HOURS - எனது பார்வையில்

127 HOURS - எனது பார்வையில்


2010 பயோக்கிராபிகல் அட்வென்சர் படம். ARON RALSTON AUTOBIOGRAPHY " BETWEEN A ROCK AND A HARD PIECE".

இயக்குனர் "ஸ்லம் டாக் மில்லியனர்" புகழ் பாயில். ஏற்கனவே ரெண்டு படம் இயக்கி இருகாரு.

தயாரிப்பு : கிறிஸ்டியன் கோல்சன். இசை : எ ஆர் ரஹ்மான்.

சரி இப்போது கதைத் தளத்தை பாப்போம்.

நம்ம ஹீரோ (ஜேம்ஸ் பிரான்கோ ) மலை ஏறுவதில் ஆர்வம் உள்ளவர். துணிகரமான செயலில் ஈடுபடனு ஆசை. அந்த முயற்சியில மலை ஊடே போறாரு.

உள்ள இறங்கும் போது ஒரு பாறை உருண்டு அவர் கை மாட்டிக்குது. இழுக்க முயற்சி செய்தும் முடியல. ஒரு நாள் போச்சு, ரெண்டு நாள் போச்சு. எடுத்து வந்த தண்ணீ , சாப்பாடு எல்லாம் தீர்ந்து போயிடுது. தன் கையை வெட்டி ஆச்சும் தப்பிக்கலாம் என்று முயற்சிக்க, அதுவும் முடியல . ஏன்னா அவன் எடுத்துட்டு போற கத்தி மொட்டை கத்தியா இருக்கு.'. ஹீரோ கை மாட்டிகிட்டு அவஸ்த்தை படுவது நாம மாட்டிகிட்டா எப்படி இருக்குமோ அப்படி ஒரு பாதிப்பு ஏற்படுது. தண்ணீர் தீர்ந்து பொய் ஒரு கட்டத்துல சிறுநீரை குடிக்கிறான். அந்த இடுக்கிலேயே தூங்குறான். கனவு வருது. அதுல அவன் அப்பா, அம்மா, நண்பர்கள், அவன் தங்கை, காதலி எல்லாம் வந்து போறாங்க.

செத்து போய்டுவோம் என்று எண்ணம் வருது. அப்புறம் இல்ல வாழனும் வாழ்த்தே ஆகணும் என்று ஐந்தாவது நாள்

எலும்பை உடைத்து, நரம்பை கிழித்து கையை வெளியே எடுக்கிறான். கஷ்டப்பட்டு வெளியே வரான். அவன் நல்ல நேரம் ஒரு குடும்பம் இவன போல மலை ஏற ஆர்வம் உள்ளவர்கள், அவனை பார்க்க நேர்ந்து காப்பாற்றுகிறார்கள்

தன் வாழ்கையை வாழ்ந்தாக வேண்டும் என்று அவனின் ஒவ்வொரு முயற்சியும் நல்ல இருக்கு. அவன் கையை வெட்டி கொள்ள முயற்சிக்கும் போது, "DON'T BUY ANY TOOLS FROM CHINA"

அப்படி நு சொல்வான். மனச கஷ்டப்படுத்தினாலும் அந்த சிரிப்பு ஒரு ஆறுதல்.

இதழ் வறண்டு போக, தன் கையை கிழித்து சில துளி ரத்தத்தை ஒற்றி கொள்வான்.

அப்படி வாழ்ந்து என்னடா சாதிக்கப் போற என்று கேட்க தோணுது...

இசை நாம் சில படங்களில் கேட்டிருந்தாலும், அந்த ஊர் மக்களுக்கு அது புதுசு.. அதனால் இசை எ ஆர் ரஹ்மான் நம்ம ஊரு ராசா என மார் தட்டி கொள்ளலாம்.

NOMINATED FOR 6 ACADEMY AWARDS.

பார்க்காதவர்கள் தவற விடவேண்டாம் என்று சொல்ல மாட்டேன். வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பாருங்கள்.

Sunday, February 13, 2011

ஆகையால் அன்பு செய்

கண்டவுடன் காதல் என்பார் - சிலர்

காணாமலே காதல் என்பார்

காதலே உண்மையாகும் - அதில்

காமமும் கலந்திருந்தால்

காலத்தால் அழிந்த காதல் - பல

காலகாலமாய் கதையாய் உண்டு

லைலா மஜ்னு காதல் என்று

லயமாய் பேசி சிரிப்போர் உண்டு

ஹோர்மோன் செய்யும் வேலையினாலே

பேயாய் மனமே அலைந்திடுதே

காதல் இல்லையேல் உலகம் இல்லை -என

பொய்யாய் திரியும் மனிதர்களே

காதல் எனப்படும் மடமை ஒழித்து

அன்பை கொடுத்திட முற்படுவோம்

அன்பு என்பது அற்புதச் சொல்

அதற்கு சாதி மதங்கள் தேவை இல்லை

அன்பு என்பது சக்தி தரும் சொல்

அது மனிதன் மிருகம் பார்ப்பதில்லை

உலகம் இயங்குவது அன்பாலே

மனிதம் வளர்ப்போம் அதனாலே ..


ஆசை இல்லை.

விண்ணைத் தொட ஆசையில்லை
வட்டமிட ஆசையில்லை
கண்ணை பறிக்கும் வைரங்களை
பூட்டிக் கொள்ள ஆசையில்லை
பட்டு சேலை ஆசையில்லை
பருவ லீலை ஆசையில்லை
கட்டுக் கூந்தல் முடித்து அதில்
மல்லி சூட ஆசையில்லை
பாட்டுப் பாட ஆசையில்லை
ஆட்டம் போடா ஆசையில்லை
பஞ்சவர்ண ஆடை கட்டி
பவனி வர ஆசையில்லை
பிஞ்சு முகம் வாடுகையில்
வாரியணைக்க ஆசையில்லை
பஞ்சு மெத்தை இருந்தபின்னும்
படுத்துறங்க ஆசையில்லை
கருமேகம் பார்க்க ஆசையில்லை
கடும் குளிரில் நனைய ஆசையில்லை
எனை வாழ்த்தி பேச ஆசையில்லை
ஏட்டில் பதிய ஆசையில்லை
ஒரே ஒரு ஆசையுண்டு
கண் மூடி உறங்கையிலே
மரணம் தொட ஆசை உண்டு......

Tuesday, February 8, 2011

ஒரு கைம்பெண்ணின் சலனம்

சலனமற்று கிடந்த மனதில்
சல்லடையாய் உன் நினைவுகள்

பாரத்தை இறக்கி வைக்க
பார்கின்ற என் மனது

ஒப்பனையற்ற வார்த்தைகளால்
ஓர் வரியில் சொல்லிவிட்டாய்

கட்டுக் கடங்காமல் வருகிறது
கண்ணீர் மழை துளியாய்

மறுப்பு சொல்ல வழியில்லை
வெறுப்புக் காட்ட முடியவில்லை

கருத்தைச் சொல்லி விலகி இருந்தும்
எதிர்த்து நிற்கும் ஆசைகள்

மனத்தால் எண்ணம் ஒன்றினும்
மனிதனுக்கென்று ஒரு ஞாயம் உண்டு

தீயும் சுடும் என் தெரிந்தப் பின்னும்
தீயில் குளிப்பது நல்லதன்று

மனமெனும் குரங்கு வந்து போகும் -அதை
அடக்கி வைத்தல் நல்லதின்று

பேச வேண்டாம், பழக வேண்டாம்
ரசிக்க வேண்டாம் - ஆனாலும்
மறக்கவும் வேண்டாம்

உன் நினைவலைகள்
உரசிக் கொண்டு போகட்டும்

சலமற்று இருப்பது போல்
என் மனமே நடிக்கட்டும்

உன் மேனி தனை தொடும் காற்றில்
என் வாசனை தான் வந்திடுமே-அதில்
என் ஸ்பரிசத்தை உணர்ந்துவிடு
கனவினிலே என்னை தோடு .........

Monday, February 7, 2011

இரண்டு வெட்டப்பட்ட கைகளுடன் ஆரம்பமாகிறது படம். உண்மை நிகழ்வுகளை நேரிலே பார்த்தால் தோன்றும் கசப்பும் வலியும் ஏற்ப்படுத்தும் காட்சிகள். வயது வந்த பெண்களுக்கு நடந்து வரும் சீர்கேடுகளை அழகாக சொல்லும் கதை.
தனக்கு நடந்த அநீதிக்கு புகார் செய்ய போகும் குடும்பத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளும், நடுவர்க்க குடும்பத்தை சீண்டி பார்த்தால் என்னாகும் நிலை, அது தான் கதையின் கரு.
கதையின் நாயகன் ஜே கே (சேரன்) , வித்யாசமான கோணத்தில் தந்த மிஷ்கினுக்கே அந்த பெருமை போய் சேரும்.
கொடுத்த பாத்திரத்தை நிறைவாய் செய்திருக்கிறார் சேரன். உண்மையான ஜே கே (பிலோசொபர்) சொல்லியபடி யதார்த்தமாய் பார்கிறார் ஒவ்வொரு விஷயத்தையும்.
ஒரு நிகழ்வு, அவரவர் கோணங்களிலிருந்து எவ்வாறு மாறுபடும் என்பதையும் புரியவைக்கிறார் மிஷ்கின் . அது நாயகனின் பக்குவத்தையும், அனுபவத்தையும் சொல்லவைக்கிறது. .
ஜூதாஸ் (ஜெயப்ரகாஷ்) அவருக்கு ஒரு ஹாட்ஸ் ஆப் .. மனதிலே நிற்கும் ஒரு கதாபாத்திரம். பிண அறையில் பிணமாக வாழ்கையை ஓட்டுகிறார். அவருக்கேற்பட்ட சலிப்புகள், "இவ்வளவு தாண்டா வாழ்க்கை " என்று வலிக்காமல் ஊசியை ஏற்றுவது போல் உள்ளது. 'OBSERVER IS OBSERVED' , தத்துவஞானி ஜே கே யின் வரிகளிலிருந்து எடுத்தது, இங்கே அழகாக பொருந்தி உள்ளது . இப்படி ஒரு அறிவுப்பூர்வமான ஜூதாஸ் சை தந்த மிஷ்கினுக்கு வாழ்த்துக்கள்.
"கொஞ்சமா அறிவு இருக்கிற இவங்களே இவ்வளவு பண்ணா, நிறைய அறிவு இருக்கிற நம்மள ஒன்னும் பண்ண முடியாதா" என்கிற வசனம் பேஷ் .
ஒய் ஜி மகேந்திரன் மற்றும் லக்ஷ்மி, பிற்பாதியில் வந்தாலும் நல்ல அழுத்தமான கேரக்டர். அதிலும் லக்ஷ்மியை பார்க்கும் போது நமக்கே ஆக்ரோஷம் வருகிறது.
அவர்கள் தன்னுடைய மகளுக்கு இழைக்க பட்ட கொடுமை வேறு யாருக்கும் வரக் கூடாது என்பதை உயிர் விடும் தருணத்திலும் சுட்டிக் காட்டி இருப்பது அற்புதம்.
கதையோடு இணைந்து அழகாக செல்வதற்கு முக்கிய காரணம் இசையும் , போடோக்ராபி. சீட்டின் முனையில் உட்கார வைக்கிறது சில இடங்களில்.
கதையில் டூயட் இல்லை. அதுவே பிளஸ் பாயிண்ட்.
சஸ்பென்ஸ் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கப் படுகிறது. அதற்கு இன்னும் ஒரு பேஷ் போடலாம்.
அமீரின் குத்தாட்டமும் கூட ஆடும் இளம் கூட்டமும் அருமை.
எது எப்படி யானாலும் பணபலம் இருந்தால் என்னவெல்லாமோ செய்ய முடியும். அதை அடக்க ஒரு யுத்தம் தேவைப் படுகிறது. அதற்கான புனல் தான் "யுத்தம் செய்".
ஒட்டுமொத்தத்தில் அருமையான படம். கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.

Sunday, February 6, 2011

கனவு பூக்கள் மலர்கவே

கனவு சிலருக்கு

கலைந்துப் போகும்

கோலங்களாய்

சிலருக்கு மலர்ந்து

சிலிர்க்கவைக்கும் நினைவுகளாய்

சக்திதரும் இயக்கமாயிருப்பின்

கனவே நீ கலையாதே ...


ஒவ்வொரு ஜீவனிலும்

ஒட்டிக் கொண்டு

அனைவரையும்

ஆட்கொண்டுவிடு...

எம் தலைவர் செப்பியது போல்

எண்ணமாய் மாறிவிடு

விழித்துக் கொண்டு

கனவுக் காண்...


தோல்வி படிக்கட்டுகள்

ஏறக் கற்றுக் கொடுக்கும்

வெற்றி மாலைகள்

சூடக் காண் ...

போராடு... ...


Friday, February 4, 2011

புயலுக்கு அஞ்சி

கோரமாய் வீசும் காற்று

கலைந்த ஆடைகளை

சரி செய்ய முடியாமல்

தவிக்கும் மரங்கள்..

ஓடிப் பிடித்து வட்டமாய்

சுற்றி விளையாடும்

பேப்பர் குப்பைகள்..

ஓலமிட்டுத் திரியும்

ஒய்யாரப் பறவைகள்..

இப்பவோ.. அப்பவோ என

தரையைத் தொட ஆசைப்படும்

தென்னங் கிளைகள் ..

திக்குத் தெரியாமல்

தெருவோரம் ஓடும் நாய்கள்..

ஒதுங்க வழியின்றி

தாங்கி நடக்கும் பிச்சைக்காரி

தன் வாகனத்தைப் காப்பாற்ற

மூடிய கார்பார்கிங்கில்

காரை நிறுத்தும் ஓர் குடிமகன்..