Sunday, March 13, 2011

ஆகையால் அன்பு செய்

கண்டவுடன் காதல் என்பார் - சிலர்

காணாமலே காதல் என்பார்

காதலே உண்மையாகும் - அதில்

காமமும் கலந்திருந்தால்

காலத்தால் அழிந்த காதல் - பல

காலகாலமாய் கதையாய் உண்டு

லைலா மஜ்னு காதல் என்று

லயமாய் பேசி சிரிப்போர் உண்டு

ஹோர்மோன் செய்யும் வேலையினாலே

பேயாய் மனமே அலைந்திடுதே

காதல் இல்லையேல் உலகம் இல்லை -என

பொய்யாய் திரியும் மனிதர்களே Align Left

காதல் எனப்படும் மடமை ஒழித்து

அன்பை கொடுத்திட முற்படுவோம்

அன்பு என்பது அற்புதச் சொல்

அதற்கு சாதி மதங்கள் தேவை இல்லை

அன்பு என்பது சக்தி தரும் சொல்

அது மனிதன் மிருகம் பார்ப்பதில்லை

உலகம் இயங்குவது அன்பாலே

மனிதம் வளர்ப்போம் அதனாலே ..


No comments:

Post a Comment