Sunday, March 13, 2011

நினைவுகள்

உன் கண்களின் கருணையில்...

கனிந்த வார்தைகைளில்...

முத்தங்களின் எச்சிலில்

வழிகிறது துரோகம்.

'மழுப்பிப்' புன்னகைக்க

மனம் மறுக்கிறது ..

என் இயலாமையை

உன் கன்னத்தில் வளர்ந்த

முடிகளாய் நினைத்து

சவரமிட்டுவிட்டாய்

என் பார்வையிலும்

வார்த்தையிலும் சவரமிட்ட

கத்தியைப் போல்

கூர்மயில்லை போலும்

போகட்டும்

காலம் எனும் கடவுள்

புரியவைக்கும் ...

மறந்து போகட்டும்

உன் நினைவலைகள்

அலைகளால் அழிக்கப்பட்ட

காலடி சுவடுகளாய் .....

No comments:

Post a Comment