Tuesday, March 8, 2011

மகளிர் தினம்

ஒரு முகநூல் நண்பருக்கும் எனக்கும் நடந்த ஒரு உரையாடல் ..அதை இங்கு பகிர்ந்துள்ளேன்


என்ன இது ??????

by N Suresh Chennai on Tuesday, March 8, 2011 at 6:26pm
மகளிர் தினம் - என்றொரு நாளை கொண்டாட என்ன தேவை என்று உலகமகளிர் எல்லோரும் தீர்மானம் எடுக்கும் பொந்நாள் விரைவில் வர எனது பிரார்த்தனைகள்!!!


பெண்ணை அதிசயம் என்று கண்டு வியந்து வணங்கிய காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலம் தான் ஆண்களில் பலர் மனிதர்களாக இருந்திருப்பார்கள்.

நானும் அந்த காலத்தில் காட்டுமிராண்டியாக பிறந்திருக்கலாம்!

மகளிர் தினம் கொண்டாடும் கொடுமையை காணும் காலத்தில் நான் ஏன் பிற்ந்து வாழ்கிறேனோ!!!

பாசமிகு - அப்பா தம்பி அண்ணன் என இனிய உறவுகளை மறந்து பெண்ணியம் பேசும் சில சகோதரிகளோடு எனக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், தில்லி போன்ற நகரங்களில் பெண்களாள் பாதித்த ஆண்களின் அமைப்புகளைக் கண்ட வியப்புகள் என்னில் இருப்பினும்.... பெண்கள் வணக்கத்திற்கும் மரியாதைக்கும் உரியவர்களே!!!!

பெண் தெய்வங்களே உங்களை வணங்குகிறேன்!

அம்மா சித்தி தங்கை அக்கா பெரியம்மா அத்தை மாமி மனைவி நாத்தனார் மகள் என எல்லோரும் எல்லோருக்கும் வேண்டும்; ஆனால் பிறக்கும் குழந்தை மட்டும் "ஆண் குழந்தை போதும்| என்ற மடமையான ஆசை/எண்ணம் 100%

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இல்லாமல் இருக்கட்டும்! இவ்வுலகத்திற்கு நிச்சயம் கிடைக்கும் வெளிச்சம்!


நான் சொன்னது :
"நண்பரே பெண்களை தெய்வமாக வணங்குங்கள் என்று நாங்கள் கோரிக்கை விடுக்க வில்லை.
நாங்கள் மனித இனத்தை சேர்ந்தவர்கள், எங்களுக்கும் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கம் அவளாவே.
ம்ம்.. உண்மை..போதுமான அளவில் உரிமைகளும் பெற்றுவிட்டோம் என்பதில் ஐயமில்லை.... எவ்வளவோ ஆடவர்கள் செய்யும் அராஜகங்கள் உங்கள் கண்களில் தென்ப்பட்டும் ஏன் பெண்கள் மட்டும் "அப்படி செய்கிறார்கள் இப்படி செய்கிறார்கள்" என்று குறை கூறுகிறீர்கள். சம உரிமை என்பதென்ன ? எல்லாவற்றில்லும் தானே .. அதற்காக கீழ்போக்கு வழியில் செல்லும் பெண்களை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. ஆண்களுக்கான ஈகோ தழைத்தோங்கி நிற்கத்தான் செய்கிறது."

அவர் சொன்னது :
"லைக்ஸ் - இட்ட அனைவரும் தங்கள் கருத்துக்களையும் இடலாமே? ப்ளீஸ்.... ஏன் ஆண் பிள்ளைகளை இன்னமும்ம் ஏங்குகிறது இந்த சமூகம்? திருமணச்செலவாலா? பெண் பிள்ளைகள் தானே பாசத்தோடு இன்று பெற்றோர்களுக்கு சேவை செய்கிறார்கள்? பெண்கள் ஏன் வெறுக்கப்படவேண்டும்??? உங்கள் கருத்துக்களை தயவாக இடுங்கள். நான் புரிந்து கொள்ள் வேண்டும்.. இந்த களத்தில் உபயோகமான விவாதத்தை நாம் நடத்தி நமது கடமையை நிறைவேற்றுவோம் வாருங்க்ள்...ப்ளீஸ்... பெண்மையை மதிக்கும் நல்லோர்களின் கருத்துக்களை காத்திருக்கிறேன்.
வசுமதி - தாய் தந்தையர்களை முதியோர் இல்லங்களில் விட்டு விடும் கொடுமை மாறினால் கொஞ்சம் மனிதம் வருமோ? - என்று தோன்றுகிறது.

இந்த சமூகம் என்ன பெண்களுக்கு கொடுப்பது? நீங்கள் எடுத்தக் கொள்ள வேண்டிய உரிமைகளை இனி பறிக்க வருபவர் யார்???

பெண்களுக்கு இன்னமும் முழுமையாக கல்வியும் சட்டம் சம்பந்தப்பட்ட விழுப்புணர்வும் இதற்கொரு வழி வகுக்குமா?"

நான் சொன்னது:
"பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடும் அவலம் சுயநலம் குறைந்தால் தான் முற்றுப் பெரும்.
யாரும், யாவரும், எதுவும் எதையும் தடுத்திடவில்லை. ஆதிகாலத்தில் பெண்கள் தானே சௌகர்யமாய் கூடாரத்தில் புகுந்துக் கொண்டார்கள். அதற்கு அவர்கள் உடல் ரீதியாக வரும் இயற்க்கை உபத்திரவங்களும் ஒரு காரணம். கூடாரத்தைப் பாதுக்காக்கும் ஆண்கள். அதுவே காலப்போக்கில் வழக்கமாகி விட்டது. பின்பு அதை கூடாரத்தை விட்டு வெளியே வர போராட்டம் நட்த்தவேண்டியதாகி விட்டது. அதற்கு முட்டுக்கட்டையாய் நின்றது ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான்.
என்ன படித்து, என்ன பயன்? வாழ்க்கை என்பதென்ன என்ற தெளிவு பிறக்கும் வரை ஒன்றும் நடவாது.
பெண்களும் ஆண்களும் ஒரே
உயிரினம் .....அது புரியவேண்டும் முதலில்."
அவர் சொன்னது :
"வசுமதியின் எழுத்தில் காணும் வீச்சு எனக்கு பிடித்திருக்கிறது, வாழ்த்துக்கள். மனித இனத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் இவர்களில் பெண்கள் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள் என்று உணர உலகின் ஏதாவது ஒரு பெண்ணின் சுயசரிதம் வாசித்தால்/அறிந்தால்/கேட்டால் போதும்!!!
அன்பினிய தோழி வசுமதி, உங்கள் எழுத்துக்களால் இன்றைய பெண்களின் நிலமை முன்னேற தொடர்ந்து எழுத உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்! இறைவன் உங்களை தொடர்ந்து ஆசீர்வதிக்கட்டும்! நிச்சயம் ஒரு நாள் இந்த சமூகம் உங்கள் எண்ணங்களையும் எழுத்துக்களையும் போற்றும், மதித்து செயலாற்றும் என்று உறுதியாக நம்புகிறேன். வெற்றி நிச்சயம்!"


No comments:

Post a Comment