Monday, February 28, 2011

முடிவு

துணிவற்று போன நிமிடம்
துயரம் வந்து சூழ்ந்துக் கொண்டிருக்க
நாக்கு வறண்டு
சுவாசப்பை இறுக ஆரம்பித்தது
விடியலை தந்திடுமோ
வாழ்க்கை இருண்டிடுமோ என்று
முடிவுக்காக காத்திருக்கும் அந்நொடி
வயிற்றை பட்டினிப் போட்டு
மூளையை மெருகேற்றினேன்
மதிப்பெண்களுக்கே
மதிப்பு என்றானப்பின்
மன உருவுக்கு ஏது மதிப்பு
ஒற்றை வரி விடாமல் படித்து
தேர்வுத் தாளில் வாந்தி எடுத்ததுப் போக
மீதமானது குழப்பம் மட்டுமே ..

No comments:

Post a Comment