Sunday, February 13, 2011

ஆசை இல்லை.

விண்ணைத் தொட ஆசையில்லை
வட்டமிட ஆசையில்லை
கண்ணை பறிக்கும் வைரங்களை
பூட்டிக் கொள்ள ஆசையில்லை
பட்டு சேலை ஆசையில்லை
பருவ லீலை ஆசையில்லை
கட்டுக் கூந்தல் முடித்து அதில்
மல்லி சூட ஆசையில்லை
பாட்டுப் பாட ஆசையில்லை
ஆட்டம் போடா ஆசையில்லை
பஞ்சவர்ண ஆடை கட்டி
பவனி வர ஆசையில்லை
பிஞ்சு முகம் வாடுகையில்
வாரியணைக்க ஆசையில்லை
பஞ்சு மெத்தை இருந்தபின்னும்
படுத்துறங்க ஆசையில்லை
கருமேகம் பார்க்க ஆசையில்லை
கடும் குளிரில் நனைய ஆசையில்லை
எனை வாழ்த்தி பேச ஆசையில்லை
ஏட்டில் பதிய ஆசையில்லை
ஒரே ஒரு ஆசையுண்டு
கண் மூடி உறங்கையிலே
மரணம் தொட ஆசை உண்டு......

No comments:

Post a Comment