Sunday, February 13, 2011

ஆகையால் அன்பு செய்

கண்டவுடன் காதல் என்பார் - சிலர்

காணாமலே காதல் என்பார்

காதலே உண்மையாகும் - அதில்

காமமும் கலந்திருந்தால்

காலத்தால் அழிந்த காதல் - பல

காலகாலமாய் கதையாய் உண்டு

லைலா மஜ்னு காதல் என்று

லயமாய் பேசி சிரிப்போர் உண்டு

ஹோர்மோன் செய்யும் வேலையினாலே

பேயாய் மனமே அலைந்திடுதே

காதல் இல்லையேல் உலகம் இல்லை -என

பொய்யாய் திரியும் மனிதர்களே

காதல் எனப்படும் மடமை ஒழித்து

அன்பை கொடுத்திட முற்படுவோம்

அன்பு என்பது அற்புதச் சொல்

அதற்கு சாதி மதங்கள் தேவை இல்லை

அன்பு என்பது சக்தி தரும் சொல்

அது மனிதன் மிருகம் பார்ப்பதில்லை

உலகம் இயங்குவது அன்பாலே

மனிதம் வளர்ப்போம் அதனாலே ..


No comments:

Post a Comment