Sunday, February 6, 2011

கனவு பூக்கள் மலர்கவே

கனவு சிலருக்கு

கலைந்துப் போகும்

கோலங்களாய்

சிலருக்கு மலர்ந்து

சிலிர்க்கவைக்கும் நினைவுகளாய்

சக்திதரும் இயக்கமாயிருப்பின்

கனவே நீ கலையாதே ...


ஒவ்வொரு ஜீவனிலும்

ஒட்டிக் கொண்டு

அனைவரையும்

ஆட்கொண்டுவிடு...

எம் தலைவர் செப்பியது போல்

எண்ணமாய் மாறிவிடு

விழித்துக் கொண்டு

கனவுக் காண்...


தோல்வி படிக்கட்டுகள்

ஏறக் கற்றுக் கொடுக்கும்

வெற்றி மாலைகள்

சூடக் காண் ...

போராடு... ...


No comments:

Post a Comment