Friday, February 4, 2011

புயலுக்கு அஞ்சி

கோரமாய் வீசும் காற்று

கலைந்த ஆடைகளை

சரி செய்ய முடியாமல்

தவிக்கும் மரங்கள்..

ஓடிப் பிடித்து வட்டமாய்

சுற்றி விளையாடும்

பேப்பர் குப்பைகள்..

ஓலமிட்டுத் திரியும்

ஒய்யாரப் பறவைகள்..

இப்பவோ.. அப்பவோ என

தரையைத் தொட ஆசைப்படும்

தென்னங் கிளைகள் ..

திக்குத் தெரியாமல்

தெருவோரம் ஓடும் நாய்கள்..

ஒதுங்க வழியின்றி

தாங்கி நடக்கும் பிச்சைக்காரி

தன் வாகனத்தைப் காப்பாற்ற

மூடிய கார்பார்கிங்கில்

காரை நிறுத்தும் ஓர் குடிமகன்..


No comments:

Post a Comment