Monday, March 14, 2011

கரம் பிடிக்க

சாலையை கடக்கும் போது
முதல் முதலாய்
பற்றிய உன் கரங்கள் ..
வண்ணத்துப் பூச்சிகள்
நெஞ்சுக்குள் படபடக்கும்
ஓர் உணர்வு ...
நீண்டுப் போகாதோ என
வேண்டுகிறேன் - உன்
கரங்கள் எனை விடாமலிருக்க ..

1 comment:

  1. வசுமதி
    நல்லா இருக்கு. உங்கள் கவிதையை படிக்கும் போது, காதல் உணர்வு இன்னும் கூடுகிறது .
    என் எண்ணம்: காதல் செய்பவர்களுக்கும் காதல் செய்து விட்டவர்களும் கவிதையை சந்தோசமாய் சொல்கிறார்கள் . கிடைக்கப் பெறாதவர்கள் , ஆசைப் படுகிறவர்கள் , செத்து விட்ட காதலை இன்னும் நம்பிக்கையோடு பத்திரமாய் மனசுக்குள் பூட்டியவர்கள் சத்தமாய் சொல்ல தயங்குகிறார்கள் . ஏன் ? நான் காதல் என்று சொல்வது கணவனிடத்தில் காணும் காதலையும் தான் ...


    உன் வார்த்தைகள் மென்மையான போது உன் ஸ்பரிசங்களின் வன்மை தெரியவில்லை, இப்போதோ வார்த்தைகளின் வன்மையால் உன் மெல்லிய தீண்டல் கூட பாரமாய் வலிக்கிறது.

    ReplyDelete