Thursday, January 26, 2012

நண்பன் - எனது பார்வையில்

நண்பன்....
ஏற்கனவே நிறைய பேர் ஹிந்தி யில் பார்த்திருப்பீர்கள்.. திரும்ப தமிழில் என்ன நம்ம ஷங்கர் சார் சொல்லியிருப்பார் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் ., அதே காரணம் தான் எனக்கும்...சென்று பார்த்தேன்.. ஒரு வித்யாசமும் இல்லை. அதே அதே.... ஆனால் தமிழில்...ரீமேக் செய்து பணம் விரயம் செய்ததற்கு பதில் டப் செய்திருக்கலாம்.
சரி படம் பார்க்காதவர்களுக்கு ஒரு கதை முன்னோட்டம்.... இதோ...........
பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வெங்கட் ராமகிருஷ்ணன் (ஸ்ரீகாந்த்) , சேவற்கொடி செந்தில் (ஜீவா) , பஞ்சவன் பாரிவேந்தன்(விஜய்) . கூட படிக்கும் இன்னொரு வகுப்பினன் ஸ்ரீவத்சன் (சத்யன்). இவர்களது கல்லூரி நிர்வாகியாக விருமாண்டி "வைரஸ் சந்தானம் . துண்டு மீசை தான் இல்லை... அப்படியே ஹிட்லர் ரின் பிரதிபலிப்பு.
மிகுந்த புத்திசாலி என்று தன்னை தானே மார் தட்டிக் கொள்ளும் கேரக்டர்.
மார்க் ஒன்றே ஒரு மாணவன் வாழ்கையை தீர்மானிக்கும் என்று கூறி கஷ்டப் படுத்தும் மாணவர்களை , எதையும் விரும்பி செய்தால் தானாக நடக்கும் என்ற புது என்னத்தை உருவாக்கும் நமது ஹீரோ. நான்கு வருட கல்லூரி வாழ்க்கையில் அடிக்கும் லூட்டிகளும், ஏமாற்றங்களும், வெற்றிகளும் தோல்விகளும் எடுத்து சொல்லும் கதை.
வெங்கட் கு(ஸ்ரீகாந்த்) வைல்ட் லைப் போடோக்ராபர் ஆகவேண்டும் என்று ஆசை . தந்தையின் ஆசையை நிறைவேற்ற வந்து சேர்ந்து படிக்கிறார். செந்தில் (ஜீவா) வுக்கு வாழ்கையே பயம். சின்ன வயதிலிருந்தே தன் குடும்ப பாரத்தை நினைத்து பயம்..... பாரி கு (விஜய்)எந்த வித கவலையும் இல்லை. .. அவரே முதலாக வருகிறார் (ஹீரோ ஆயிற்றே) ...
சத்யன் எபோதும் இவர்களை இன்சுல்ட் செய்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர்க்கு புத்தி புகட்ட ஆசிரியர் தினம் அன்று மேடைபெச்சுக் காக தயார் செய்திருக்கும் கட்டுரையை கொஞ்சம் மாற்றி எழுதுகிறார் பாரி. அதுவே சவாலை முடிகிறது.. கடைசியில் வெங்கட் போடோக்ராபர் ஆகிறார? செந்தில் படித்து முடித்து வேலை கிடக்கிறதா ? நம்ம பாரி என்ன ஆகிறார் என்பது தான் கதை.
மேடை பேச்சு ...குலுங்க குலுங்க சிரிக்க வைத்தாலும்.... ஆங்கங்கே நெளிய வைக்கிறது... "கற்பழிப்பு"என்ற வார்த்தைகளை பிள்ளைகள் தமிழ் அகராதியில் தேடாமல் இருந்தால் சரி.
ஷங்கர் சார் கதை யை காப்பி அடித்தார் சரி... ஹிந்தி படத்தில் வரும் கேரக்டர்களின் பாடி லாங்குவேஜ் சையும் காப்பி அடிக்கவேண்டுமா என்ன ? அதற்க்கு பெயரையும் மாற்றாமல் இருந்திருக்கலாமே?
கதையின் நாயகி ரியா ( இலியான ) பாட்டுக்காகவும் , நம்ம ஹீரோ வுக்கு ஜோடி அவளாவே... இருபினும் அவர் பேசும் தமிழ் கதிர்க்கு கொஞ்சம் குளிர்ச்சி தான்.. (தமிழ் பேசும் பெண்களே தமிழ் ஒழுங்காக பேசுவதில்லை ).
இசை: ஹாரிஸ் ஜெயராஜ் . இரண்டு பாடல்கள் கேட்க்கும் படியாக இருக்கிறது.... " என் பிரெண்ட் அ போல யாரு மச்சான்" , " அஸ்கா லஸ்க " நல்ல இருக்கு.
அது என்ன கடைசியில் விஜயின் உண்மையான பெயர் இப்படி இருக்கிறது என்பது புலப் படவில்லை " கொசாக்கி "பாப்பு " பசப்புகழ்". கதையில் ட்விஸ்ட் இருக்கும் சரி.. பெயரிலேயே ட்விஸ்ட் ஆ ?
எது எப்படியோ..... ரெண்டே முக்கால் மணி நேரம் சுபராக செல்லும் ஒரு ஜாலியான படம்

No comments:

Post a Comment