Monday, January 2, 2012

மனதின் ரீங்காரம்

கூடிநின்ற ஒவ்வொரு தருணமும்
பேசிக்கொண்டிருக்க தோன்றிற்று
வெறுமனே வார்த்தைகளால் மட்டுமல்ல
மனதாலும் கண்களாலும் ..
சொல்லாது போன வார்த்தைகள்
இன்னும் தேங்கிக் கிடக்கிறது
அலைகழித்தபடி கடக்கின்றேன்
தென்னங்கீற்றினூடே நுழைந்த காற்றின்
எழுந்தும் ஓசை போல
எதோ ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்
என் மனது - அதனால்
வெளிவராமல் இருப்பது வார்த்தைகள்
மட்டுமல்ல என் வாழ்க்கையும் தான்

1 comment: